Showing posts with label கருத்துரைகள். Show all posts
Showing posts with label கருத்துரைகள். Show all posts

Tuesday, May 01, 2012

தாவரங்கள் உழைத்துக் களைப்படைகின்றனவா?


நாம் உழைக்கிறோம். பிறகு உழைப்பை நிறுத்தி ஓய்வு எடுக்கிறோம். நம்முடைய ஓய்வில் தூக்கம் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் தாவரங்களின் நிலை என்ன? அவை உழைக்கின்றனவா? ஓய்வு எடுக்கின்றனவா?
தாவரங்களின் உழைப்பின் பயன்தான் காய்களும், கனிகளும். தாவரங்களின் உழைப்பின் பயனை நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றின் உழைப்பைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தாவரங்களின் உழைப்பைப் பற்றியே நாம் சிந்திக்காத நிலையில், அவை எப்போது ஓய்வெடுக்கின்றன அல்லது 
தூங்குகின்றன என்று ஏன் யோசிக்கப் போகிறோம்?
தாவரங்கள் மழைக் காலத்தில் ஓய்வு கொள்கின்றன என்று கூறுவது மிகையாகாது. அவை அக்காலத்தில் கும்பகர்ணர்களாகின்றன.
  தாவரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவை உழைத்துக் களைப்படைகின்றனவா?
ஆம், அவை நன்றாக உழைத்துள்ளன. எனவே நல்ல ஓய்வுக்கு அவை தகுதி உடையவை. அவற்றின் பல்வேறு உறுப்புகளும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர்க் காலம் ஆகிய பருவங்களில் தமக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்துள்ளன.
தாவரங்கள் எவ்வாறு உழைக்கின்றன என்று கேட்கலாம். மனிதர்களாகிய நாம்தான் சுவாசிக்கிறோம் என்று எண்ண வேண்டியதில்லை. தாவரங்களும் சுவாசிக்கின்றன. அவற்றுக்கும் உணவு ஊட்டும் உறுப்புகள் உள்ளன. அரும்புகள் தோன்றுகின்றன. அவை மலர்களாகின்றன. காய்கள் தோன்றி, கனிகளாகின்றன. இந்த விந்தை நிகழ்ச்சிகள் யாவும் தாவரங்களின் வெவ்வேறு உறுப்புகளின் இடைவிடாத உழைப்பைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வளவு சிறப்பாகவும், கடுமையாகவும் உழைத்துள்ள தாவரங்களுக்கு ஓய்வு வேண்டும் அல்லவா? ஆகவே மழைக் காலமே அவற்றின் ஓய்வுக் காலம். நாம் ஓய்வெடுக்கையில் எல்லாப் பணிகளையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் போல தாவரங்களும் தமது பணிகளை அறவே நிறுத்தி வைத்துவிடுகின்றன.
மழைக் காலம் தொடங்கும்போது சில விலங்குகள் மாண்டுவிடுகின்றன. அவற்றைப் போல இறக்காமல் வளமாக வாழும் பெரும்பாலான தாவரங்கள், குறிப்பாக இலைகளை உதிர்க்கும் தாவரங்கள் இலையுதிர்க் காலத்தில் இருந்தோ அல்லது வசந்த காலத்தில் இருந்தோ ஓய்வெடுக்கின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் பல்வேறு பாகங்கள் தமது பணிகளை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றன.
மழைக் காலத்தில் தாவரங்களின் உயிரணுக்களில் ஈரம் இருப்பதில்லை. ஈரம் உலர்ந்து விடுகிறது. தாவரங்களில் அடங்கியுள்ள தண்ணீரில் பெரும்பகுதி, இலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான துவாரங்கள் வழியாக வெளியேறிவிடுகிறது.
வேர்களும் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்திவிடுகின்றன. மண்ணின் வெப்பநிலை குறைவதால், வேர் ரோமங்களின் உயிரணுக்களை தண்ணீர் எளிதாக ஊடுருவ முடியாது. அதன் விளைவாக உணவு உற்பத்தி, உணவு உட்கொள்ளுதல் ஆகிய நடைமுறைகள் நின்றுவிடுகின்றன.
வேர்கள் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்தியபிறகு இலைகள் உபயோகமற்றுப் போய்விடுகின்றன. அவற்றில் தாவரங்களுக்குத் தேவையான பல தாது உப்புகள் இருக்கின்றன.
மழைக் காலத்தில் தாவரங்கள் தமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்கின்றன. அவற்றுக்குத் தேவையில்லாத சுண்ணாம்புச் சத்து, சிலிக்கா போன்றவற்றை இலைகளில் இருந்து அகற்றிவிடுகின்றன.
இலைகளில் தாவரங்களுக்குத் தேவைப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தாவரங்கள் அடிமரத்துக்கும், மாச்சத்து அதிகமாக அடங்கியுள்ள தண்டுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. அவை இலைகளின் நரம்புகள் வழியாக அனுப்பப்படுகின்றன.
கடைசியில், தாவரங்களுக்குத் தேவையில்லாத பொருட்களே இலைகளில் தேங்கியுள்ளன. எனவே அவற்றைத் தாவரங்கள் கீழே உதிர்த்து விடுகின்றன.
தாவரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிச் சொல்லும் ஒரு பிரிவு தாவரவியலில் உள்ளது. அந்தப் பிரிவுக்கு `பெனாலஜி’ என்று பெயர். அதன் கிரேக்க மூலச் சொல் `பாட்னோமா’ ஆகும். அதற்கு, `தோன்றுதல்’ என்று பொருள்.

