கல்வி முடித்து விட்டு ,வேலை தேடி தேடி அலைந்தேன்...
நான் திறந்த கதவு எல்லாம் ,வேலை வேண்டும் என்றவுடன்?
கதவுகள் தானாக மூட பட்டன . . . மூடியது ஒரு இளைஞனின் வாழ்க்கையை மட்டும் அல்ல
அவனின் கனவு , இலட்சியம் , உழைப்பு ,எதிர்காலம் , குடும்பங்களின் ஏழ்மை.
ஒவொரு மனிதனையும் சுழற்றி அடிக்கும் ஒரு களம் இந்த வேலை இன்மை .
போராடி போராடி கீழே விழ! மனதிலும் ,உடலிலும் காயங்கள் தான் மிஞ்சியது .
நண்பர்களின் ஊக்கமும் ,உற்சாகமும் கீழே விழும்போது மருந்தாய் மாறியது .
வேலை தேடி அலையும் போது பசி கூட நம்மை சீண்டி பாக்கும்.
குடிக்க தண்ணீர் தேடி அலையும் அவலம்,வேலை கொடுக்க மனம் இருந்தும்
சம்பளம் கொடுக்க மனம் இல்லை (முதலாளிகளுக்கே உள்ள நல்ல குணம்) .
கிடைத்த வேலையே காப்பாற்றி கொள்ளவே காலம் ஓடி போச்சு.
சாதிக்க உடலும் மனமும் இருந்தும் ,நம்மை ஒரு கைதி போல் ஆக்கி விடுகின்றன.
முதலாளி சொல்வதை தவிர வேறு செய்ய இயலாது ,முதலாளிகள் ஆட்டி வைக்கும்
விளையாட்டு பொம்மைகள் நாம், கீழே விழுந்தாலும் முதலாளிக்கு எந்த பாதிப்பும் இருக்காது .
இந்த ஏற்ற தாழ்வு நம் நாட்டில் மட்டும் இல்லை இந்த உலக வரைபடத்தின்
எந்த மூலையிலும் உண்டு .ஒவொரு இளைஞனும் ஒரு காலத்தில் முதலாளிகளே!
நாம் அனுபவித்த கொடுமைகள் நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் . . .
புதிய இளைய சமுதாயத்திற்கு வழி காட்டுவோம் . முதலாளித்துவ ஆதிக்கத்தை ஒழிப்போம்.
நம் நாட்டை உலக அரங்கில் முன்னிருதுவோம். . .
வாழ்க இந்தியா. . .
No comments:
Post a Comment