Showing posts with label இனைய செய்திகள். Show all posts
Showing posts with label இனைய செய்திகள். Show all posts

Wednesday, March 04, 2015

கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் பார்க்கலாம் ,,,

cvhcwHC.jpg



பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென வைரஸ் புரோகிராம்கள் தாக்கும் நிலை வராது. இதற்கு ஒரு முறை தேடி அறிய அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 10 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாமே. இதற்கு, வைரஸ் புரோகிராம்கள் எங்கெல்லாம் தங்கி இயங்கும் குணம் கொண்டவையாக உள்ளன என்று அறிந்திருப்பது நல்லது. அந்த இடங்களை இங்கு காணலாம்.


1.ஆட்/ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs): 


சிறிதும் தேவைப்படாத புரோகிராம்கள் என்று ஒரு வகை உள்ளன. இவற்றை PUPs அல்லது Potentially Unwanted Programs என அழைப்பார்கள். இந்த புரோகிராம்கள், வழக்கமான பயனுள்ள புரோகிராம்களுடன் தொற்றிக் கொண்டு நம் கம்ப்யூட்டர்களை வந்தடையும். இதற்குக் காரணம், நாம் தரவிறக்கம் செய்திடும் புரோகிராம்களை, அதற்கான நிறுவன இணைய தளத்திலிருந்து இல்லாமல், வேறு ஒரு இணைய தளத்திலிருந்து, அதே புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திருப்போம். அப்போது உடன் ஒட்டிக் கொண்டு சில புரோகிராம்கள் தரப்படும். இந்த புரோகிராமினை உடன் இணைத்து அனுப்ப, சில வேளைகளில், மூல புரோகிராம்களை வடிவமைத்தவர்கள் அனுமதி அளித்திருப்பார்கள்.


அவர்களுக்கு இணைக்கப்படும் புரோகிராம்கள் குறித்தும் அவை தரக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் அறியாமல் இருப்பார்கள். இவற்றைக் கண்டுபிடித்து நீக்கிவிடலாம். இதற்கு Start மெனுவிலிருந்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Add/Remove Programs அல்லதுPrograms தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப மாறுபடும். இந்த இரண்டும் இல்லை என்றால், Programs and Featuresஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அண்மைக் காலத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைப் பட்டியலிடும். இந்த பட்டியலைப் பார்த்து, நமக்குத் தெரியாமல், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட, தேவையற்ற புரோகிராம்களை நீக்கவும். 



2. பிரவுசர்களைச் சோதனை செய்க:


 நம்மை அறியாமல் நாம் தவறான ஒரு லிங்க்கில் கிளிக் செய்திடுவதும், அறியாத சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுவதும், கெடுதல் விளைவிக்கும் பிரவுசர் ஆட் ஆன் புரோகிராம்களையும், ப்ளக் இன் புரோகிராம்களையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிய வைக்கும். இவை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தனிப்பட்ட தகவல்களைத் திருடும்; மற்றும் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே, உங்கள் பிரவுசரில் உள்ள ஆட் ஆன் புரோகிராம்கள் அனைத்தையும் அவை சரியானவை தானா? நீங்கள் அறிந்துதான் அவை உள்ளே பதியப்பட்டனவா என ஆய்வு செய்திடவும். தேவையற்றவற்றை உடனடியாக நீக்கவும். இவற்றைச் சில வேளைகளில் ஆட் / ரிமூவ் புரோகிராம்ஸ் பக்கம் வழியாக நீக்க வேண்டியதிருக்கும். பிரவுசர்களில் இவற்றை நீக்கும் வழிகளைப் பார்க்கலாம்.


குரோம்: பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்கவும். அதில் முகவரி கட்டத்தில் chrome://extensions என டைப் செய்து எண்டர் தட்டவும். தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, ட்ராஷ் ஐகானில் கிளிக் செய்திடவும். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறக்கவும். வலது மேல் மூலையில் உள்ள கியர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இனி Manage Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இக்கு தேவைப்படாத ஆட் ஆன் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Disable அல்லது Remove என்பதில் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில், இதே போல பக்கம் ஒன்றைத் திறந்து about:addons என அட்ரஸ் பாரில் டைப் செய்து எண்டர் தட்டவும். தேவையற்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து Remove என்பதில் கிளிக் செய்தால், அவை அன் இன்ஸ்டால் செய்யப்படும்.