நன்றி செந்தில்வயல் இணையம் ,,
Download As PDF

Saturday, February 11, 2012

பெண்களுக்கான சாஸ்திரங்கள்


பெண்களுக்கான சாஸ்திரங்கள்

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்து முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-
* சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.
* இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.
* அடிக்கடி வீட்டில் அழக்கூடாது . இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல. வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.
* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.
* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
* அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
* கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.
Download As PDF

Sunday, January 29, 2012

"அன்றும் இன்றும் என்றும்."இளையராஜாவின் இசை

இளையராஜா 
"1990 –இளையராஜாவின் இசை  வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).

ஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே!

பாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.

பாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.

இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.

•சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
•பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
•நான் தேடும் செவ்வந்திப்பூவிது – தர்மபத்தினி
•தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்
•பூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு
•ஒரு கனம் ஒருயுகமாக – நாடோடித் தென்றல்


அந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).

ஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொர்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை."
Download As PDF

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி....."

மனதின் ஆரோக்கியம் நம்மிடம் தான் உள்ளது , நமது சோர்வை நாமே தீர்த்துக்கொள்ளலாம். 


உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது. 
சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், ‘தீர்வு’ பிறந்து விடும்.

“மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறதாம் மனச்சோர்வு! 

ஒரே அறைக்குள் அடைந்து கிடங்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது.

கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ பரபரப்பாக நடைபழகி வருவது நல்லதென்கிறார்கள்.


நம்மில் பலருக்கு இயற்கையோடு செலவிட நேரம் இருப்பதில்லை. நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானது இயற்கை. அத்தகைய இயற்கைச் சூழலில் உலவுகிற நேரங்களில் எல்லாம் உள்ளத்தில் உற்சாகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொள்கிறது.

மலைவாச ஸ்தலங்களுக்கோ, இயற்கையின் ஆளுமை நிறைந்த இடங்களுக்கோ சென்று வர, விடுமுறைக் காலம் பயன்பட வேண்டும்.

அடுத்ததாக, நமக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை முக்கிய மில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட, நெருக்கமான நம்பகமான நண்பர்கள் இருக்கிறார்களா என்பதே முக்கியம்.

அவர்களோடு மனம்விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரிக்கும் போது சோர்வு நம்மை விட்டு நீங்குகிறது. சிரிப்பின்போது சத்தம் மட்டுமா வருகிறது?

இருதயத்துக்கும் மூளைக்கும் ரத்தம் பாய்கிறது. தசைகளின் இறுக்கம் குறைகிறது. மனதுக்குள் உற்சாகம் மலர்கிறது.

மனச்சோர்வு அகல இன்னொரு வழியும் இருக்கிறது, உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்றார் கவியரசு கண்ணதாசன்.

நமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில் மட்டும் மனச்சோர்வு அகல்வதில்லை. அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது, நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் என்கிற எண்ணம் பிறக்கிறது. 


அதாவது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாக நமக்கு நாமே உதவி கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். மற்றவர்களுக்குப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

உடலுக்கு ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை, மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.

ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.
 
