Thursday, October 25, 2012

பாசிப்பயறு சுண்டல்.


GREEN GRAM SUNDAL .பாசிப்பயறு சுண்டல்.

GREEN GRAM SUNDAL:-
NEEDED:-
GREEN GRAM - 1 CUP
SALT- 1/2TSP
GRATED COCONUT - 1 TBL SPN
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH ( OPTIONAL)
RED CHILLY - 1 NO. HALVED
CURRY LEAVES - 1 ARK

METHOD:-
WASH AND SOAK GREEN GRAM FOR 10 MINUTES. PRESSURE COOK FOR 2 WHISTLES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA POWDER ,HALVED RED CHILLY AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE AND ADD THE COOKED GREEN GRAM WITH SALT. STIRR WELL AND ADD THE GRATED COCONUT. REMOVE FROM FIRE AND SERVE IT .

பாசிப்பயறு சுண்டல்:-

தேவையானவை:-
பாசிப்பயறு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.  
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
பச்சைப் பயறைக் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வேகவிடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயப்பொடி, வரமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். அதில் வெந்த பயறு, உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறிப் பரிமாறவும்.

நன்றி தேநூஸ் ரெசிப்பி 
Download As PDF

மட்டன் உப்புக் கறி


MUTTON UPPUK CURRY. மட்டன் உப்புக் கறி

 MUTTON UPPUK CURRY:-
NEEDED :-
MUTTON - 1/2 KG ( PREFER LAMB)
RED CHILLIES - 10 NOS. REMOVE SEEDS AND MAKE INTO PIECES.
SMALL INION - 15 NOS
GARLIC - 10 PODS
SALT - 2 TSP
OIL - 1 TABLESPN
ORID DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-

PRESSURE COOK THE MUTTON. IF IT IS LAMB THEN NO NEED OF PRESSURE COOKING.. WE CAN DIRECTLY COOK IT IN THE PAN. HEAT OIL IN A PAN . ADD ORID DHAL, ANISEEDS. THEN ADD THE RED CHILLIES AND THEN THE CLEANED HALVED SMALL INION AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. WASH THE MUTTON PRESSURE COOK AND ADD. SAUTE FOR 2 MINUTES AND SPRAY LITTLE WATER AND COOK FOR 2O MINUTES IN A LOW FIRE . STIRR OCCSIONALLY. ADD SALT AND COOK FOR 2 MINUTES. STIRR WELL AND SERVE HOT WITH RICE AND CHAPPATI.

மட்டன் உப்புக் கறி:-
தேவையானவை:-

மட்டன் - 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் - 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்

நன்றி தேநூஸ் ரெசிப்பி 
Download As PDF

காளான் க்ரேவி..


MUSHROOM GRAVY.. காளான் க்ரேவி..

MUSHROOM GRAVY..:-
NEEDED:-
MUSHROOM - 1 PACKET
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
GINGER - 1 INCH PIECE
GARLIC - 4 PODS
RED CHILLI POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 1 TSP
GARAM MASALA - 1/4 TSP
TURMERIC POWDER - 1 PINCH
SUGAR - 1/4 TSP
SALT - 1/2 TSP
OIL - 2 TSP

METHOD:-

CLEAN AND CUT THE MUSHROOMS INTO 4 PIECES EACH.. PARABOIL FOR 3 MINUTES AND STRAIN THE WATER ., KEEP ASIDE. GRIND ONION., TOMATO SEPERATELY. GRIND GINGER AND GARLIC. HEAT OIL IN A PAN ADD ONION PASTE .. SAUTE TILL BROWN. ADD GINGER GALIC PASTE AND FRY WELL.. TILL OIL SEPRATES. ADD CHILLI PWDR., CORRIANDER PWDR., TUMERIC., GARAM MASALA., SALT AND SUGAR.. FRY FOR 1 MIN AND ADD TOMATO PUREE OR PASTE.. ADD MUSHROOMS AND POUR 1 TUMBLER WATER .. STIRR WELL AND COVER IT AND COOK FOR .5 MIN AND SERVE HOT WITH NAN OR CHAPPATIS OR PHULKAS.. KULCHAS OR FRIED RICES..

