* வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச
பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள்
நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு
ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய்,
உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே
அறிவுமயமான ஆண்டவன்.<BR>
பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள்
நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு
ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய்,
உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே
அறிவுமயமான ஆண்டவன்.<BR>
* ஆண்டவனை வணங்கத் தலை இருக்கிறது. வாழ்த்த வாய்
இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம்
கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது.
ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம்
எக்காலத்தும் பழகியிருக்க வேண்டும்.
இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம்
கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது.
ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம்
எக்காலத்தும் பழகியிருக்க வேண்டும்.
* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம்
தூய்மையடைபவன் செல்வத்தைப் பெறுவான். சிறப்பினைப்
பெறுவான். அல்லலைத் தவிர்ப்பான். அறிவு நிரம்பப் பெறுவான்.
கல்வியில் சிறந்து விளங்குவான். நற்கதி அடைவான்.
தூய்மையடைபவன் செல்வத்தைப் பெறுவான். சிறப்பினைப்
பெறுவான். அல்லலைத் தவிர்ப்பான். அறிவு நிரம்பப் பெறுவான்.
கல்வியில் சிறந்து விளங்குவான். நற்கதி அடைவான்.
* தாம் விரும்பியதை முன்னமேயே பெற்றுக் கையில்
வைத்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமல் விரும்பியது இன்னும்
கிடைக்கவில்லையே என்று வருந்துகிறவனைப் போல், படைத்த
பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமல்
வருந்துகிறவர்கள் அநேகர் உண்டு.
வைத்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமல் விரும்பியது இன்னும்
கிடைக்கவில்லையே என்று வருந்துகிறவனைப் போல், படைத்த
பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமல்
வருந்துகிறவர்கள் அநேகர் உண்டு.
* ஆணவ மலத் துன்பத்தில் அழுந்திய மன ஆசையினால் அறிவு
மயங்குபவன், வெவ்வேறு உருவமாகப் பிறந்து குயவன் சுழற்றும்
சக்கரத்தைப் போலப் பிறவிக் கடலில் சுழன்று கிடப்பான்.
மயங்குபவன், வெவ்வேறு உருவமாகப் பிறந்து குயவன் சுழற்றும்
சக்கரத்தைப் போலப் பிறவிக் கடலில் சுழன்று கிடப்பான்.
* செம்பில் களிம்பு போல் மலமானது ஆத்மாவை ஆதிமுதலே
பற்றிக் கொண்டிருக்கும்.
பற்றிக் கொண்டிருக்கும்.
* பொன்னை விரும்புதல், பூமியை விரும்புதல், பெண்
மயக்கத்தை விரும்புதல் ஆகியவை ஒருவனுடைய மனவலிமையை
அயர்வுறச் செய்வனவாகும்.
மயக்கத்தை விரும்புதல் ஆகியவை ஒருவனுடைய மனவலிமையை
அயர்வுறச் செய்வனவாகும்.
No comments:
Post a Comment