Tuesday, November 29, 2011

உனது தேவை சுயநம்பிக்கை

 ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறுப்பதையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பூஜிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

* மனதுக்கு பிடித்த வேலையை செய்ய மூடனாலும் முடியும், எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்ததாகச் செய்பவன் அறிவாளி.
* பிறர் நலனுக்காகச் சிறிது பணி செய்தாலும் உனக்குள் உள்ள சக்தி விழித்துக் கொள்ளும். பிறருக்காக சிறிது சிந்தித்தாலும், உன் உள்ளத்தில் சிங்கத்தின் பலம் வந்து சேரும்.
* பணத்தால் எதுவும் ஆவதில்லை, பெயரால், புகழால், கல்வியால் எதுவும் ஆவதில்லை, அன்பால் அனைத்தும் நிறைவேறும்.

* எவரையும் "நீ கெட்டவன்' என்று சொல்லாதே, "நீ நல்லவன் தான், இன்னும் நல்லவனாக ஆகு' என்று தான் கூற வேண்டும்.
* உன்னை நீயே வெறுக்காமலிருப்பது தான் முதற் கடமையாகும். முன்னேற்றமடைய முதலில் சுயநம்பிக்கை அவசியம் தேவை.
- விவேகானந்தர் 
Download As PDF

No comments:

Post a Comment