Wednesday, January 18, 2012

மிளகு மோர் சாம்பார்


மிளகு மோர் குழம்பு

தேவையான பொருட்கள்...
மிளகு - 25 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50 கிராம்
கெட்டியான மோர் - 3 கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 50 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு (தேவைக்கேற்ப)
கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை....
• முதலில் துவரம் பருப்பை குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
• பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க  வைக்க வேண்டும்.
• கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.
• அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும்.
• கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
Download As PDF

No comments:

Post a Comment