Wednesday, November 23, 2011

ஹைக்கு கவிதைகள்



மரம்


திருமணத்திற்கு   வாழை 
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு 
தொட்டில் முதல் 
சுடுகாடு வரை மரம் 
வாழ்ந்தால் நிழல் 
வீழ்ந்தால் விறகு மரம் 
வெட்டும் வில்லனுக்கும் 
நிழல் தந்தது மரம் 
இயற்கையின் விசித்திரம்  
சிறிய விதை 
பெரிய விருட்சமானது.


புன்னகை


புன்னகை செய்வதற்கு 
மட்டுமே உங்கள் இதழ்களை 
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம் 
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.



ஆன்மா

வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்
பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்
தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்.

வாழ்க்கை


விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று...
அரசியல்வாதிகள்: 
ஆயிரம் பாம்புகளிடம் சிக்கிய 
தவளை போல 
அரசியல்வாதிகளிடம் மக்கள். 
நன்ற lankasri கவிதை இனைய தளம் 
Download As PDF

No comments:

Post a Comment