Download As PDF

Wednesday, December 21, 2011

அமுத தமிழில் பெயர் சூட்டுவோம் 2


குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :




அன்பரசி 
அங்கயற்கன்னி
அங்கயற்கரசி
அன்னக்கீளி
அறிவழகி
அருள்மொழி
அண்ணாதுரை
அருள்
அருள்மணி
அமுதவன்
அறிவழகன்
அறிவு
அழகுச்சொழன்
அகத்தியன்
அருண்மொழி
அகரன்
அம்முவன்
அமிழ்தன்
அரசு
அருளன்
அருணன்
அவனியன்
அறிவன்
அன்பன்
அமுதன்
அணுவன்
அணுவி
அணுவிழி
அணுவை
அறிவரசு
அறிவன்
அன்பன்
அன்பொழில்
அறிவுக்கனி
அறிவோசை
அன்புத்தமிழ்
அரும்பு
அகழ்விழி
அணிமாலை
அதியன்
அமிழ்தினி
அமுதினி
அரவரசன்






ஆதித்யன்
ஆதவன்
ஆதித்தமிழன்
ஆதிரை
ஆடாலன்
ஆற்றலரசு
ஆடலரசு
ஆதன்






இளவரசன்
இனியாழ்
இன்ச்சொல்
இரும்பொறை
இளங்கோ
இனியன்
இன்பன்
இறையன்பு
இறைவன்
இசைக்கோ
இசைமனி
இசைவன்
இமையன்
இசையள்
இசையன்
இனியள்
இனியன்
இசையமுதன்
இசை
இசைமொழி
இசையமுது
இன்பரசு
இனியரசு
இளவன்
இளவள்
இசைவடிவு
இசைப்பண்
இசைப்பொழில்
இசைதமிழ்
இளங்கதிர்






ஈகன்
ஈகவரசு
ஈகையரசு
ஈழமுது
ஈழமுகில்






கலைமயள்
கலையரசி
கலைக்கொடி
கயல்விழி
கண்மணி
கனிமொழி
கபிலன்
கதிர்
கலையரசன்
கலையரசு
கனியரசு
கனிமகள்
கதிர்மகள்
கதிர்மொழி
கனிமொழி
கதிரண்
கதிரணு
கண்மொழி
கலைகோ
கலைமதி
கலைமலர்
கலைப்பூ
காந்தள்
கார்முகில்
கலைமொழி
கலைக்கோ
கலையரும்பு
கவின்
கவின்மொழி
கன்னல்
கனியன்





கா


கார்முகிலன்





கு


குற்றாளன்
குழலி




மா


மாசிலா
மாதவி








மலர்விழீ
மல்லி
மணிக்கொடி
மணிபொழி
மதியழகன்
மலரவன்
மணிமாறன்




மு


முகிலன்










ஒப்பில்லாமணி






பி




பிறைசூடன்






யா



யாழ்ச்செல்வன்
யாழ்மணி
யாழினி




வி



விண்ணவன்
வினையரசு
வின்மணி  




பொ


பொண்ணி

பொன்மணி



பூ



பூங்குழலி





சொ


சொல்வளவன்




தா


தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்





செ



செந்துரன்
செந்தமிழரசன்
செல்வநிலா





தமிழரசி
தமிழ்ச்செல்வி
தமிழன்பன்
தமிழ்ழகன்
தமிழ் மணி
தமிழ்கோ
தாமரை
தவமலர்
தமிழ்மதி
தமிழமிழ்தன்
தமிழினி
தமிழமுதன்
தழலன்
தமிழ்யாழ்




தே



தேன்மொழி
தென்றல் 





சு


சுடரோள்
சுடரவன்
சுடரொளி
சுடர்மதி







உதய மனி




சீ



சீராளன்
சீர்மையன்






வை


வையை






வளர்மதி



வா


வான்மதி



வெ

வெண்மதி
வெண்நிலா








எழில்
எழிலாள்
எழிலன்
எழிற்கோ
எழில்மொழி
எழிற்பா
எழில்மதி
எழில்நிலா
எழிற்கதிர்
எழிலன்பன்




பா


பாவலன்
பாவரசு
பண்மொழி
பாமலர் 


Download As PDF

அமுத தமிழில் பெயர் சூட்டுவோம் 1

உலகின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் மாறிப் போனவை பலப்பல. மாறாதிருப்பவை ஒரு சிலவே . அவற்றுள் முன்னைப் பழமைக்குப் பழமையாய் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் இருப்பது நம் தாய்த்தமிழும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கமும் தமிழகமும் ஒத்த வளம் உடையதாய் இருந்தன. கடற்கலம் கொண்டு தமிழன் வணிகம் புரிந்தமை இதற்குச் சான்று கூறும்.

வாழ்வியல் தத்துவத்தால் வளத்தால், கல்வியால் அறிவியலால், வேளாண்மையால் பெரும் உச்சத்தில் இருந்த தமிழர் இன்று எல்லாவற்றையும் மெல்ல இழக்கும் கொள்கையர் ஆயினர் முன்னோர் தந்ததை வளர்க்க வழிகாணாவிடினும் அதனை அழிக்கத் தலைப்பட்டு இருப்பது வரலாற்றுப் பிழையாகும்.

