Wednesday, January 18, 2012

எள் சப்பாத்தி


எள் சப்பாத்தி

தேவையானவை:
 
வெள்ளை எள் -  கால் கப் 
கோதுமை மாவு – ஒரு கப்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
நெய் –  2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை:
 
* முதலில் எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
 
• பின்னர் தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, ஆற வைத்து இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும்.
 
• கோதுமை மாவுடன் வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
 
• இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
 
• இந்த சப்பாத்தி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  
Download As PDF

கத்திரிக்காய் சட்னி


கத்திரிக்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:
 
கத்திரிக்காய் - 4 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:
 
* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணெய்த் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும்.
 
* வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும். அல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
 
* புளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். .
 
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும்.
 
* மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
 
* இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
Download As PDF

தொப்பை குறைய உடற்பயிற்சி


தொப்பை குறைய உடற்பயிற்சி

 
பாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை  உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும்.  உங்கள்  கால்களை மெதுவாக தரையில் இருந்து  மேலே உயர்த்தவும். உங்கள் கால்கள் 45 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
 
கால்களை மட்டும் உயர்த்த வேண்டும். இந்த கோணத்தில் சில நிமிடங்கள் இருந்து பின் பழைய நிலைக்கு வரவும்.  இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.
Download As PDF

உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்



* உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும், வளமும் அதிகமாக கிடைக்கிறது.
 
• பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.
 
• செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்,  உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
 
• கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.
Download As PDF

ஆசனம் செய்யும் முறைகள், யோகாவின் ஐந்து கவச உறை


யோகாவின் ஐந்து கவச உறை 
காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்றதாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், மாலை நேரம் செய்யலாம்.
 
செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய கூடாது. ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும். வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் கழித்தே ஆசனம் செய்ய வேண்டும்.
 
எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்க வேண்டும். யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
 
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம். ஆசனங்கள் செய்யும் போது முதலில் எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
 
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய தொடங்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
 
யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம். எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது.
 
எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.
 
ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.

யோகாவின் ஐந்து கவச உறை
1. உடல்
2. பிராணன் (நாடிகள் வழியே பெருகும் ஜீவசக்தி)
3. மனது, எண்ணங்களும், உணர்ச்சிகளும் உண்டாகுமிடம்
4. ஞானம், அறிவு
5. ஆத்மா, பரமானந்த நிலை. முதல் மூன்று நிலைகள் பாதிக்கப்பட்டால் உடலின் சக்தி உடலெங்கும் சரிவர பரவாது. நோய்கள் தோன்றும்.
Download As PDF

சூரிய நமஸ்காரம்



 சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சக்திகள் கிடைக்கின்றன. சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும், மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகிறது. ஏராளமான கரியமில வாயுவும், பிற நச்சுப் பொருள்களும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
 
ஜீரண மண்டலத்திற்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இடமில்லாமல் போகிறது. மேலும், வயிற்று உறுப்புக்களில் ரத்தம் தங்குவதில்லை என்பதால் உடல் உறுதியாகிறது. இவற்றோடு, சிறப்பு பலனாக நம் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
 
அதாவது, தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் ரத்தக் கொதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது. இதயத் துடிப்பும் சீராகிறது. நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் இது உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. உடல் பொலிவுக்கும் சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது.
 
சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது உடலில் இருந்து வியர்வைத் துளிகள் வெளியேறும். அதன் மூலம் உடலில் உள்ள ஏராளமான நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறுகின்றன. எந்த அளவுக்கு வியர்வை வெளிவருகிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் ஏற்படும். மேலும், சூரிய நமஸ்காரத்தில் நம் கழுத்தானது முன் பின் வளைக்கப்படுகின்றது.
 
இதனால் தைராயிடு, பாராதைராயிடு சுரப்பிகளுக்கு ரத்தம் சீராக கிடைக்கின்றது. அவை சிறப்பாக செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான பணிகளைச் செய்கின்றன.
 
இதன் மூலம் தோலானது புத்துணர்வு பெற்றுப் பொலிவு பெறுகின்றது. சூரிய நமஸ்காரம் செய்ய உகந்த நேரம் காலைதான். அது முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தான் இதை செய்ய வேண்டும்.
Download As PDF

Thursday, January 05, 2012

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்


உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை
வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும். 
பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

குளியலறையில் உள்ள மார்பிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மார்பிள் பளபளக்கும்.

எலக்ட்ரிக் கொஃபி மேக்கர் நீண்ட நாட்கள் ஆனதும், உட்புறம் உப்பு படிந்து விடும். இதனால் அடைப்பு ஏற்பட்டு, டிகாஷன் இறங்குவது தாமதமாகும், இதற்கு வினிகர் சிறிது எடுத்து நீருடன் கலந்து ஊற்றி வழக்கம்போல் ஓன் செய்ய வேண்டும், (கொஃபி பவுடன் போடக்கூடாது) வெந்நீர் மட்டும் டிகாஷன் வருவது போல வரும்.இதுபோல இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்தால், பின்பு டிகாஷன் ஸ்பீட் ஆக வரும்.

கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், கார் கண்னாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

பல்செட் வைத்திருப்பவர்கள், அதை இரவில் வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வாடை இல்லாமல் இருக்கும்.

டைனிங் டேபிளில் சில சமயம் ஒரு துர்வாடை அடிக்கும். வினிகரை நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சு கொண்டு துடைத்தால் வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.

Apple  Cider Vinegar என்ற வினிகரை எலுமிச்சை ஜூஸ் அல்லது தேனில் விட்டுத் தண்ணீர் கலந்து குடித்துவரை உடல் எடை குறையும்.

ஒரு தே.கரண்டி வெள்ளை வினிகர், 3 தே.கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான PH சரும டோனர் தயார். முகத்தில் இதைத் த்ளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம். 



கறைபோக்கும் வினிகர். வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும். 
கொழுப்பைக் குறைக்கும் வினிகர்! வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். இக் கலவையில் சிறிது உப்பு போடவும். மல்லி இலைகளை மேலே தூவி விடவும். பின்பு சிறிது வினிகரையும் ஒலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு சீரக கலவையையும் இத்துடன் சேர்க்கலாம். வினிகர் கலந்து இந்த சாலுட்டின் ருசி அருமையாக இருக்கும்.
வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம்.
சுத்தப்படுத்தும் வினிகர்! குழந்தைகளின், ஃபீடிங் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும்
பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டால் போதும் துர்வாடையற்ற பிளாஸ்க் பயன்படுத்த ரெடி.
ஸ்கூலுக்கம், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்!
ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கவலையாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் ஃபிரிட் துடையுங்கள்.
உல்லன் துணிகள் பளிச்சிட கையால் பின்னிய உல்லன் துணிகளைத் துவைக்கும் போது 2 டேபிள் ஸ்பூன் வினிகரைத் தண்ணிரில் கலந்தால் துணிகள் பளிச் .. பளிச்தான்.
வெள்ளையுனிஃபார்ம் பளிச்சிட.. குழந்தைகளின் வெள்ளைனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்கு முன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து விட்டுப் பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப் போல் வெண்மையாக இருக்கும்.
ப்ரஷர் குக்கரில் துரு பிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.
பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்ப சோத்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பளிச்தான்.
பூச்சித் தொல்லை வராமல் இருக்க சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் துடைக்க வேண்டும் வாரமிருமுறை!
வெண்கரு பிரியாமல் இருக்க …. அவித்த முட்டை தயாரிக்கும் போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சோப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்
பட்டாணி நிறம் மாறமால் இருக்க … பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம்போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.
முட்டை நாற்றம் வராமல் இருக்க .. தரையில் முட்டை விழுந்து உடைந்தால் துர்நாற்றம் வீதம் அதைப் போக்க சிட்டிகை அளவு உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால், துரநாற்றம் மறையும்.
மீன் வாடை வராமல் இருக்க … மீன் கழுவும் போது, சிறிதளவு, உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.
கீரை, காய்கறியை ஃபிரெஷ் ஆக்கணுமா? கீரையோ, காயோ வாடியிருக்கிறதா? அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு (அல்லது காய்களின் அளவுக்கேற்ப) வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.
இறைச்சி ஸ்மூத் ஆக… இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சு போல் வேகும்
பனீர் செய்ய.. பனீர் செய்ய எலுமிச்சை சாறு இல்லாவிட்டால் கொதிக்கும் பாலில் கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கிளறி பனீர் பரிந்ததும் வழக்கம் போல வடிக்கட்டிக் கொள்ளவும்.
வினிகரில் நனைத்துப் பிழிந்த துணியில் சீஸ் கட்டியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.
Download As PDF

தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு பயனுள்ள இணையம்



ரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத் தொடங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  
நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில்  தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
Download As PDF

தொழிலதிபர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் உதவும் பயனுள்ள மென்பொருள்



புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஓன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற பொத்தானை சொடுக்கி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் அக்கவுண்டிங் தகவல்களை கொடுக்க வேண்டியது தான்.
இணைய இணைப்பு மட்டும் தான் தேவை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணணியில் நிறுவி குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் ஓன்லைன் மூலம் நம் அக்கவுண்டிங் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை அப்டேட் செய்யலாம்.
இதை எல்லாம் விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது, அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை சொடுக்கி ஆரம்பம் முதல் இந்த அக்கவுண்டிங் மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லி கொடுக்கின்றனர்.

Download As PDF

Monday, December 26, 2011

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு



இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன.
ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மென்பொருளின் பயன்கள்:
1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.
5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6. வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. யூடியுப் வீடியோக்களில் இருந்து ஓடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
8. மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். அதன் பின் வீடியோ தரவிறக்கம் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் தரவிறக்கம் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் தரவிறக்கம் ஆகும். அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் தரவிறக்க பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.
வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கம் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும். அந்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தரவிறக்கத்தின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும்.
Download As PDF

யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு



உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.
Download As PDF

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு



புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
Download As PDF

உணவில் கவனிக்கப்பட வேண்டியவைகள்


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.
இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999ம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட(ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி அளவான 50 மைக்ரோகிராம் முதல் 20 மைக்ரோகிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.
Download As PDF