3. இயக்கப்படும் சேவைகளும் இயக்க வழிகளும்:



சில வைரஸ் புரோகிராம்கள், மிகத் தந்திரமாக, நாம் காண இயலாதபடி ஒளிந்து கொண்டிருக்கும். நம் கம்ப்யூட்டரில் இயங்கும் சேவைகள் வழியாகத்தான் இவற்றை அறிய முடியும். நம் கம்ப்யூட்டர் இயங்கும் போது என்ன என்ன சேவைகள் நமக்கு, எந்த புரோகிராம்களினால், வழங்கப்படுகின்றன என்று Task Manager வழியாக அறியலாம். டாஸ்க் மானேஜரை இயக்க கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட் (Ctrl + Alt + Del ) கீகளை அழுத்தவும். இந்த விண்டோவில் கிடைக்கும் முதல் டேப் Processes என்று இருக்கும். இந்த பட்டியலைப் பார்க்கவும். இதில் நீங்கள் கண்டிராத சேவை உள்ளதா எனப் பார்க்கவும். இருப்பின் அவற்றை முதலில் நிறுத்திப் பார்த்து, பின்னர் அதன் மூல புரோகிராமினை நீக்கலாம். இவற்றை அறிய, சந்தேகப்படும் சேவையின் பெயரைத் தேடுதல் கட்டத்தில் அளித்து கண்டறியவும். இந்த விண்டோவில் அடுத்த முக்கியமான டேப் Servicesஆகும். இதில் உள்ள description வரிசை, இந்த சேவையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும். இங்கு காணப்படும் சேவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அவற்றின் சரியான பெயரைத் தேடி அறியவும். அல்லது ProcessLibrary or FileNet சென்று அதன் பெயருக்காகத் தேடலாம். எப்போது ஒன்றின் இயக்கம் அல்லது சேவை குறித்து நீங்கள் அறிகிறீர்களோ, அது பாதுகாப்பானதா இல்லையா என அறிவீர்கள். அல்லது அதனை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்தும் தெரியவரும். உடனே, அவற்றை வைத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவு எடுத்து செயல்படலாம்.



4. ஸ்டார்ட் அப் சோதிக்க: 


நம் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, பல புரோகிராம்கள், அதன் இயக்கத்திற்குத் துணை செய்திடும் வகையில், சில அடிப்படைச் செயல்பாடுகளைத் தருவதாகவும் திறக்கப்படும். கம்ப்யூட்டர் மூடப்படும் வரை, இவை பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த பட்டியலில், சில வைரஸ் புரோகிராம்கள் தங்களை இணைத்துக் கொள்ளும். இவற்றை msconfig என்ற டூல் மூலம் கண்டறிந்து முடக்கி வைக்கலாம். அல்லது புரோகிராமினைத் தெரிந்து கொண்டு, அவை இருக்கும் இடம் சென்று அழிக்கலாம். முதலில் இயக்கத்தினை முடக்கி வைத்து, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். கம்ப்யூட்டர் இயங்கினால், அதனை நீக்கிவிடலாம். கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், அல்லது அது குறித்து வேறு நோட்டிபிகேஷன் வந்தால், அதனை மீண்டும் தொடங்கும் புரோகிராம் பட்டியலில் இணைத்து இயக்க வைக்கலாம்.

உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது முந்தைய சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து அதில் Run என்பதில் கிளிக் செய்திடவும். கட்டத்தில் msconfig.exe என டைப் செய்து ஓகே தட்டவும். இப்போது எம்.எஸ். கான்பிக் விண்டோ திறக்கப்படும். இங்கு உள்ள டேப்களில் ஸ்டார்ட் அப் (Startup) கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் புரோகிராம் பட்டியலில், தேவைப்படாத புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் விளக்கத்தினைப் படிக்கவும். அதன் பின்னரும் அந்த புரோகிராம் தேவை இல்லை என முடிவு செய்தால், disable செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, எம்.எஸ். கான்பிக் விண்டோ சற்று வித்தியாசமாகக் கிடைக்கும். இருப்பினும் செயல்பாடு ஒரே விதமாகவே இருக்கும்.

Download As PDF

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் தொலைக்க கூடாத சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்களை நாம் தொலைக்கவே கூடாது. ஏதேனும் ஒரு வகையில் அவற்றைப் பதிவு செய்து வைத்து எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
 


விண்டோஸ் ப்ராடக்ட் கீ:


JuK9fug.jpg




 இது சற்றுப் பெரிய விஷயமாகும். ஏதோ காரணத்திற்காக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால், உங்களுக்கு வழங்கப்பட்ட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அவசியம் தேவைப்படும். இது உங்களுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டருக்கான பணம் செலுத்தியமைக்கான ரசீதில் டைப் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது கம்ப்யூட்டரின் சி.பி.யு. கேபின் அடிப்பாகத்திலோ, பக்க வாட்டுப் பகுதியிலோ ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருக்கலாம். எனவே, கம்ப்யூட்டர் வாங்கியவுடன், இந்த ப்ராடக்ட் கீயினை நன்றாகத் தெரியும் வகையில் போட்டோ எடுத்து, அதனை ஒரு ஜேபெக் பைலாகப் பல இடங்களில் பதிந்து வைக்கலாம்.


