Friday, September 09, 2011

இயற்கை உணவு உண்ணுவதால் வரும் நன்மைகள் :

உணவு வகைகளில் சிறந்த வகையும் சுவையான வகையும் இயற்கை உணவே :
இயற்கை மருத்துவ தத்துவம், நோய் ஒன்றே, பல அல்ல எனக் கூறி வருகின்றது. ஆனால் பிற மருத்துவங்கள் அனைத்தும் உடலின் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை, குறிப்பிட்ட உறுப்பின் பெயரால் அழைத்து பல்வேறு நோய்களாகப் பிரிக்கின்றன.


 (எடுத்துக் காட்டாக) :

 கண்ணில் நோய் வந்தால் கண் நோய், பல்லில் ஏற்பட்டால் பல் நோய், செவியில் தோன்றினால் செவி நோய், இது போன்று தலை நோய், மூக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், மூல நோய் மற்றும் பல்வேறு பெயர்களில் நோய்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வாறு பல்வேறு நோய்களுக்கேற்ப பல்வேறு வில்லைகள், ஊசிகள், மருந்துகள், மூலிகைகள் என பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கேற்ப நடைமுறையில் உள்ளன. 

ஆனால் உண்மை என்னவெனில்: 
 தவறான உணவுகள் உண்பதால் உடலில் அழுக்குகள் நிறைய சேர்ந்து எந்த உறுப்பு பலவீனமாக உள்ளதோ அவ்வுறுப்பில் படிந்து, அவ்வுறுப்பைத் தாக்கி, நோய் எனும் பெயரில் அவ்வுறுப்பில் பழுது ஏற்படச் செய்து தவறாக உடல் இயங்குகிறது. சரியான உணவுகள் உண்பதால் உடல் உறுப்புகள் சரியாகச் செயல்பட்டு, உடல் சரியாக இயங்குகிறது. எடுத்துக் காட்டாக, இயற்கைக்கு மாறாக நெருப்பில் சமைத்த உணவுகள் அனைத்தும் தவறான உணவுகள், அழுக்குள்ள உணவுகள். எனவே சமைத்துண்ணும் பழக்கமுடைய மனிதனின் சிறுநீர், மலம், வேர்வை, உடல் அனைத்தும் அழுக்குள்ள உணவுகளை உண்பதால், துர் நாற்றம் வீசக் கூடிய இயல்புடையதாகி விட்டன.

 இயற்கைக்கு மாறுபாடில்லாத சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் சரியான உணவுகள், தூய்மையுள்ள உணவுகள். எனவே பச்சையாகத் தின்னும் பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் சிறுநீர், மலம் துர்நாற்றமில்லை. பசுமாட்டின் சாணம் கொண்டு பிள்ளையார் பிடிப்பதும், பசுமாட்டின் சிறுநீர் மதச் சடங்குகளின்போது புனிதம் கருதி வீடுகளில் தெளிக்கப்படுவதும் நம் நாட்டில் பழக்கமாக உள்ளது. பறவைகள், விலங்குகள் எவ்வளவு தூரம் பறந்து அலைந்தாலும், நடந்து ஓடினாலும் அவைகளின் உடலில் வேர்வையே ஏற்படுவதில்லை. மனிதனின் உடலில் மட்டும் சொல்லவொண்ணாத வேர்வை கொட்டி ஊற்றுப் பெருக்கெடுத்து துர்மணம் வீசுகிறது. எனவே இத்தகைய இயற்கை அடிப்படைகளே சமைத்த உணவுகள் அனைத்தும் சரியில்லாத & தவறான & அழுக்கு உணவுகள் என்றும், சமைக்காத & பச்சையான & இயற்கையுணவுகள் அனைத்தும் சரியான தூய்மையான உணவுகள் என்றும் நிரூபிக்கின்றன. 