தமிழ்க் குடும்பங்கள் இன்று தாம் யார் என அறிதலையும் உலக மாந்தரில் தமக்குள்ள  பண்டைய இடம் குறித்தும் இன்றைய இடம் குறித்தும்  சிந்தித்தலையும் செய்யக் கூடாத செயலாகக் காணுகின்றன. ஆகவேதான் தங்களின் குழந்தைகளுக்கு அடையாளங்களை அறியாது இழந்துவரும் நிலை தொடர்கிறது. 

அவற்றில் ஒன்றுதான் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்ச் சூட்டாமல் பிறமொழிக் கலப்பில் பெயர்ச் சூட்டி மகிழும் போக்கு இது மேம்போக்காய் நோக்கினும், தன் தாய்மொழியில் குழந்தைகளுக்குப்  பெயர்ச் சூட்டி  கொள்ளாத மக்களின் அறிவுடைமை, அவ்வினத்தின் பண்பாடு, மொழியின் சிறப்பு அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கின்றன அல்லவா?

‘’ ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்து விடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்’’ என்றான் இங்கர்சால்.

ஓர் இனம் எதை இழந்தாலும் மீட்டுக்கொள்ள இயலும். ஆனால் தாய்மொழியை இழப்பது என்பது இந்த உலகில் வாழ்வதற்கான வாழ்வுரிமையை இழப்பதற்கு ஒப்பாகும். பின்னர் அகதி வாழ்வே நிலையாகும். பிறரை அண்டிப்பிழைக்கும்  வாழ்வு தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் தாய்மொழியின் கூறுகள் பல்வகையால் ஓர் இனத்தின் வாழ்வியல் நிலைகள் அனைத்திலும் பரவிக்கிடக்கின்றன. தாய்மொழி அம்மொழி பேசும் மக்களின் வாழ்விட, வாழ்நில ஆவணமும் ஆகும். தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை இழக்கும் இனம் நாடோடியாய் மாறும்; ஒவ்வொரு அடையாளங்களாய் இழந்து இறுதியில் தங்களுக்கான நிலமின்றி பிறநாட்டாரை ஒண்டி அண்டி பிழைக்கும் அவலநிலைக்கே ஆளாகும்.

ஆகவேதான் உயர்நிலை கண்ட நாட்டினர் அனைவரும் தம் அனைத்து அடையாளங்களையும் தத்தமது தாய்மொழியைக் கொண்டே அமைத்து கொள்கின்றனர். அது கல்வியாயினும், நீதியாயினும், அரசாட்சியாயினும், பண்பாடு ஆயினும், பெயராயினும், தங்கள் மொழிக்கும் நிலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைக்கின்றனர்.

அவ்வகையினாலேயே தமிழர்களாகிய நாமும் நம் முன்னோடிகள் நம்மிடம் தந்துப்போன மொழியையும், நிலத்தையும், பண்பாட்டையும், காத்திட நம் தாய்மொழியாம் தமிழில் நம் குழந்தைகளுக்குப் பெயர்ச் சூட்டி மகிழ்வோம்.



குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :


பாகம் 2 பின் வருமாறு , 
Download As PDF

Thursday, December 08, 2011

மாரத்தான் ஓட்டம்!

"மாரத்தான்' 
என்பது ஒருவர் நிற்காமல் தொடர்ந்து 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும் போட்டியாகும். கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களாக ஸ்பார்ட்டாவும், ஏதேன்சும் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின. ஒரு சமயம் ஏதென்ஸ் நகரத்தின் மீது பெர்சியர்கள் போர் தொடுத்தனர். "மாரத்தான்' என்ற இடத்தில் போர் நடந்தது. அப்போது, ஏதேன்சு நகர தலைவன் பிற நாடுகளுக்கு தனது தூதுவனை அனுப்பி தனக்கு உதவும்படி வேண்டினான். அத்தூதுவர்களில் ஒருவன் ஸ்பார்டா நகரை கரடு முரடான பாதைகளில் நிற்காமல் ஓடி, போர் செய்தியை தெரிவித்து விட்டு, மீண்டும் போர் நடைபெறும் "மாரத்தான்' என்னும் இடத்திற்கு வந்து பெர்சிய வீரர்களை எதிர்த்து போரிட்டான். முடிவில் பாரசீகம் தோல்வியுற்றது. தன்னாடு வெற்றி பெற்ற செய்தியை தெரிவிக்க ஏதென்சு நகர் நோக்கி ஓடினான். தன்னாட்டு மக்களுக்கு செய்தியை தெரிவித்து விட்டு, மறுநிமிடம் மூச்சு திணறி தன் உயிரை இழந்தான். எனவே, தொடர்ந்து நீண்ட தூரம் நிற்காமல் ஓடும் ஓட்டத்தை, "மாரத்தான் ஓட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
 நன்றி lankasri  இணையம் 
Download As PDF

