Friday, November 15, 2013

தமிழரின் நம்பிக்கைகள்

நம்பிக்கைகள் : 
வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல், நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல், கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில் நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு, வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள் துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல், சனிக்கிழமைகளில் யாராவது இறந்துவிட்டால், 'சனிப்பிணம் துணை தேடும்' என்று பாடையில் ஒரு கோழியைக் கட்டிச் சென்று பிணத்துடன் புதைத்தல் முதலியன சில நம்பிக்கைகள். 
Download As PDF

No comments:

Post a Comment