Sunday, July 24, 2011

என் அம்மா


மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"
குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்

"
எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
"
சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''
Download As PDF

No comments:

Post a Comment