அதே போல, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்று கேட்கப்படும். முதலில் வழங்கப்படும் பாஸ்வேர்டினை, மறக்க இயலாத வகையில் பதிவு செய்து, மீண்டும் கிடைக்கும் வகையிலான இடத்தில் வைக்க வேண்டும். முதன் முறை பதிவின் போது, மாற்றாக மின் அஞ்சல் அக்கவுண்ட் கேட்கப்பட்டாலோ, தொலைபேசி எண் கேட்கப்பட்டாலோ, நீங்கள் வழங்கியவற்றை நினைவில் கொள்ளும் வகையில், அதனை ஒரு டாகுமெண்ட்டில் பதிவு செய்து, அந்த டாகுமெண்ட்டினையும் பத்திரமாக வைக்கவும். உங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் உங்கள் முகவரிக்கே இந்த டாகுமெண்ட்டினை அஞ்சல் செய்து, சேவ் செய்து வைத்திட்டால், எங்கிருந்து வேண்டும் என்றாலும், அதனைத் திரும்பப் பெறலாம்.



ஆக்டிவெஷன் கீகள்:


0Pfugas.png

 ப்ராடக்ட் கீ என்பது, செக்யூரிட்டி புரோகிராம் போன்ற சாப்ட்வேர் ஒன்றை இயக்குவதற்கான குறியீடுகள் கொண்ட தொடர் டெக்ஸ்ட் அல்லது எண் அல்லது இரண்டும் கலந்தவையாக இருக்கும். சில வேளைகளில் இந்த தகவல்கள் ஒரு மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு, அவற்றை டவுண்லோட் செய்திடுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். நீங்கள் குறிபிட்ட புரோகிராமினை டிஸ்க் வடிவில் வாங்கியிருந்தால், அது ஒரு சிறிய தாளில் அச்சிடப்பட்டு, டிஸ்க் உள்ள பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும். அல்லது, அந்த டிஸ்க் சுற்றி வரும் தாளில் அச்சிடப்பட்டிருக்கும். இந்த தகவல்களை நீங்கள் ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.



நிச்சயம் நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் ஒரு புரோகிராமின் இந்த அவசியத் தகவல்களை வேறு யாரும் சேவ் செய்து வைக்கப்போவதில்லை. எனவே, நீங்கள் கவனம் எடுத்து மேற்கொள்ள வேண்டிய வேலை இது. எனவே, ஆக்டிவேஷன் கீ தாங்கி வரும் மின் அஞ்சலை அழித்துவிட வேண்டாம். அஞ்சல் தொகுப்பில் அதனை வைப்பதோடு, அந்த டெக்ஸ்ட்டை ஒரு பைலாக மாற்றி, நினைவில் வரும் இடத்தில் சேவ் செய்து வைக்கவும். அதே போல, இந்த தகவல்களைத் தாங்கி வரும் தாளையும் அழித்துவிட வேண்டாம். அதில் அடங்கியுள்ள கீ தகவல்களை பத்திரமாக மாற்றி அமைத்து சேவ் செய்திடவும். மறந்துவிட வேண்டாம். நீங்கள் சாப்ட்வேர் மட்டுமின்றி, அதன் கீக்கும் சேர்த்தே பணம் செலுத்தியுள்ளீர்கள். பணம் செலுத்தி வாங்கிய பொருளைப் பாதுகாப்பாக வைப்பது போல, ஆக்டிவேஷன் கீ சார்ந்த தகவல்களையும் வைத்திருக்க வேண்டும்.



