Sunday, January 29, 2012

உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்




தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.

BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே

“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”

ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:

சென்னை வாடிக்கையாளர்கள்- Choose Your Mobile Numbers

தமிழ்நாட்டின் இதர பகுதியினர் - Choose Your Mobile Numbers

இதர மாநிலத்தில் வசித்தால் – Choose Your Mobile Number


நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.

அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.

அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.

இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:

NLIST <Space> Circle Code <space>1-5 digits

Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் – 53734, மற்ற வாடிக்கையாளர்கள் – 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.

Download As PDF

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்




1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Download As PDF

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி....."

மனதின் ஆரோக்கியம் நம்மிடம் தான் உள்ளது , நமது சோர்வை நாமே தீர்த்துக்கொள்ளலாம். 


உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது. 
சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும்.

“மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! 

ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது.

கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ பரபரப்பாக நடைபழகி வருவது நல்லதென்கிறார்கள்.


நம்மில் பலருக்கு இயற்கையோடு செலவிட நேரம் இருப்பதில்லை. நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானது இயற்கை. அத்தகைய இயற்கைச் சூழலில் உலவுகிற நேரங்களில் எல்லாம் உள்ளத்தில் உற்சாகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொள்கிறது.

மலைவாச ஸ்தலங்களுக்கோ, இயற்கையின் ஆளுமை நிறைந்த இடங்களுக்கோ சென்று வர, விடுமுறைக் காலம் பயன்பட வேண்டும்.

அடுத்ததாக, நமக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை முக்கிய மில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, நெருக்கமான நம்பகமான நண்பர்கள் இருக்கிறார்களா என்பதே முக்கியம்.

அவர்களோடு மனம்விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரிக்கும் போது சோர்வு நம்மை விட்டு நீங்குகிறது. சிரிப்பின்போது சத்தம் மட்டுமா வருகிறது?

இருதயத்துக்கும் மூளைக்கும் ரத்தம் பாய்கிறது. தசைகளின் இறுக்கம் குறைகிறது. மனதுக்குள் உற்சாகம் மலர்கிறது.

மனச்சோர்வு அகல இன்னொரு வழியும் இருக்கிறது, உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்றார் கவியரசு கண்ணதாசன்.

நமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில் மட்டும் மனச்சோர்வு அகல்வதில்லை. அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது, நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் என்கிற எண்ணம் பிறக்கிறது. 


அதாவது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாக நமக்கு நாமே உதவி கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். மற்றவர்களுக்குப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.
 
Download As PDF

Wednesday, January 18, 2012

குத்துவிளக்கில் எத்தனை முகம், யாரை எப்படி வணங்க வேண்டும்


குத்துவிளக்கில் எத்தனை முகம்

1. குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்- மத்திம பலன்
2. இருமுகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை
3. மும்முகம் ஏற்றினால்- புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.
4. நான்கு முகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை
5. ஐந்து முகம் ஏற்றினால்- சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லட்சுமி கடாட்சம் ஆகியவை பெருகும்.



யாரை எப்படி வணங்க வேண்டும் 
* இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.
 
* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
Download As PDF

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்

 
"பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது''
 
"அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்''.
 
இப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந்தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து வரும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் தமிழக நாட்டுப்புற மருத்துவம் மிகவும் புகழ்மிக்கது. 
 
அனுபவத்தின் மூலமாக கற்ற மருத்துவ முறைகளை, பரம்பரையாகப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவமாகும். இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்திய மக்களின் பட்டறிவிலிருந்து தோன்றியது அது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, நாட்டுப்புற மருத்துவமும் தோன்றியிருக்கக் கூடும்.
 
இயற்கை மூலிகைகளின் வளம் அறியப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இன்றளவும் புழக்கத்தில் இருப்பது அந்த மருத்துவமுறைக்கு கிடைத்த வெற்றியே. நாட்டுப்புற மருத்துவத்தை இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம், மந்திர மருத்துவம் என்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 
 
இயற்கைப் பொருட்களை மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்வது இயற்கை மருத்துவமாகும். குறிப்பாக மருந்தாக உட்கொள்வதைவிட உணவாகவே உட்கொள்ளப்படுவது இந்த மருத்துவ முறையின் சிறப்பு. கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, வெந்தயம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியே.
 