முல்லைப் பெரியாறு அணையின் உண்மை பிரச்னையும் அதன் தீர்வும்

என் இனிய நண்பர்களே வணக்கம் , 
இன்று நாம் முல்லைப் பெரியாறு  அணையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையும் அதற்க்கான தீர்வு என்ன என்பதையும் கீழே உள்ள குறும்படத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
பாகம் 1 :

பாகம் 2 :


நன்றி இந்த குறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும் , அதை வெளயிட்ட இனைய தளங்களுக்கும் .
Download As PDF

Tuesday, November 29, 2011

உனது தேவை சுயநம்பிக்கை

 ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறுப்பதையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பூஜிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

* மனதுக்கு பிடித்த வேலையை செய்ய மூடனாலும் முடியும், எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்ததாகச் செய்பவன் அறிவாளி.
* பிறர் நலனுக்காகச் சிறிது பணி செய்தாலும் உனக்குள் உள்ள சக்தி விழித்துக் கொள்ளும். பிறருக்காக சிறிது சிந்தித்தாலும், உன் உள்ளத்தில் சிங்கத்தின் பலம் வந்து சேரும்.
* பணத்தால் எதுவும் ஆவதில்லை, பெயரால், புகழால், கல்வியால் எதுவும் ஆவதில்லை, அன்பால் அனைத்தும் நிறைவேறும்.

* எவரையும் "நீ கெட்டவன்' என்று சொல்லாதே, "நீ நல்லவன் தான், இன்னும் நல்லவனாக ஆகு' என்று தான் கூற வேண்டும்.
* உன்னை நீயே வெறுக்காமலிருப்பது தான் முதற் கடமையாகும். முன்னேற்றமடைய முதலில் சுயநம்பிக்கை அவசியம் தேவை.
- விவேகானந்தர் 
Download As PDF

Thursday, November 17, 2011

சில சமுக உணர்வுகளில்

மனைவியுடன் இருந்தால்...
என் உறவினர் ஒருவர், திருமணம், சடங்கு, நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும், தன் மனைவியையும் தவறாமல் அழைத்துச் செல்வார். இதனால், "இழவு வீட்டுக்கு போகும் போது கூட, பொண்டாட்டி இல்லாமல் போக மாட்டான்ய்யா...' என்று, பல்வேறு விதத்தில் அவரை உறவுகளும், நண்பர்களும் கிண்டல் செய்வதுண்டு.
ஒருநாள், அவரிடம், "ஏன் எங்கு சென்றாலும், மனைவி இல்லாமல் செல்வதில்லை...' எனக் கேட்டேன். அதற்கு அவர், "சம்சாரம் கூட ஒரு இடத்துக்கு போறதால், பல நன்மைகள் இருக்கு. முதலில், நண்பர்கள் கூட்டம் நம்மை தொந்தரவு செய்யாது. "மனைவியோடு இருக்காண்டா...' என, ஒதுங்கிக் கொள்ளும். இதனால், "தண்ணி', தம், அரட்டை, அதனால் வம்பு, சண்டை, கெட்டவன் என பெயரெடுப்பது எல்லாம் தவிர்க்கப்படும்.
"தம்பதியராய் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், குடும்பத்துடன் வந்த சந்தோஷம் அவ்வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கும். மேலும், மனைவியுடன் இருப்பதால், நாமும் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்; எந்தத் தவறும் நடக்க வாய்ப்பே இல்லை. நீங்களும் இதை பின்பற்றி வாருங்கள்; அதன் பலனை அப்போது புரிந்து கொள்வீர்கள்...' என்று ஒரு போடு போட்டார்.
அவர் சொன்னது உண்மை தான் என புரிந்தது. அவருக்கு ஒரு சபாஷ் போட்டு, மனைவி இல்லாமல் இனி எங்கும் செல்வதில்லை என முடிவும் எடுத்தேன்.
நண்பர்களே... பொது நிகழ்ச்சிகளில் மனைவியுடன் கலந்து கொள்ளுங்கள்; பல தவறுகளை அது தவிர்க்க உதவும். 


