Sunday, May 12, 2013

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.


ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.


நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.


எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.


வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF

சில சம்பர்தாயமும் அதன் உண்மை விளக்கமும்


பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?
Photo: பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

புதுவீட்டில் குடியேறும்போது கோபூஜை செய்வது வழக்கம். 
இதனால் மனம் மகிழ்ந்து லட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். பசுவை வணங்கும்போது, வாசனை மலர்கள், பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து, புல், கீரை, பழங்கள் கொடுத்து பசுவை உண்ணச் செய்யவேண்டும். மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். முன்னோர் சாபம், பிதுர்தோஷம் கோபூஜையால் நீங்கும். அனாவசிய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். ஆபரணங்கள், ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். அட்சயதிரிதியை நன்னாளில் லட்சுமியின் அம்சமான பசுவை வணங்குவது செல்வத்தை வாரி வழங்கும்.
Download As PDF

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்



Photo: ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார் 

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். 

அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். 

அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். 

அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

13.05.2013 அன்று அட்சய திருதியை 

நிரஞ்சனா
விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். 

அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். 

அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். 

அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF

இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

முற்குறிப்பு:
இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

தடுப்பது நம்மால் முடியும்.
கொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.

Photo: முற்குறிப்பு:

இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

தடுப்பது நம்மால் முடியும்.
கொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.
___________________________________________

சிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.

குழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.

இரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.

இது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.
அதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.

மருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே. 

இதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:

எப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.

அது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம். 
. 
ஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.

பிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).

அது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.

அந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.

இது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது. 
இருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.

திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்: 

முதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள். 

அதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும் அவ்வாறுதான் இருக்கிறது.

வாழ்க்கையை ரசிக்க வேண்டும்தான்.
ஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.


from   Yesses Bee's
___________________________________________

சிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.

குழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.

இரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.

இது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.
அதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.


மருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே.

இதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:

எப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.

அது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம்.
.
ஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.

பிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).

அது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.

அந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.

இது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது.
இருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.


திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்: 
முதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள்.

அதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும்
அவ்வாறுதான் இருக்கிறது.

வாழ்க்கையை ரசிக்க வேண்டும்தான்.
ஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF