Sunday, March 30, 2014

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....
என்னுள்ளே நிகழும் குழப்பம் -2;

* இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஏதாவது ஒரு விசயத்தில் தினமும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்,,,
* ஏன் நமக்கு மட்டும் இப்படி ஏற்படுகிறது என்ற ஒரு கேள்வி கணைகள் நமக்குள்ளே !
* உதாரணமாக ; ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறை ஏற்க்க நமது மனம் மறுக்கிறது .
* இதற்க்கு காரணம் ;
  பிறர் முன்பு நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற என்னமா ?
  இல்லை மனக்குழப்பமா ?
  பொறாமை குணமா ?
* யார் எப்படி போனால் என்ன நாம் மட்டும் நமது குடும்பத்தாருடன் உயர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற சுயநல என்னமா?
   இல்லை கையாலாகாத தனமோ!
* இப்படி புரியாத புதிர்க்கெல்லாம் மனிதன் வைத்த பெயர்தான் கடவுள் ,,,,
* நமக்கு ஏற்படுகின்ற இந்த குழப்பத்திற்கு தீர்வு நம்மிடைமே உள்ளது ..
* இதனை புரிந்துகொள்ள தானோ கடவுளை நாடுகிறது நமது மனம் ,,
எது எப்படியோ ! நமது கஷ்டமான சந்தர்ப்பங்களில் நமது மனதிற்கு தேவையான ஆறுதல் கிடைத்தால் சரி .....

      சிவசுகு ,,,
Download As PDF

Thursday, March 13, 2014

கண்ணாடி


கண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி



சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.
Download As PDF