தவறான அழுக்குள்ள சமைத்த உணவுகளால்தான் மனிதனுக்கு அனைத்து உடல், உள நோய்களும் ஏற்படுகின்றன. அழுக்கு உணவுகளை உண்பதால்தான் மனிதனின் மூளையிலும் அழுக்குகள் நிறையப் படிந்து மனிதனை கற்பழிப்பு, கொலை, கொள்ளை, பகை, லோபம், வெறி முதலிய தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. உதாரணமாக பரம்பரையாக சைவ உணவு உண்பவர்களை விட, அசைவ உணவு உண்பவர்களே குற்றவியல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளியில் துறை கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் சிந்தித்துப் பார்த்தாலும் புலப்படும். எனவே இவ்வுலகில் மதம், இனம், மொழி, நாடு, வெறி சச்சரவுகள், மற்றும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை முதலிய தீய நிகழ்ச்சிகள் நிகழா வண்ணம் செய்யவும், அமைதி ஏற்படுத்தவும் மனிதனை அசைவ உணவை விடுத்து குறைந்த பட்சம் சைவ உணவிற்காவது மாற்ற முயலுதல் வேண்டும். சமைத்த சைவ உணவிலிருந்து சமைக்காத கனிகள், காய்கள் முதலிய இயற்கையுணவிற்கு மாற்ற முயலுதலே அறிஞர்கள், ஆட்சியாளர்கள், வல்லுனர்கள் ஆகியோரின் தலையாய & இன்றியமையாத & உயரிய பணியாகும். சரியான & சமைக்காத & பச்சையான & தூய இயற்கையுணவுகள் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்குக் கண் நோய், பல் நோய், செவி நோய், தலை நோய், மூக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், மூல நோய், மற்றும் மனிதனுக்கு ஏற்படக் கூடிய இதர தொழு நோய், புற்று நோய், வாதம், எய்ட்ஸ் முதலிய எத்தகைறய நோயுமில்லை. 

தவறானசமைத்த & அழுக்கு உணவுகளை உண்ணும் மனிதனுக்கு மட்டும்தான் அத்தனை நோய்களும்.
 இயற்கை உணவு உண்டு வந்தால் மனிதனுக்கு ஏற்படுகின்ற நோயை,
 எந்நோய் என எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் இதர மருத்துவப் பரிசோதனைகள் செய்து நோய் நாட வேண்டிய அவசியமில்லை என இயற்கை விதி நமக்கு நன்கு போதிக்கின்றது. எந்நோய் என நோய் நாடுவது பொருளாதார விரயம், கால விரயம், சக்தி விரயம் மற்றும் பல விரயங்களை ஏற்படுத்துகின்றது என்பதும் தெள்ளத் தெளிவாகின்றது. மேலும் நோய் நாட ஆய்வு செய்யும் கருவிகள் மூலம் நமது உடலினுள் செலுத்தப்படும் செயற்கைக் கதிர்கள், நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிக்கச் செய்கிறது. எனவே நோய் நாடுவதை இத்துடன் நிறுத்தி, இனி நோய் முதல் நாடுவோம்
Download As PDF

Wednesday, September 07, 2011

காளான் பிரியாணி


காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்
பச்சரிசி / பாசுமதி அரிசி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
காளான் - 200 கிராம்
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு


அரைக்க தேவையானவை
இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 12 பல்லு
முந்திரி - 3
பாதாம் - 2
பிஸ்தா - 2

தாளிக்க தேவையானவை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் (மல்லித் தூள்) - 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

செய்முறை
1. அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி வைக்கவும்.

2. புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்

3. வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.

4. காளானை அரிந்து இரண்டு முறை நன்றாகக் கழுவி வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

6. அனைந்து பொரிந்ததும், அரைக்க கூறப்பட்ட பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.

9. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

10. அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியை போட்டு (பாசுமதி அரிசி 1 பங்கு : தண்ணீர் 2 பங்கு)(பச்சரிசி 1 பங்கு : தண்ணீர் 2 1/2 பங்கு) லேசாக கிளறி, சுடுதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

11. குக்கர் ஆவி அடங்கியது, கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. தேவைப்பட்டால் குக்கரை மூடி வேகவைப்பதற்கு முன், அரை எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து வேகவைக்கவும்.
Download As PDF

இறால் வடை


இறால் வடை

தேவையானப் பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
பச்சரிசி ரவை - 2 க‌ப்
ப மிளகாய் - 5
க‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லி
மஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை
கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூ‌ண்டு ‌விழுது - தலா 1 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 1 க‌ப்
உப்பு


செய்முறை

இறா‌லை தோ‌ல் உ‌ரி‌த்து கழு‌வி, இர‌ண்டிர‌ண்டாக நறு‌க்‌கி அ‌தி‌ல் மஞ்சள் தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, தூ‌ள் உப்பு அனைத்தையும் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய், க‌‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இறாலுட‌ன் சே‌ர்‌க்கவு‌ம்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இறாலை வதக்‌கவு‌ம். ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் இற‌க்‌கி ஆற ‌விடவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அ‌ரி‌சி மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் இறா‌ல் வத‌க்கலை சே‌ர்‌க்கவு‌ம்.