எங்கே போனது மனிதநேயம்?
சில நாட்களுக்கு முன், சென்னை மாநகர பஸ்சில், "பீக்-அவர்' நேரத்தில், பயணம் செய்து கொண்டிருந்தேன். பயணத்தின் நடுவில், டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, எங்கோ சென்று விட்டார். சில நிமிடங்கள் கழித்து, அவர் திரும்பி வந்ததும், பயணிகள், அவரை பிடிபிடி என்று பிடித்து விட்டனர். அதற்கு அவர், சிறுநீர் கழிக்கச் சென்றிருந்ததாகக் கூறினார். அதையும் பொருட்படுத்தாமல், சிலர், அ<லுவலகத்திற்கு தாமதமாகி விட்டதாகக் கூறி, அவரிடம் சண்டையிட்டனர்.
அதற்கு அவர், தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதாகவும், அதனால் சிறுநீர் பிரச்னையில் அவதிப்படுவதாகவும் தெரிவித்து, மன்னிப்பு கேட்காத குறையாக வண்டியை கிளப்பினார்.
அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன உலகமிது? டிரைவரும் மனிதர் தானே? சிறுநீர் வந்தால் அவர் என்ன செய்வார்? எங்கே போனது மனிதநேயம்?
இவர் வசைமொழி வாங்குவதற்கு, போக்குவரத்துத் துறையும் ஒரு காரணம். இவர் போன்ற சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு, அலுவலகப் பணி தரலாமே!
யோசிப்பரா?


வளர்ந்த குழந்தைகளின் நினைவாற்றல்!
குழந்தைகளின் நினைவாற்றல் பற்றி, அக்., 30, 2011 வாரமலர் இதழில், இ.உ.இ., பகுதியில் கிரிஜா ஜின்னா, ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதோ இந்த, "வளர்ந்த குழந்தை'களின் நினைவாற்றலை கேளுங்கள்...
சென்னையில் மிக பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி அது. அந்தக் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு, "டிவி'யில் பேட்டி கொடுத்தனர். சிரிப்பு வரவழைக்கும், சுவையான நிகழ்ச்சி அது.
பெண்களின் பொது அறிவுத் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிப்பதாக, அந்த, "அண்ணாச்சி' சில கேள்விகளைக் கேட்டார்.
அதில் ஒன்று, "கணித மேதை யார்?' என்பது!
நவ நாகரிக உடையில் இருந்த அந்தப் பெண்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? "எங்களுக்கு கணக்கு வகுப்பு நடத்தும், பேராசிரியை தான்...' என, பதில் தந்தனர். சிரிப்பு நிகழ்ச்சி நடத்திய அந்த, "அண்ணாச்சி'க்கு, சிரிப்பை மீறி, "பகீர்' அதிர்ச்சி தான் ஏற்பட்டது. மீண்டும் அதே கேள்வியை கேட்டார். "திருதிரு'வென முழித்து, அசடு வழியும் வாயை மூடிச் சிரித்தனர், அந்தப் பெண்கள்!
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கேட்டவர்களை ஒடுங்க வைத்து, "பெண்களுக்கு படிப்பு வேண்டும்...' என, பாரதியார் ஒரு பக்கம் குரல் கொடுக்க, "நான் பட்ட கஷ்டம், என் குழந்தை படக் கூடாது...' என, தாய் தன் பெண்ணை கல்லூரிக்கு அனுப்ப, அப்பெண்ணோ, "கண்டதே காட்சி... கொண்டதே கோலம்...' என, "கிறுகிறுக்க' வைக்கும் நிலையில், "படிக்கிறது!' என்னத்தைச் சொல்ல!
 நன்றி தினமலர் ( இது உங்கள் இடம் )
Download As PDF

குழந்தைகள் பற்றி சில குறிப்புகள்

கொலுசு அணிவிப்பது ஏன்? 
கொலுசு அணிவது என்பது ஓல்டு பேஷன் என்பவர்களும் உண்டு. ஆனால், இந்த பாயிண்டுகளை படித்து பாருங்கள், "கொலுசு' ஆச்சரியப்பட வைக்கும். தங்கத்துக்கு அடுத்து அத்தனை பெருமைகளும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் சொல்லியிருக்கின்றன. நம் உடம்பில் உள்ள தேவையில்லாத சூட்டை உடனுக்குடன் வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இன்னொரு ஸ்பெஷல் விஷயம் சருமத்தை ஆரோக்கியமாக ஜொலிக்க வைக்கும்.
குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.
குழந்தை அடுத்தடுத்த பருவங்களில் அதாவது, தவழும்போது நடக்க தொடங்கும்போதும் குழந்தையின் கொலுசு சத்தம் கேட்பது அம்மாவுக்கு இனிய சங்கீதம் மட்டுமல்ல... குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறிவிக்கும் மணியும் கூட.
கொலுசு ஓசை கேட்காவிட்டால் குழந்தை எங்கு சென்றுவிட்டதோ என்று அச்சம் கொள்வாளாம் அந்த குழந்தையின் அம்மா!
வாவ்! இனியாவது உங்க குழந்தை செல்வங்களுக்கு கொலுசு போடுவீங்கதானே!