ஒரிஜினல் பேக்கேஜிங்: 


m3PEFaR.jpg

ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனம் ஒன்றை வாங்கினால், அது வைக்கப்பட்டிருக்கும் ஒரிஜினல் பேக்கேஜிங் அட்டையைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் அந்த சாதனத்தில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால், அல்லது பழுது பார்க்க அனுப்புவதாக இருந்தால், ஒரிஜினல் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்புவது நல்லது. மேலும், அது அனுப்பப் பட்ட அட்டைப் பெட்டி தான், அதனைத் திருப்பி அனுப்புவதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், நீங்கள் சில்லரை வியாபாரியிடம் வாங்கி இருந்து, பொருளை அவரிடம் திருப்பி அனுப்பும் நிகழ்வில், அவர் அதனை அவருக்கு வழங்கிய பொருளை உற்பத்தி செய்த அல்லது மொத்தமாக விற்பனை செய்த நிறுவனத்திற்கு அனுப்ப, அந்த அட்டைப் பெட்டி தேவைப்படலாம்.
 


மூல துணைப் பொருட்கள்:

v2F98U0.jpg?1



மின்சக்தியைப் பெற வழங்கப்படும் கேபிள்கள், அடாப்டர்கள் மற்றும் உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட துணைப் பொருட்களை, அவற்றை உடனடியாகப் பயன்படுத்துகிறீர்களோ, இல்லையோ, பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். இவை பின் நாளில் நிச்சயம் தேவைப்படலாம். அதே போல, இந்த சாதனத்தைத் திருப்பி தந்துவிட்டு, புதிய ஒன்றை அதற்குப் பதிலாக வாங்க விரும்பினாலும், இந்த துணைப் பொருட்களையும் சேர்த்தே நாம் திரும்ப வழங்க வேண்டியதிருக்கும். வீட்டில் அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள் வாங்குவதாக இருந்தால், துணை சாதனங்கள் மேலாக, அல்லது தாள்களை இணைத்து, அந்த சாதனம் எதனுடன் வந்தது என்று குறித்து வைக்கவும்.

thanks tamilrokkers inaiyam,,,,

Download As PDF

Wednesday, February 04, 2015

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்! கணிணியில் நம்மால் ஏற்படும்

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்!
கணிணியில் நம்மால் ஏற்படும்
சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின்டெஸ்க்டாப்,எதனையும் ஏற்றுக்கொள்ளும் நம் மேஜை டிராயர்மாதிரி, குப்பை யாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில்வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதி ல்லை. இதனாலேயே விண் டோஸ் இயக்கம், “பல ஐகான் கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கி ன்றன அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன் படுத்தப்படா மல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக் குக்கொண்டு சென்று வைக்க வே ண்டும். பைல்களைஇணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையி ல், பெரும்பாலும் டெஸ்க் டாப்பி லேயே டவுண்லோட் செய்து வக்கிறோம். அவரச வழி க்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன் மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற் குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட்டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப் டாப் கம்ப்யூட்டரின் பணிமுடிந்தவுடன், அதனைமுறையாக ஷட் டவுண் செய்தி டுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்கு க் கொண்டு வருகிறோம். அல்லது கொ ண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன் , லேப்டாப் கம்ப்யூட் டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத் தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போல த் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்தி ற்கு வந்துவிடும். ஆனாலு ம் இவ்வாறு செய்வது தவறு. இத ற்கான காரணங்கள் 2. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அ ல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டுதான் இருக்கு ம். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டி ருந்தாலே , பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்துபோய், மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடை க்கும்.
இரண்டவாதாக, நீங்கள் எப்போதும் கம்ப்பயூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடி னை விரும்புவதாக இரு ந்தால், அது கம்ப்யூட்டரை ரீபூட் செய்தி டும்வாய்ப்பினையே இழக்கிறது . விண்டோஸ் சுமுகமாக இயங் க வேண்டும் என்றால், அது முற் றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3. மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:
ஒரு புரோகிராமினை இயக்க ஒவ் வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிரா மின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது அல்லது அதன் ஐகான் மீது டபிள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்க ளைவிட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவி ல், புரோகிராம் ஐகான்களை வை த்து, அதில் ஒரேஒருமுறை கிளிக் செய்வதன்மூலம் அவற்றை இய க்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்றுள்ளது. விஸ்டா மற் றும் விண்டோஸ் இயக்கத்தொகு ப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடு த்துள்ளஇடத்தில்உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி , அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தி னால், அந்த புரோ கிராம் இயக் கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இ ன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெ யிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண் +2 என அழுத்தினால், இன்டர்நெ ட் எக்ஸ்புளோ ரர் அடுத்ததாக பெயிண்ட் எனத்திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதி யானவைதான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை மற்றவர் அறியாதபடி என்கிரிபட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவி டும். இதில் டேட்டாவினை எளிதாக என் கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக் கும் போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5. கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதோதோ படங்களுடன் ஐகான் கள் தோன்றி நம்மை ஆச்சரியப்ப டுத்தும். நாம் பயன்படுத்தும்வெப் பிரவுசரிலும் இதேபோல் சிலதோ ற்றமளிக்கும் இவை தோன்றுவத ற்கு நாம்தான்காரணம் என்று உங்களுக்குத்தெரியுமா ? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய் திடுகையில், என்னஏது எனப் படிக் காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன்மூலம் அந்த புரோகிராம்க ளைத் தயாரித்த நிறு வனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம்கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம்அளிக்கிறோம். மே லும் நமக்குத் தேவைப்படாத சில இயக் கத்திற்கும் இசைகிறோம். இதுபோல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலு கைகள், நம் கம்ப் யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மைசிக்கவைக்கின்றன. எனவே, ஒரு புரோ கிராமினை இன்ஸ்டலேஷன் செய் கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண் லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகி றது என்று சரியாகப் படி த்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல் லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும்தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன் படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற் கான சாப்ட்வேர் ஒன் றை இயக்கி, குறிப்பி ட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
Download As PDF