மா‌வி‌ல் தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ‌சி‌றிது த‌ண்‌‌ணீ‌ர் தெ‌ளி‌த்து வடை மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசையவு‌ம்.

வாணலியில் 2 க‌ப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போட வேண்டும்.

வடை இரு ப‌க்கமு‌ம் ந‌ன்கு வெ‌ந்து பொ‌ன்‌னிறமானது‌ம் எடு‌த்து ப‌ரிமாறவு‌ம்.
Download As PDF

தக்காளி சூப்


தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
Download As PDF

ரவா லட்டு


ரவா லட்டு

தேவையான பொருட்கள்

ரவை - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
பால் - 1/4 லிட்டர்
நெய் - 50 கிராம்
திராட்சை - 10


செய்முறை

1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

2. சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.

3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


குறிப்பு

1. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்
Download As PDF

Thursday, September 01, 2011

மனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்?



மனம் மகிழுங்கள் தொடர் :
னதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்
அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லைஅவர் எண்ணப்படி பல விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்தம் மனதில் மகிழ்விற்கு "நோவேகென்ஸி" போர்டு மாட்டிவிட்டு வருத்தம்,சோகம்அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.
சரி! எதிர்பார்ப்பு என்பது என்னஅது வயது,பால்வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.
 
குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸாஐஸ்க்ரீம்வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால்அடம்,அழுகைபிடிவாதம் இத்தியாதி. ..... எதிர்பார்த்ததுகிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை. இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் "இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவைநகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், "உம்". கணவர்கள்எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம்பணம்பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்;அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறதுஅதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.
இவையனைத்தும் உணர்த்தும் உண்மை - நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!
 
"எனவே கனவான்களேநான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்..."என்று ஒரு காலநிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின்சில சமயம் உற்சாகம்சில சமயம் ஏமாற்றம்சில சமயம் வெற்றிசில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி. "இன்பம் பாதிதுன்பம் பாதி,இரண்டும் சேர்ந்த கலவை நான்" என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது நாடகமேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக,நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால்நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரேஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது. பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது. மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு. கவலைகளெல்லாம் முடிந்து, "அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்" என்றும் மகிழ்வடைய முடியாது.
மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம்.சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறதுஎன்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளது "கவுண்ட் டௌன்" (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம்கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.
இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தைநொடியை உபயோகமாய்,மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, "இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்" என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லைஅதுகானல் நீர்! உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்கவரிந்துகட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல்நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போதுஅவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர்தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன்நீ மனம் மகிழ வேண்டுமானால்மனம் மகிழ்."  என்ன புரிகிறது?  யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவிவேட்டிசேலை போல் தரப் போவதில்லை,நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.

எதிர்பார்ப்புஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டுமகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.
நன்றியுடன் மீள்பதிவு : -( நூருத்தீன்-பதிவு -17)   மேலும்பயணிப்போம் 
Download As PDF

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ


ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ:

இணையதளங்களை வலம்வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப் படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயேதான் இருக்கும். இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக, ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும். மென்பொருளை தரவிறக்க சுட்டி

http://multi-browser.com/en


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும். பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரேஇடத்தில் காண முடியும்.
Download As PDF

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க


ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க:

கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது.

வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager. மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டிய படி வன்தட்டினை முறைப் படுத்தி கொள்ளவும். இந்த மென் பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றி யமைத்துக் கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தமிழ் கம்ப்யூட்டர் 
Download As PDF

கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய


கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய:

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். 

இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங் களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்கசுட்டி
http://arvinsoft.weebly.com/sys-information.html   


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.
நன்றி : தமிழ்கம்ப்யூட்டர்

Download As PDF

கணினியின் நிலையை அறிய


கணினியின் நிலையை அறிய:
கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள்,ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில்இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். 

சரி கணினி ஆமையோ முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான்NovaBench. மென்பொருளை தரவிறக்க சுட்டிhttp://novabench.com/download.php
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் உங்கள் கணினினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்கமுடியும். 
அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணினியில் எதாவதுகுறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

Download As PDF