Wednesday, December 21, 2011

வாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு உண்டா?


Valakkaivaruvalவாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு.  ஆகையினால் வாழைக்காயை உண்ண வேண்டாம் என்று பெரியவர்கள் கூறுவர்கள். ஆனால் மாமுனிவர்கள் அப்படிக் கூறுகின்றர்களா?
அது தான் இல்லை. வாழைக் காயை நன்றாகச் சாப்பிடு. அப்படிச் சாப்பிட்டால் - உனக்குப் பித்தத்தினால் ஏற்படக் கூடிய வாந்தியானது நின்று போகும். மனக்கவலை அதிகமாகி தன் நிலைமறக்கச் செய்யும் சித்தப் பிரமை என்ற நோய் தீரும். பித்தத்தினால் ஏற்பட்ட காய்ச்சல் அகன்று விடும்.

எந்நேரமும் வாயில் உமிழ்நீர் எனப்படும் எச்சில் சுரந்து கொண்டே இருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி உன்னை மனங்களிக்கச் செய்யும். வயிறானது கடமுடாவென்று இரைந்து மிகத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறதா? இந்த வாழைக்காயை சாப்பிடு எல்லாம் தீர்ந்து போகும்.

ஊடம்பெல்லாம் அனல் போல் கொதிக்கின்றது என்று உன் உடலின் மேல் தற்செயலாகக் கை வைத்த மற்றவர்கள் சொல்கிறர்களா?

லொக்கு லொக்கு என்று இருமி மற்றவர்களுக்கு தொந்தரவையும் எரிச்சலையும் கொடுத்து இரவிலும் தூக்கமின்றிச் சிரமப்படுகிறாயா?  உனக்கு வாழைக்காய் தான் சரி.

என் உடம்பில் இரத்தமே இல்லை. கை, கால் எல்லாம் வெளுத்துப போய் விட்டது. ஏன் கண்களைப் பார். இரத்தமில்லாத என்னுடைய நிலைமை உனக்கு புரியும் என்று புலம்புகின்றாயா? உன் புலம்பலை நிறுத்தி வாழைக்காயை சாப்பிடு.அப்புறம் பார் ஆச்சார்ப்படுவாய்.

குடலுள் பசியற்ற தன்மை இருக்கிறதா? எவ்வளவு நல்ல ஆகாரத்தை எதிரே வைத்தாலும் வேண்டாம் போன்ற ஒரு வெறுப்புத் தோன்றுகின்றதல்லவா? ஆகாரத்தின் மேல் பிரியமற்ற நிலைமை இருக்கிறதல்லவா?

அதனை மாற்றி உணவை கண்டோர் வியக்கும் வண்ணம் உள்ளே தள்ளச் செய்யும் சக்தி இந்த வாழைக்காய்க்கே உண்டு.

இப்படிப்பட்ட வாழைக்காயை இனிமேலாவது உணவில் சேர்த்துக் கொள்வதற்குத் தயங்காதீர்கள்.  சரி தானே நம்ப மாட்டீர்களா நான் சொன்னதை.

வாந்தி  பித்தம் பேதி வாய்நீர் வயிறுளைத்
லார்நதவன லங்காத மண்டாவாஞ் சூழ்ந்தேறு
செம்புனலுந் தென்புமுண்டாந் திண்டி மிகப்பெருகு
மம்புவியுள் வாழைக்கா யால்.
Download As PDF

No comments:

Post a Comment