காளான் க்ரேவி:-

தேவையானவை :-
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

காளானை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் தண்ணீரில் போட்டு அல்லது மைக்ரோ வேவில் அரை வேக்காடாக வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். வெங்காயம்., தக்காளியை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி., பூண்டையும் அரைத்துக்கொள்ளவும்.. பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.. பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்.. நன்கு வதக்கி., எண்ணெய் பிரிந்ததும் ., மிளகாய்ப் பொடி., மல்லிப்பொடி., மஞ்சள்பொடி., கரம் மசாலா., உப்பு., சீனி போட்டு வதக்கவும். தக்காளி விழுது., காளான் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து சூடாக நான்., சப்பாத்தி., ஃபுல்கா ரொட்டி.,குல்ச்சா அல்லது ஃப்ரைட் ரைஸுடன் பரிமாறவும்..

நன்றி தேநூஸ் ரெசிப்பி 

Download As PDF

பாதாம் அல்வா செய்முறை


BADAM HALWA. பாதாம் அல்வா.

BADAM HALWA :-


NEEDED :-


BADAM - 100 GMS


SUGAR - 200 GRAMS


GHEE - 200 GRAMS.


MILK - 1 LADDLE.


KEVRA - FEW STRANDS. ( OPTIONAL)


BELL BRAND YELLOW FOOD COLOUR - 1PINCH



METHOD:-


SOAK THE BADAM IN HOT WATER FOR 2 HOURS. REMOVE THE SKIN AND COAARSLY GROUND IT WITH LITTLE MILK. PLACE IT IN A PAN WITH SUGAR. KEEP IT IN STOVE AND STIRR CONTINUOUSLY WITH MEDIUM FIRE. WHEN IT BECOMES THICK AND STICKY TO THE LADDLE REMOVE FROM FIRE AND ADD THE MELTED GHEE SLOWLY STIRRING SIMULTANEOUSLY. STIRR TILL ALL THE GHEE IS ABSORBED. ADD THE SAFFRON STRANDS AND SERVE HOT.



THIS IS A DELICIOUS HALWA AND SERVED IN THE ENGAGEMENTS AND PENN AZAIPPU IN CHETTINAD MARRIAGES .



பாதாம் ஹல்வா;-


தேவையானவை:-


பாதாம் பருப்பு - 100 கி


ஜீனி - 200 கி


நெய் - 20 கி


பால் - 1 கரண்டி


குங்குமப்பூ - சிறிது.


பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.



செய்முறை :-


பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.



இது மிக சுவையான அல்வா. செட்டிநாட்டில் திருமணம் பேசி முடித்துக் கொள்ளும் போதும்., பெண் அழைப்பின் போதும் இது பரிமாறப்படும்.
Download As PDF

ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்


ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்


ஜாக்கிங்கிற்கு தேவையான மிகவும் அடிப்படைப் பொருள் ஒரு ஜோடி ஷூக்கள். வெறும் காலால் ஓடுவது விரைவில் பலவகையான இன்னல்களுக்கு உங்களை ஆளாக்கக் கூடும். ஓடும் பாதையிலுள்ள முட்கள், கண்ணாடித் துண்டுகள், பழைய ஆணிகள் உங்கள் கால்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடும். 

எனவே நல்ல ஷூக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். ஜாக்கிங் போகும் பொழுது அணியும் ஆடைகள் பருத்தியினால் ஆன ஆடைகளாக இருந்தால் மிகவும் சிறந்ததாகும். பொதுவாக வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள பருத்தியினால் ஆன டி.ஷர்ட்களை அணிவது சிறந்ததாகும். 

ஜாக்கிங்கின் போது நாம் அணியும் ஆடையானது ஓட்டத்தைத் தடை செய்யாதவாறு கொஞ்சம் தளர்ச்சியாக இருப்பது நலமாகும். உங்கள் வசதிக்கு ஏற்ப அரைக்கால் சட்டையோ, அல்லது முழுக்கால் சட்டையோ நீங்கள் அணிந்து கொள்ளலாம். 

அதிகாலை வேளையில் வீசும் குளிரான காற்று உங்கள் உடலை நேரிடையாகத் தாக்காதவாறு உங்கள் ஆடைகள் இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் பருத்தியால் ஆன சல்வார்கம்மீஸ் ஆடை மிகவும் சிறந்த ஆடையாகும். 

ஜாக்கிங் செய்வதற்கு அமைதியான பூங்கா, திறந்த வெளி, நன்கு செம்மைப்படுத்தப்பட்ட மைதானங்கள், நகரிலுள்ள பந்தயத் திடல் மைதானங்கள், விளையாட்டுத்திடல்கள் போன்ற இடங்கள் ஏற்ற இடங்களாகும். ஜாக்கிங்கிற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது கரடு முரடாக இல்லாமல் சமதளமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். 

