Wednesday, January 18, 2012

மிளகு மோர் சாம்பார்


மிளகு மோர் குழம்பு

தேவையான பொருட்கள்...
மிளகு - 25 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50 கிராம்
கெட்டியான மோர் - 3 கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 50 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு (தேவைக்கேற்ப)
கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை....
• முதலில் துவரம் பருப்பை குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
• பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க  வைக்க வேண்டும்.
• கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.
• அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும்.
• கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
Download As PDF

காலி பிளவர் மிளகு ரோஸ்ட்


காலி பிளவர் மிளகு ரோஸ்ட்

தேவையானவை....
 
காலிபிளவர் பெரியது - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 6 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை...
 
* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.
 
* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.
 
* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.
 
* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம், சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
 
* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து வைக்கவும்.
Download As PDF

பாகற்காய் ஜுஸ்


பாகற்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்....
 
பாகற்காய் – 1 கப்
எலுமிச்சம் சாறு - 2  ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகுப்பொடி – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை  – சிறிதளவு 
 
செய்முறை;
 
* பாகற்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  
 
• அதனுடன் எலுமிச்சம் சாறு, உப்பு, சீரகப்பொடி, மிளகுப்பொடி சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி பருகவும்.  
 
• பாகற்காய் ஜுஸ் தினசரி குடிப்பதால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும். நாட்பட்ட தோல் நோய்கள் குணமாகின்றன.
Download As PDF

எள் சப்பாத்தி


எள் சப்பாத்தி

தேவையானவை:
 
வெள்ளை எள் -  கால் கப் 
கோதுமை மாவு – ஒரு கப்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
நெய் –  2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை:
 
* முதலில் எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
 
• பின்னர் தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, ஆற வைத்து இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும்.
 
• கோதுமை மாவுடன் வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
 
• இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
 
• இந்த சப்பாத்தி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  
Download As PDF

கத்திரிக்காய் சட்னி


கத்திரிக்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:
 
கத்திரிக்காய் - 4 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:
 
* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணெய்த் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும்.
 
* வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும். அல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
 
* புளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். .
 
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும்.
 
* மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
 
* இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
Download As PDF

தொப்பை குறைய உடற்பயிற்சி


தொப்பை குறைய உடற்பயிற்சி

 
பாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை  உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும்.  உங்கள்  கால்களை மெதுவாக தரையில் இருந்து  மேலே உயர்த்தவும். உங்கள் கால்கள் 45 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
 
கால்களை மட்டும் உயர்த்த வேண்டும். இந்த கோணத்தில் சில நிமிடங்கள் இருந்து பின் பழைய நிலைக்கு வரவும்.  இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.
Download As PDF

உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்



* உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும், வளமும் அதிகமாக கிடைக்கிறது.
 
• பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.
 
• செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்,  உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
 
• கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.
Download As PDF

ஆசனம் செய்யும் முறைகள், யோகாவின் ஐந்து கவச உறை


யோகாவின் ஐந்து கவச உறை 
காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்றதாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், மாலை நேரம் செய்யலாம்.
 
செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய கூடாது. ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும். வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் கழித்தே ஆசனம் செய்ய வேண்டும்.
 
எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்க வேண்டும். யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
 
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம். ஆசனங்கள் செய்யும் போது முதலில் எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
 
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய தொடங்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
 
யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம். எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது.
 
எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.
 
ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.

யோகாவின் ஐந்து கவச உறை
1. உடல்
2. பிராணன் (நாடிகள் வழியே பெருகும் ஜீவசக்தி)
3. மனது, எண்ணங்களும், உணர்ச்சிகளும் உண்டாகுமிடம்
4. ஞானம், அறிவு
5. ஆத்மா, பரமானந்த நிலை. முதல் மூன்று நிலைகள் பாதிக்கப்பட்டால் உடலின் சக்தி உடலெங்கும் சரிவர பரவாது. நோய்கள் தோன்றும்.
Download As PDF