பெற்றோரின் வசீகரம்!
குழந்தையை கொஞ்சுபவர்கள் அது அம்மா ஜாடை, அப்பா ஜாடை, மாமா ஜாடை என சொல்லி சொல்லி மகிழ்வர். லண்டனில் செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் "பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் வாரிசுகளில் மகன், மகள் யாருக்கு தொடரும்' என்ற ஆய்வை பேராசிரியர்கள் டேவிட் பெரட், எலிசபெத் கார்னவெல் ஆகியோர் செய்தனர்.

ஆய்வின் முடிவு...
குடும்பத்தில் மரபு வழியாக சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தொடரும். அந்த வகையில் ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக தொடருவதில் வசீகரமும் ஒன்று. 
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் போட்டோ ஆல்பம் உடல் ரீதியான சில விஷயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம். அதில் பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. பல குடும்பங்களில் பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் மகள்களிடம் தொடர்வதை தான் காண முடிந்தது. அதே சமயம், அவர்களை போல, மகன்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.
தாய், தந்தை இருவரிடத்தும் உள்ள வசீகரம் தான் மகள்களுக்கு முழுமையாக போய் சேருகிறது. ஆனால், மகன்களுக்கு முழுமையாக போய் சேருவதில்லை. இதற்கு மரபு ரீதியாக காரணங்கள் இருக்கலாம். அது பற்றி இன்னும் ஆராய வேண்டும். இதுபோல, புஜபலத்துடன் தந்தை இருந்தால், அவருக்கு அதே மாதிரி நல்ல ஆஜானுபாகுவான மகன்கள் வளருவர் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


குழந்தையின் வலி- அலட்சியம் வேண்டாம்!
வயிற்றுவலி, தலைவலி, கால்வலி, இவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதாக குழந்தை சொன்னால், "ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்கு சாக்கா... எல்லா சரியாயிடும்' என்று அதட்டும் பெற்றோர்களே அதிகம்.
எல்லா நேரங்களிலும், எல்லா குழந்தைகளும் இப்படி படிப்பிலிருந்து தப்பிக்க மட்டுமே வலிகளை காரணம் காட்டுவதில்லை. அவர்களுக்கு நிஜமாகவே வலி இருக்கலாம். அந்த வலியின் பின்னணியில் பல காரணங்களும் இருக்கலாம்.
15 முதல் 20 சதவீத குழந்தைகள் நாள்பட்ட வலியில் அவதிப்படு கின்றனர். குழந்தைகளுக்கு வருகிற வலி, பெரியவர்களுக்கு வரும் வலியிருந்தும் வேறுபட்டது. காரணம் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகளால் வலி உணர்ச்சியை தெளிவாக சொல்ல முடியாது. வலியை தவிர மற்ற அறிகுறிகளே பிரதானமாக இருக்கும். வலியை கண்டுபிடிக்கிற முயற்சியில், பல மருத்துவர்களும் பல அறிவுரைகளை சொல்வதால் பெற்றோர் குழம்பியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் என்ன செய்தும் வலி நிற்கவில்லை என்கிறபோது எக்கசக்க மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். 5 வயதுக்கு மேலான குழந்தைகளால்தான் வலியை ஓரளவு உணர்த்த முடியும். வலியினால் அவதிப்படுகிற குழந்தைகளிடம் வழக்கத்துக்கு மாறான எரிச்சல், சோர்வு, அமைதி போன்றவை காணபட்டாலோ, மூர்க்கத்தனம், தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, செயல் திறனிலோ, கவனத்திலோ குறைவு உண்டானாலோ... அவற்றை வலிக்கான அறிகுறிகளாக கணக்கில் கொள்ளலாம். 
இந்த வலிகளுக்கு உடல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அதாவது உடலுக்குள் உள்ள நோயின் விளைவாக வலி ஏற்படலாம். ரத்த சோகை, நுரையீரல் பிரச்னை, புற்றுநோய், உடல் சோர்வு நோய், சிறுநீர் பிரச்னை போன்றவற்றால் கூட வலி வரலாம்.
அடுத்து மனரீதியான மற்றும் சமூக ரீதியான காரணங்கள்... பள்ளியில் ஏற்படும் பிரச்னைகள், பெற்றோருடன் உண்டாகிற சண்டை, பிரிவு, மரணம், நெருங்கிய உறவினரின் பிரிவு, இடமாற்றம், பராமரிக்கிற நபர் மாறுதல் போன்ற பல விஷயங்கள்....
12 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கே வலி அதிகமிருக்கிறது. இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். 30 சதவீதத்தினருக்கு முதுகு வலியும், 50 சதவீதத்தினருக்கு தலைவலியும் இருக்கிறது. வயிற்று வலி பரவலாக இருக்கிறது. வயிற்று வலிக்கு கிருமிகளோ, அப்பென்டிக்ஸ் எனப்படுகிற குடல்வால் பிரச்சனையோ காரணம் ஆகலாம். காலை உணவை தவிர்ப்பது, டென்ஷன் போன்றவற்றால் தலைவலி வரும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. வெறும் மாத்திரைகளால் மட்டுமே குணப்படுத்த கூடியதில்லை. குழந்தைகளின் வலிகள். அவர்களுக்கென தனி மருந்து முறைகளும், ஆலோசனைகளும் நிச்சயம் தேவை.
இனி உங்கள் குழந்தை வலிக்கிறது என்று சொன்னால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது!
Download As PDF