கரடு முரடான பாதைகள் பயிற்சி செய்தால் சில நாட்களில் உங்கள் மூட்டுக் காலில் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடும். மேலும் போக்குவரத்துக்கள் அதிகமுள்ள சாலைகளும் ஜாக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமல்ல. ஏனென்றால், பலவகையான ஊர்திகளிலிருந்து வெளிவரும் கார்பன்-மோனாக்ஸைடு என்ற தீய வாயு உங்கள் உடலின் நலத்தை நாளடைவில் கெடுத்து விடும். 

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் நீங்கள் ஓடும் பொழுது பின்னால் ஊர்திகள் வருகின்றனவா? இல்லையா? என அடிக்கடி உங்கள் கழுத்தைத் திருப்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவதால் உங்கள் கழுத்தில் நிரந்தர வலியை ஏற்படுத்தக் கூடும். 

நம் நாட்டு சூழலில் ஜாக்கிங் செய்வதற்கு சிறந்த நேரம், காலையில் 8 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்குப் பின்பும். மாலைப் பொழுதை விட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்த வேளையாகும். ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இலேசான இளம் தென்றலும், மாசுபடியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உங்கள் உடலுக்கு நல்லது.
Download As PDF

அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்

மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்.
சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


விரவி மஞ்சள்

மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும்.

அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.

மஞ்சள்தூள் ஆவி பிடிங்க

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

துளசி இலை

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

பனங்கிழங்கு

மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

மழைக்கால கசாயம்

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.

மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் நீங்க

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

சாம்பிராணி புகை போடுங்க

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

தும்மல் தீர்க்கும் தூதுவளை

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

பேராசிரியர் ரமணிராஜ்.

சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.

"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீ­ர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.

ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.

அடிக்கடி மூக்கில் தண்­ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியே தண்­ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போதும், காற்றில் உள்ள கிருமிகளை சுவாசிக்கும் போதும் எளிதாக மூளையை தாக்கலாம்.

இப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவுப் பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.

அலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.

காளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.

குழந்தைகளுக்கு சைனஸ் வருமா?

குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.

"காது" கொடுத்துக் கேளுங்க...

ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.

அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.

தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.

காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.

காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?

* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.

* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
Download As PDF

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்


மலச்சிக்கல்  பற்றிய தகவல்.
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும் பற்றிய தகவல்.

1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்
Download As PDF

Tuesday, October 09, 2012

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..!


 சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:
விலங்கு புரதம் வேண்டாம்:

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.
பால்பொருட்களைத் தவிர்க்கலாம்:
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணை உண்மை:
நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.

சமைக்கும் முறையை மாற்றுங்கள்:
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

முழுமையாகச் சாப்பிடுங்கள்:
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.

அதிகமாக அலச வேண்டாம்:

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்:
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.

குரங்கைப் பின்பற்றுங்கள்:
இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது நிச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்..!
Download As PDF

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?


 இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque) நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள்.
மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை உண்பதும் ஒரு காரணம். பூண்டு, வெங்காயம் இவைகளை உண்டவுடன் இவற்றில் இருக்கும் மிகக் கடுமையான வாசனை இரத்த ஓட்டத்துடன் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுக் காற்றுடன் வெளியே வருகிறது. ஆல்கஹால் மற்றும் புகையிலை மெல்லுவதும் கூட வாய் துர் நாற்றம் வர காரணம்.

சில உடல் உபாதைகள் சைனஸ் அல்லது டயாபடிஸ் (வாயிலிருந்து ஒருவித இராசாயன வாசனை வரும் இவர்களுக்கு) இருப்பவர்களும் இந்த வாய் துர் நாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

எப்படி இந்த துர் நாற்றத்தைத் தவிர்க்கலாம்?
◦வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்: ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்கவும். பல் மருத்துவரிடம் சென்று மாதத்திற்கு ஒரு முறை பற்களை floss செய்து கொள்ளவும். floss என்பது பிளாஸ்டிக்கினால் ஆன மெல்லிய இழை. இதன் மூலம் பற்களின் நடுவில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை நீக்கலாம். வீட்டிலேயே நாமே செய்து கொள்ளலாம். அதே போல ஈறு களின் ஓரங்களில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அகற்றலாம். ஒவ்வொரு முறை சாப்பிட்டப் பிறகும் வாயை நன்றாக கொப்பளிக்கவும்.
◦நாக்கு வழித்தல்: பற்களை சுத்தம் செய்வது போலவே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாத நாக்கினில் இருக்கும் கிருமிகளும் கூட துர் நாற்றத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் டூத் ப்ரஷிலேயே பின் புறம் நாக்கு வழிக்க வசதியாக டங் கிளீனர் வைத்துள்ளனர். தனியாகக் கிடைக்கும் டங் கிளீனரை உபயோகப் படுத்துவது நல்லது.