Tuesday, February 18, 2014

உங்கள் செல் போனின் கதிர்வீச்சு “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ (சிறு பார்வை )

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள். அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.


Posted Image

இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? 


இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள். “ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்’ என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.’ என்பது. அதாவது, ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும்போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்’ அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்.’.இது, செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது. இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்’ என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது.



Posted Image

“எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது. குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு, அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது இது.

ஒவ்வொரு செல்போனும், செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள், உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை, வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன. செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து நாம் வாங்கமுடியும்.
இந்தியாவில் இந்த “எஸ்.ஏ.ஆர்.’-இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாராகும் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.

செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் துவங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும் காணவில்லை. ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Posted Image

செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வால், இந்தியாவிலும் குறைந்த எஸ்.ஏ.ஆர். மதிப்பைக் கொண்ட செல்பேசிகளின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். செல்பேசிகளை விற்கும்போது, அதில் தவறாமல் “எஸ்.ஏ.ஆர். மதிப்பு’ தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், அனைத்து செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெளிப்படையாகத் தெரியும்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, சேமிக்கும் திறன், புதிய மாடல், விலை குறைவு என பல்வேறு விஷயங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். இது நம் கடமை – உரிமையும் கூட!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே அவர்களின் டவர்களில் குறிப்பிட்ட அளவு சிக்னல்களை வெளியிடுகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களோ, ‘இந்தப் பகுதியில் சிக்னல் குறைவாக உள்ளது’ என்று வாடிக்கையாளர் புகார் அளித்தால், அடுத்த நாளே சிக்னல் பவரை உயர்த்துகின்றனர்

Posted Image

செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் சிக்னலின் அளவு 600 மில்லி வாட்ஸ் என்று இருக்க வேண்டும். ஆனால், 4,000 மில்லி வாட்ஸ் வரைக்கும் இவர்கள் சிக்னல்களை அதிகப்படுத்தி விடுகிறார்கள்! – இது தனியார் தொலைக் காட்சி நிறுவனம் சமீபத்தில் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டது.

இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையம் போன்ற பெரும் நிறுவனங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இவற்றை முறைப்படுத்த வழிவகுக்க வேண்டும். 60 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு செல்போன் டவர் மட்டுமே அமைக்க வேண்டும் என்று பன்னாட்டு விதிமுறைகள் (இன்டர்நேஷனல் நான் அயனைஸிங் ரேடியேஷன் ஸ்டாண்டர்டு) கூறுகின்றன.



nantri tamil rookers inayam,,,, 
Download As PDF

Monday, December 30, 2013

அனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்!

அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு

Posted Image

இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும்.

இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி


OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7
Processor: Intel / AMD compatible at 1 GHz or higher
RAM: 512 MB or higher
 இருக்க வேண்டும் 

அனைவருக்கும் பயன்படும் இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி வைத்துக்கொள்வதன் மூலம், இலகுவாக அனைத்துவிதமான கோப்புக்களையும் வாசிக்க முடியும்!

உதாரணமாக : DjVu , XML, JBIG2 ,TIFF, PDF, DjVu, XPS, JBIG2, WWF , FB2, TXT, Comic Book Archive (CBR or CBZ), TCR, PalmDoc(PDB), DCX மற்றும் BMP, PCX, JPEG, GIF, PNG, WMF, EMF, PSD கோப்புக்கள். 