Thursday, November 10, 2011

வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின


மனித வாழ்வியலின் காலங்காலமாகப் பட்டுணர்ந்த பட்டறிவின் காரணமாகத் தோன்றியவையே பழமொழிகள். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் பல்வேறு நேர்வுகளில் பலவித நிகழ்வுகளைச் சந்தித்திருப்பர். அந்நிகழ்வுகளில் நல்லதும் நடந்திருக்கும் கெட்டவையும் நடந்திருக்கும். அவற்றை உற்று நோக்கிச் சில காரணத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி உரைத்த வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின.


நாட்டுப்புற வாய்மொழி இலக்கியக் கூறுகளுள் ஒன்றான
 பழமொழியை முதுமொழி எனத் தொல்காப்பியம்


"நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் 
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முத்தற்கு வரும்
ஏது நுதலிய முதுமொழி என்ப"

என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இன்றும் மலையாள மொழியில் பழமொழியைப் பழஞ்சொல் என்றே கூறுவதைக் காணலாம்.


"பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தமை தோழி"

என அகநானூறும்,

"நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றே"

எனச் சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கும் இலக்கிய மேற்கோள்கள். பழமொழியானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற வகையில் கையாளப்பெற்று வருகின்றது.

தமிழகக் கிராமப்புறங்களில் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பல வகையான பழமொழிகள் கையாளப்பட்டு வருகின்றன. பேச்சு வழக்கில் இன்றைக்கும் பாமரமக்கள் மற்றும் படித்த மக்களால் பேசப்பட்டு வரும் பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளது இக்கட்டுரை.


பழமொழிகள் கையாளப் பெறும் சூழல்கள்:-
அனுபவத்தால் பிறக்கும் பழமொழிகள் அன்றாடப் பேச்சு வழக்கில், இன்ப நிகழ்வுகளின் போதும், துன்ப நிகழ்வுகளின் போதும், ஏசலாகவும், கேலியாகவும் அண்டை வீட்டாருடன் சண்டைகள் போடும்போதும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் (சாடை பேசுதல்) சாடுகின்றபோதும் பழமொழிகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் பிறக்கும் பழமொழிகளை,
1. உவமையாக வரும் பழமொழிகள்.
2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்.
3. பொதுவாக வருவன.



1. உவமையாக வரும் பழமொழிகள்:-

1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.
2. கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
3. பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
4. எருமை மாட்டில் மழை பெய்தது போல.
5. இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
6. தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
7. குப்பைமேடு கோபுரமானது போல.
8. குறைகுடம் கூத்தாடுவது போல.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்:-

1. பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
3. மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
4. ஆடு பகை குட்டி உறவு.
5. நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
6. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
7. அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
8. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
9. நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.
10. ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.
11. பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
12. பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
13. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன.

3. பொதுவான பழமொழிகள்

1. நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
2. நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
3. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
4. தன் முதுகு தனக்குத் தெரியாது.
5. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
6. வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
7. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
8. கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
9. குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
10. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
11. உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
12. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
13. மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
14. சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
15. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
16. ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.
17. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
18. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
19 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
20. பேராசை பெரும் நட்டம்.
21. முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
22. ஆசை காட்டி மோசம் செய்தல்.
23. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
24. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
25. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
26. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
27. அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
28. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
29. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
30. தன் வினை தன்னைச் சுடும்.
31. நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
32. ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.

இவை போன்று வரும் பழமொழிகள் பெண்களாலும், ஆண்களாலும், படித்தவர்களாலும், பாமர மக்களாலும் அவர்கள் இருக்கும் இடம் கருதியும் சூழலுக்குத் தக்கவாறும் கையாளப்படுகின்றன.

மேற்கூறப் பெற்றுள்ள பழமொழிகள் தமிழகத்தில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பேசி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. 



மிக்க நன்றி செந்தில்குமார் ( facebook )  நண்பர் ....  
Download As PDF