 ◦வாய் உலராமல் பார்த்துக் கொள்ளுங்கள்: வாய் நீண்ட நேரம் நீர் குடிக்காமல் இருந்தால் உலர்ந்து போகும். நம் வாயில் ஊறும் உமிழ் நீர் நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் சாப்பிடும் போது உணவுத் துணுக்குகள் உமிழ் நீருடன் கலந்து உணவு குழாய்க்குள் செல்லுகிறது. வாயில் கிருமிகள் தங்காவண்ணம் உமிழ் நீர் தடுக்கிறது. ஆனாலும் இரவு தூங்கும் போது உமிழ் நீர் ஊறுவது குறைகிறது. காலையில் எழுந்திருக்கும் போது மிகக் குறைந்த அளவு உமிழ் நீர் வாயில் இருப்பதால் வாய் உலர்ந்து போகிறது. அதனால் காலையில் வாய் துர் நாற்றம் உண்டாகிறது. இதற்கு வாய் உலராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது சிறிது நீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது. காபி, தேநீர் போன்ற பானங்கள் வாயை உலரச் செய்யும். இவைகளைக் குடித்தபின் தண்ணீர் குடிப்பது, வாய் உலர்ந்து போகாமல் தடுக்க உதவும்.

 ◦சுத்தமான நீரினால் வாயைக் கொப்பளியுங்கள்: சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரை வாயில் விட்டுக் கொண்டு வாயை மூடிய படியே வாயினுள் எல்லா பக்கங்களிலும் நீரை சுழற்றுங்கள். பிறகு வெளியே கொப்பளித்து விடுங்கள். இதனால் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுத் துணுக்குகள் நீருடன் வெளியே வந்து விடும். பல முறை இதனைச் செய்யுங்கள். காபி, தேநீர் குடித்த பின் வாயைக் கொப்பளிப்பது, அல்லது தண்ணீர் குடிப்பது பற்களின் நிறம் மாறாமல் இருக்கவும், பேசும்போது நாம் குடித்த பானத்தின் வாசனை வராமல் இருக்கவும் உதவும்.
◦சூயிங் கம்: மூலிகைகளினால் ஆன சூயிங் கம் மெல்லலாம். வாய் துர் நாற்றம் இதனால் போகாது என்றாலும், மற்றவருடன் பேசும் போது நம் வாயை மணக்கச் செய்யும்.
◦காரட் போன்றவற்றை நன்கு கடித்து சாப்பிடலாம். நொறுக்குத் தீனியாக வேர்கடலை, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சீஸ் முதலியவற்றை சாப்பிடலாம். இவை பற்களின் மஞ்சள் கறை படிவதைத் தடுப்பதுடன், வாய் துர் நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இவற்றை கடித்து சாப்பிடுவதால் பற்களும் பலமாக ஆகின்றன.
◦எதை சாப்பிட்டாலும் உடனே வாயை சுத்தம் செய்வது மிக மிக நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்டவுடனேயும் – சிற்றுண்டியோ, சாப்பாடோ, முறுக்கு, ஸ்வீட் போன்ற பலகார வகைகளோ – வாயைக் கொப்பளிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். வாய் கொப்பளிக்கக் கூடிய சூழ்நிலை இல்லை என்றால் தண்ணீர் குடித்து வாயை உணவுத் துகள்கள் தங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும்.

 ◦கட்டுப் பல் : தினமும் உங்கள் பல் செட்டை சுத்தம் செய்யுங்கள்.
◦டூத் பிரஷ்: 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றவும். மிருதுவான பிரஷையே பயன் படுத்தவும்.
இவை எல்லாம் உங்கள் வாய் நாற்றத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும் பல் மருத்துவரிடம் சென்று என்ன பிரச்சினை என்பதை அறிந்து வைத்தியம் செய்து கொள்ளுவது நல்லது. அவ்வப்போது பற்களை சுத்தம் செய்து கொண்டு வருவது சாலச் சிறந்தது
Download As PDF

Monday, October 01, 2012

மனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்



நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை.
Download As PDF