Download free STDU Viewer (2.5 MB)


Download free portable STDU Viewer (3 MB)



Download MSI installer (3 MB)
 

நன்றி தமிழ் ராகேர்ஸ்இணையம் 
Download As PDF

Tuesday, December 24, 2013

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா?

Posted Image


உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா? கவலையை விடுங்கள். இலகுவாக கண்டுபிடித்து விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.

குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம்)

உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?

வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம் அல்லவா? நான் சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும் உங்களுக்கு, இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்

குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே

ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு செல்லவும்


https://www.google.c...vicemanager?u=0 

உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப் யிலும் வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம்.

அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்! 

நன்றி தமிழ் ராக்கெர்ச் இணையம் 
Download As PDF

Sunday, September 08, 2013

இப்பொழுது கைபேசிகளிலும் தமிழில் எழுத (செல்லினம்) என்ற மென்பொருளை பயன்படுத்தி பயனடையுங்கள்


(அண்ட்ரோய்ட் இயங்குதள கைபேசிகள், டப்லெட்ஸ்)https://www.facebook.com/photo.php?fbid=10151545288757473&set=a.10150173484532473.293547.141482842472&type=3&theater
அண்டிராய்டு கருவிகளில் செல்லினம் எப்போது செயல்படும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் உங்கள் கருவிகளில் செல்லினத்தை இலவசமாகவேபெற்றுக்கொள்ளலாம்!

2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக ஒரு மாபெரும் நிகழ்ச்சியின் வழி வெளியிடப்பட்டது. ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டக் கருவிகளில் மட்டும் இயங்கி வந்த இந்தச் செயலி, 2009ஆம் ஆண்டு ஐ-போனில் மறுவடிவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு டிசம்பரில் எச்.டி.சி. நிருவனம் தனது ‘எக்ஸ்பிளோரர்‘ கருவியில் செல்லினத்தின் கூறுகளான இணைமதி எழுத்துருவையும் மற்றும் அஞ்சல், தமிழ்-99 விசைப்பலகை அமைப்புகளைக் கொண்ட உள்ளீட்டு முறைகளையும் கருவியிலேயே சேர்த்தது. இன்று அண்டிராய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள் தாங்களே தங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள கூகல் பிளேஸ்டோரில் செல்லினம் வெளியீடு காண்கிறது.

முழுமையான செயல்பாட்டுக்கு அண்டிராய்டு 4.1ஆம் பதிப்பு (ஜெலி பீன்) தேவைப்படும். இருப்பினும் எச். டி. சி. மற்றும் சம்சுங் போன்ற கருவிகளில் முந்தைய பதிப்புகளிலும் தமிழ் சரிவர இயங்குவதால், செல்லினம் அவற்றிலும் செயல்படும். சரியான பயன்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்கும் செல்லினத்தில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் அடங்கியுள்ள முக்கியக் கூறுகள்:

சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம்
அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்-99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை
மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு
தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி – இதன் வழி கருவியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்பு

To install => https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&feature=nav_result#?t=W251bGwsMSwxLDMsImNvbS5tdXJhc3Uuc2VsbGluYW0iXQ..
for more info=> http://sellinam.com/
Download As PDF

Saturday, August 31, 2013

தமிழ் மொழியில் எழுத மிகவும் பயனுள்ள தரவிறக்க சுட்டி ( apps )


உதாரணமாக excel,word,office,data file,மற்றும் social website facebook,blogger,twitter,
உங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க


நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் computerல் கீழே கொடுத்துள்ள லிங்கை டவுன்லோட் செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யவும்,பிறகு உங்கள் கணிணியின் கீழ் உள்ள language பாரெய் கிளிக் செய்து தமிழ் என்று மாற்றினால் போதும் 
எளிய முறையில் தமிழில் எழுதலாம். 
http://www.google.com/intl/ta/inputtools/windows/
Download As PDF

Saturday, April 27, 2013

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி


ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU,,,

http://www.consumer.tn.gov.in/ 

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் 

வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக

ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் 

தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 

வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த 

கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான 

இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற

 வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு 

அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு

 நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது

. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் 

நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு 

அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/என்ற 


பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 

‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை

 பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்ப

ட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற 

தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய 

தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் 

என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். 

இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில 

நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் 

கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் 

பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் 

கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி

கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப்

 பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் 

கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம்

 செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் 

கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை 

பெரிதும் வரவேற்கின்றனர்.
 photo newnew.gif
Download As PDF