Sunday, July 24, 2011

தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்


துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் 
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை
 
குறள் வெண்பா
 
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
 
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
 
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
 
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
 
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
 
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் 
 
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
 
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் 
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
 
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
 
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
 
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
 
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
 
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
 
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
 
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
 
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
 
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
 
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
 
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க 
 
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
 
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
 
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
 
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
 
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
 
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க
 
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
 
அல்லல் படுத்தும் அடங்கா முனியும் 
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் 
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
 
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
 
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்
 
பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
 
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
 
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
 
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
 
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக 
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
 
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம் 
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
 
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
 
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
 
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
 
உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
 
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
 
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
 
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
 
என்னாவிருக்க யானுனைப் பாட 
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
 
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
 
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
 
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
 
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
 
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
 
பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
 
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு 
ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
 
அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
 
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் 
 
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
 
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
 
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
 
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
 
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
 
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
 
கந்தர்சஷ்டி கவசம் முற்றிற்று
Download As PDF

பெண்மை


ஒவ்வொரு மனித உயிரும் இந்த மண்ணை தொடும்போது ஒரு பெண் முழுமை அடைகிறாள்,ஆனுக்கு உழைப்பை மட்டும் கொடுத்த கடவுள்  பாசத்தை கூட கடமையை ஆக்கிவிட்டான் ,பெண்களுக்கு மட்டும் பாசத்தையும் ,நேசத்தையும் கொடுத்து உலகத்தையே பெண்மையில் ஆழ்த்திவிட்டான்.இதனால் தான் என்னவோ ஆண்களின் கற்பை விட பெண்களின் கற்பு புனிதமாக இந்த உலகமே கொண்டாடுது .ஒருவரை அன்பால் வீழ்த்த பெண்கள் அன்றி வேறு எவரும் இல்லை .இந்த உலக கதைகளும் கட்டுரைகளும் பெண்கள் சார்ந்தே  அமைய்கின்றன அதற்கு அவளவு பலம்  என்றும் தோற்றது இல்லை . ஒருவன் என்ன தான் தவறு செய்தாலும் இந்த உலகம் மன்னிக்கும் ஆனால் பெண்மைக்கு தீங்கு நினைத்தாள் ,அடுத்த ஜென்மம் இல்லை இந்த ஜென்மமே தண்டனை கிடைக்கும் தன்னை அறியாமலே தண்டனை பெறுவான்  . பெண்மையை பெண்களே போற்றும் அளவுக்கு புனிதம் குறையா வண்ணம் காத்திடுவோம் இந்த உலகம் அழியும் வரை ......என்றும் பெண்மையை போற்றிடுவோம்  .
 இவன்
எனது மின்னங்க்ச்சலில் வந்தவை 
Download As PDF

மனைவி


காலையில் விடிந்ததும்
என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே
நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம்
என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...

நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும்
உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...

நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும்
உன் விரல்கள்...

எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும்
என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும்
நம் இதழ்கள்...

அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும்
உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும்
உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும்
அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும்
உன் விழிகள்...
என் கலைப்பை போக்க நீ கொடுக்கும்
உன் இதழ் பட்ட தேனீர்...

சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும்
என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும்
இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான
உன் போர்வை...
இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல்
என் கழுத்தில் புதையும் உன் முகம்...

என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும்
நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத
உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...

என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும்
அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்
விடியும் காலை...
இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...
இவன்
முகம் தெரியாத நண்பர்    




Download As PDF

என் அம்மா


மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"
குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்

"
எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
"
சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''
Download As PDF

நம் நாடு


கல்வி முடித்து விட்டு  ,வேலை தேடி தேடி அலைந்தேன்...
நான் திறந்த கதவு எல்லாம் ,வேலை வேண்டும் என்றவுடன்?
கதவுகள் தானாக மூட பட்டன . . . மூடியது ஒரு இளைஞனின்  வாழ்க்கையை மட்டும் அல்ல 
அவனின் கனவு இலட்சியம் , உழைப்பு ,எதிர்காலம் குடும்பங்களின் ஏழ்மை.
ஒவொரு   மனிதனையும் சுழற்றி அடிக்கும் ஒரு களம் இந்த வேலை இன்மை .
போராடி போராடி கீழே விழ! மனதிலும் ,உடலிலும் காயங்கள் தான் மிஞ்சியது .
நண்பர்களின்  ஊக்கமும் ,உற்சாகமும் கீழே விழும்போது மருந்தாய் மாறியது .
வேலை தேடி அலையும்  போது பசி கூட நம்மை சீண்டி பாக்கும்.
குடிக்க தண்ணீர் தேடி அலையும்  அவலம்,வேலை கொடுக்க மனம் இருந்தும் 
சம்பளம் கொடுக்க மனம் இல்லை (முதலாளிகளுக்கே உள்ள நல்ல குணம்) . 
கிடைத்த வேலையே காப்பாற்றி கொள்ளவே காலம் ஓடி போச்சு.
சாதிக்க உடலும் மனமும் இருந்தும் ,நம்மை ஒரு கைதி போல் ஆக்கி விடுகின்றன.
முதலாளி சொல்வதை தவிர வேறு செய்ய இயலாது ,முதலாளிகள்  ஆட்டி வைக்கும்  
விளையாட்டு பொம்மைகள் நாம், கீழே விழுந்தாலும் முதலாளிக்கு எந்த பாதிப்பும் இருக்காது .
இந்த ஏற்ற தாழ்வு நம் நாட்டில்  மட்டும் இல்லை இந்த உலக வரைபடத்தின் 
எந்த மூலையிலும் உண்டு .ஒவொரு இளைஞனும் ஒரு காலத்தில் முதலாளிகளே!
நாம் அனுபவித்த கொடுமைகள் நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் . . . 
புதிய இளைய சமுதாயத்திற்கு வழி காட்டுவோம் . முதலாளித்துவ  ஆதிக்கத்தை ஒழிப்போம்.
நம் நாட்டை உலக அரங்கில் முன்னிருதுவோம். . .
வாழ்க இந்தியா. . .
Download As PDF

ஆன்மிகம் சோறு போன்றது


* மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்றுவிதமான இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும். * மரணம் என்பது மிக உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரைத் தியாகம் செய்வது மேலானது.
*
நமக்கு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபடுங்கள். 
*
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகப்பணியாகும். 
*
ஒரு லட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் வழியே மனதைச் செலுத்தி உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த கருத்து நிறைந்திருக்கட்டும்.

*
ஆன்மிகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி, கூட்டுப் போலத்தான். 
*
நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் மரணமடைந்து விடலாம்.

* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.

Download As PDF

Saturday, July 23, 2011

முடியாது என்று சொல்லாதே, * பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பது தான்.


முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

 அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

* பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பது தான்.

* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் முடியாது என்று சொல்லாதீர்கள். உண்மையில் நாம் வரம்பில்லா வலிமையும் ஆற்றலும் கொண்டவர்கள்
* சுயநலமற்ற தன்மையோடு பணிகளைச் செய்யுங்கள். எந்தஇடத்திலும் வெற்றியை நிர்ணயிப்பது சுயநலமின்மையே. 
*
சுயநலம், சுயநலமின்மை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போன்றது.




Download As PDF

சிவ சுகுமாறன்


வீழ்வது நாமாக இருப்பினும் !!! வாழ்வது தமிழாக இருக்கட்டும்!!!

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள்.
Download As PDF