பாட்டி வைத்தியம், கை வைத்தியம், கைமருந்து என்று சொல்லப்படும் வைத்தியமும் இயற்கை வைத்திய முறையே. பெரியோர் சொல்ல இளையோர் கேட்டுப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அதிகமான எழுத்து சான்றுகள் கிடையாது. பல கிராமங்களில் இன்றும் கூட கைமருந்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரை அணுகும் வழக்கம் உள்ளது.  
 
குழந்தைகளுக்கான பெரும்பாலான நோய்கள் கைமருத்துவத்திலேயே குணப்படுத்தப்படுகின்றன. தாய்ப்பாலின் மகத்துவமறிந்து மருந்துகளை தாய்ப்பாலில் கலந்துகொடுக்கும் வழக்கம் பழங்காலம் தொட்டே இம்மருத்துவ முறையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், ஜீரணக் கோளாறு போன்றவற்றுக்கு எளிதான மருத்துவ முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளன.
 
பெரியவர்களுக்கான நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. உணவுமுறை, தட்ப-வெப்பமாற்றம், சூழல் மாசு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையே நோய்க்கு காரணம் என வரையறுக்கிறது இயற்கை மருத்துவம்.   மனிதனுக்கு வெப்பத்தினாலும், குளிர்ச்சியினாலும் ஏற்படும் நோய்கள் ஏராளம்.
 
அதற்கேற்ப வெப்ப நோய்களுக்கு குளிர்ச்சியான மருந்தும் (சூட்டை தணிக்க மோர் குடிப்பது), குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு சூடான மருந்தும் கொடுப்பது (சளிக்கு ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. உடல் வலிகளுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் உள்ளன.
 
தலைவலி, பல்வலி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கபம், இருமல், வாதம், மூலம், கால் வீக்கம், மஞ்சள் காமாலை, இளநரை என சகல வித நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் மருந்து உண்டு. காடு, இயற்கை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் என்பதால் விஷக்கடிகளுக்கு சிறப்பு மருந்துகளும் நிறைய உண்டு.   இயற்கை மருத்துவத்தில் மூலிகை இணைந்த மருத்துவ முறை சித்த மருத்துவமாக கருதப்படுகிறது.
 
இது தமிழ் மருத்துவம் என்றே வழங்கப்படுகிறது. எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சிக்கனமான, பக்க விளைவுகளற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பது இதன் சிறப்பு. சித்தர்களான முன்னோர் அருளிய மருத்துவமே சித்தமருத்துவம் எனப்படுகிறது. `உடம்பால் அழியின் உயிரால் அழிவர்` என்று பாடிய திருமூலர் உள்ளிட்ட 18 சித்தர்கள், சித்த மருத்துவ முறைகளை பாடல் வடிவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
 
இவை நோய்க் காரணங்களை தெளிவாக விளக்குவதோடு சாதாரண மக்களாலும் பின்பற்றத்தக்க எளிய மருத்துவ சிகிச்சையை தீர்வாகத் தருகிறது.   நாட்டுப்புற மருத்துவ முறையில் மந்திரமருத்துவமும் ஒன்று. பழங்கால மனிதனின் மனரீதியான அச்சத்தைப் போக்கவும், இயற்கையைக் கட்டுப்படுத்தி பயன்பெறவும் உருவாக்கியதே மந்திர மருத்துவமாகும்.
 
மருத்துவம் இல்லாத நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தை நாடுவது வழக்கமாக இருக்கிறது. தெய்வக்குற்றம், தீய ஆவிகளின் செயல், செய்வினை, பில்லிசூனியம், முன்னோர் செய்த பாவம் ஆகியவையே நோய்க்காரணம் என்கிறது மந்திர மருத்துவம். கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், திருநீறு போடுதல், மந்திரித்தல் முறைகளில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
 
இது முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பதால் உளவியல் மாற்றங்களிலேயே இதன் பயன்பாடு இருக்கிறது.   மருத்துவர், மருத்துவச்சி, நாட்டு வைத்தியர் போன்ற பெயர்களில் நாட்டுப்புற மருத்துவர்கள் இருந்துள்ளனர். முதியோர்களும், மூலிகையின் பயன் அறிந்தோரும் நாட்டுப்புற மருத்துவர்களே. செவிவழியாக, மரபு வழியாகவும், பழக்கப் பயிற்சியினாலும் இவர்கள் மருத்துவம் செய்கின்றனர்.
 
பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு. பரம்பரை மருத்துவர்கள் சிலர், சில மருத்துவமுறைகளை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர். வெளியே சொன்னால் பலிக்காது என்பது அவர்களது நம்பிக்கை. மருத்துவ உலகம் வெகு வேகமாக வளர்ந்துவிட்ட பின்னரும், இயற்கை மருத்துவமும், நாட்டுப்புற மருத்துவமும் நிலைத்திருப்பது அதன் பெருமையைக் காட்டுகிறது. 
 
`பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்`, `ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்`, `சனி தோறும் நீராடு`, நோயைக்கட்ட வாயைக்கட்டு`, `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி` போன்ற பழமொழிகள் இயற்கை மருத்துவத்தை காலம்தோறும் சுமந்து வந்தவையாகும்.
 
நாட்டுப்புற பாடல்களிலும் மருத்துவ விளக்கங்கள் இருக்கின்றன. சித்தமருத்துவப் பாடல்கள் மருத்துவக் களஞ்சியமாக திகழ்கின்றன. நாட்டுப்புற மருத்துவம் உடல், மனம் சமூகத்தோடு பிணைந்திருப்பதால் சக்தி உடையதாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மக்கள் மாற மனங்கொண்டு வருவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பே!
Download As PDF

கேரட் சாப்பிடும் முறை


கேரட் சாப்பிடும் முறை

 
கேரட்டை சிலர் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வாங்க. சிலர் சமைக்காமல் அப்படியே சாப்பிடுறது தான் நல்லதுன்னு சொல்வாங்க. கேரட்டை சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகுது. அதனால் தான் சமைக்காமல் சாப்பிடணும்னு சொல்றாங்க. ஆனால், சமைக்கும்போதுதான் அதிகமான பலன் கிடைக்குது.
 
பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டுமே நமது உடல் வைட்டமின் `ஏ' வாக மாற்றுது. ஆனால், சமைத்து சாப்பிடும்போது, இது 50 சதவீதமாக அதிகரிக்குது. எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலை சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிடுங்க. இந்த பகுதிகளில் தான் கேரட் செடி வளருதுக்கு தெளிக்கிற பூச்சிக் கொல்லிமருந்து அதிகமா தேங்கி நிற்குதாம்.
Download As PDF

காய்கறி சூப்


காய்கறி சூப்

 
அந்தந்த சீசனில் கிடைக்கும், விருப்பப்பட்ட காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். 
 
தேவையானவை:  
 
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
சில்லி சாஸ் - 1  ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1  ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு  
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 2 ஸ்பூன்  
கார்ன்ஃப்ளார் - 1 ஸ்பூன்.
 
செய்முறை:
 
* முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
 
* எண்ணெயைக் காய வைத்து இஞ்சி, பூண்டு, மிளகாய், காய்கறி சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 10  நிமிடம் கொதிக்க விடுங்கள்.
 
* பிறகு, சில்லி சாஸ், சர்க்கரை, தக்காளி சாஸ், சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
 
* ஒரு கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து சூப்பில் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
Download As PDF

மணத்தக்காளி சூப்


மணத்தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:
 
மணத்தக்காளி கீரை - அரை கட்டு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 3 பல்
தேங்காய்ப்பால் -  அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் -  1  ஸ்பூன்
எண்ணெய் -   1 ஸ்பூன்.
 
செய்முறை:
 
* கீரையை நன்றாக கழுவி பொடியாக அறிந்துக் கொள்ளவும்.
 
* வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
 
* குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
 
* பிறகு அதில் கீரையை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 3  விசில் வைத்து இறக்கி விடவும்.
 
* 5  நிமிடம் கழித்து, ‘வெயிட்’டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள்.
 
* வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.
Download As PDF

காரட் சாதம்


காரட் சாதம்
 
தேவையானவை
பச்சரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய சைஸ் காரட் - 3
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை
 
* அரிசியை வேக வைத்து சாதத்தை உதிரியாக ஆற வைக்கவும்.
 
* வாணலியில் எண்ணைய் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு வதக்கவும் காரட்டை துருவி அதையும் சேர்த்து வதக்கவும்.
 
* பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிதுஎண்ணையில் தனியா, சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவலை வறுத்து பொடியாக்கவும்.
 
* ஆறிய சாதத்துடன் வதக்கிய காரட் மசாலா பொடி உப்பு சேர்த்து அனலில் சில நிமிடங்கள் வைத்து சூடாகப் பரிமாறவும். வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Download As PDF