Wednesday, March 09, 2016

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறுகள் குடியுங்கள்,,,,,

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி பயன்களை பெறுங்கள்!

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.
ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை சாப்பிட்டால் பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுத்தால் உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சை சாறு
திராட்சை சாறு தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), மஞ்சள் காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சு சாறு
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்ச் சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
ஆரஞ்சு சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுத்தால் குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சை சாறு
நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற பயன்படுகிறது. எலுமிச்சை சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.
வெள்ளை வெங்காய சாறு
வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்தினாலும் மற்றும் எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

நன்றி lankasri இணையம் ,,,,,
Download As PDF

மண்ணுலக அமிர்தம் ,,, இதை எவ்வாறு பயன் படுத்தலாம்,,?

அட...தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா,,?
சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.
உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.
இதன் மற்ற பலன்கள்,
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
* அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
* மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
* தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
* மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

நன்றி lankasri இணையம் ,,,
Download As PDF

Friday, January 08, 2016

ஒயின் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமா?




wine_1298908c.jpg

ஒயின் குடித்தால் முகம் பிரகாசமாக ஜொலிப்பதோடு, சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
ஒயின் கெட்ட கொலஸ்ட்ரால் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் கூறப்படுகிறது.
 
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ட்ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு ஒயின் ஏற்றதல்ல.
 
ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
 
ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது, இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
 
வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.
 
ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.
 
ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம்.
 
ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின்அனைத்து தீமைகளும் வந்து சேரும்.
 
wine_drink_002.jpg
 
ரெட் ஒயின்
 
ரெட் ஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை குறைப்பதால் மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
 
வயதான காலத்தில் கண்களில் Macular Degeneration பாதிப்பு ஏற்படுகிறது, ரெட் ஒயின் குடிப்பதால் இந்தப்பிரச்சனையில் இருந்து குணமாகலாம்.
 
heme oxygenase அளவை அதிகரிப்பதால், மூளையின் நரம்பு செல்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
 
வெள்ளை ஒயின் நுரையீரல் செயல்பாட்டிற்கு சிறந்தது மேலும் ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோய்க்கு சிறந்தது.
 
ரெட் ஒயின் enzyme SIRT1 யின் அளவை அதிகரிப்பதால், இந்த என்சைம் இன்சுலின் ஹார்மோன் அதிகரிப்பதற்கு உதவுகிறது.
 
இதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அருந்தலாம்.
 
ஸ்பெயினில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாரத்திற்கு 2 முதல் 7 கிளாஸ் ஒயின் குடித்தல் மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ரெட் ஒயின் குடலில் ஏற்படும் கட்டிகளை 50 சதவீதம் குணப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
Procyanidins என்ற ப்ளேவானாய்டு ரெட் ஒயினில் உள்ளதால் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.
 
wine_drink_003.jpg
 
ஒயின் தயாரிப்பு
 
மதுரசம் செய்ய பழங்கள், சர்க்கரை, ஈஸ்ட் அவசியம். இது புளிப்பு தன்மையை கொடுக்கும். முதலில் பழங்களை நன்றாக கழுவி சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பழங்கள் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.
 
பழங்கள் நன்கு ஊறிய பிறகு அதை கைகளால் நசுக்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
 
அது நன்கு புளித்து வரும். இதன் பிறகு அதனை வடிகட்டி மறுபடியும் மூடி வைக்க வேண்டும். இதே போல் பதினைந்து தடவை வடிகட்டி அதில் உள்ள கசடுகளை நீக்கினால், தண்ணீர் போன்ற திரவம் கிடைக்கும், அதுதான் ‘ஒயின்’.
Download As PDF

Thursday, December 17, 2015

மருத்துவ செய்தி ; தினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்!

 

பால் மற்றும் மஞ்சள் நம் உடலில் சேரும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மஞ்சளில் உள்ள சத்துக்கள்
மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்
மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது.
பாலில் உள்ள சத்துக்கள்
பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 உள்ளது.
இந்த இரண்டினையும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
மருத்துவ பயன்கள்
1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.
2. மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.
3. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
4. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
5. மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.
7. மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
8. முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் (Radicles) சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
Download As PDF

Wednesday, September 30, 2015

சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், சரிவிகித உணவு என்பது காலை மற்றும் இரவு வேலைகளில் குருணை தானியங்களில் செய்யப்படும் கஞ்சி, அடை, களி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் அதிகக் கொழுப்பு சேராதிருக்க, தோல் நீக்கிய இறைச்சியே சமச்சீரில் இடம்பெறும்.
எண்ணெயில் பொரித்த காய்கள் எதுவும் சமச்சீரில் இடம் பெறாது. ஆவியில் வேகவைத்த உணவுகளில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது மட்டுமே சமச்சீர்.
மிகவும் பொடியாக நறுக்கிய காய், கீரை, கனிகளில் சத்துக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். பெரிய அளவில் நறுக்கியதாக இருக்கும்.
உருக்கிய நெய், ஆடை, கொழுப்பு நீக்கிய நீர்மோர் நல்லவை. சப்பாத்தி குருமா, சப்பாத்தி பருப்பு, சப்ஜி சமச்சீர் உணவுதான். ஆனால், சப்பாத்தியுடன் சாஸ், ஜாம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
வயதுக்கேற்ற டயட்:
உடம்பை குறைப்பதற்காக பலரும் டயட் என்ற பெயரில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், தங்கள் வயதிற்கேற்றபடி டயட்டினை மேற்கொள்வது நல்லது.
0-1 முதல் வயது வரை:
இந்த வயதுதான் வளர்ச்சிக்கு ஆதாரம், தாய்ப்பால் அதிக ஆற்றலைத் தரும், கொழுப்பு, மாவுச்சத்து, புரதச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சாப்பிடக்கொடுக்க வேண்டும்.
1-13 வயது வரை:
வளர்ச்சிக்கு உதவும் பருவம் இது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பால் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகள் சிறுதானியம், அரிசி, கோதுமை, கேழ்வரகு, பருப்பு மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளலாம்.
14-25 வயது வரை:
எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமான உணவுகள் தேவை, உடல் வளர்ச்சிக்குத் தேவையான நட்ஸ், பயறு, பருப்பு, பால் பொருட்கள் அசைவ உணவுகளை சாப்பிடலாம்.
25 வயதுக்கு மேற்பட்டோர்:
அனைத்து உணவுகளையும் சமச்சீரான அளவில் சாப்பிட வேண்டும்.
Download As PDF

Saturday, July 25, 2015

தொட்டால் சினுங்கி: என் மனதில் தோன்றிய விந்தை கவிதை

தொட்டால் சினுங்கி:
இந்த வகையான செடியின் சிறப்பம்சமே தொட்டால் சுருங்கும் தன்மையை இயல்பாய் (வரமாய்) பெற்றிருப்பதே !

இந்த  தொட்டால் சுருங்கும் சிணுங்கியினை எனது பரியமானவர்களுடன் ஒப்பிட்டு 
என் மனதில் தோன்றிய விந்தையினை கவிதையாக வடிதுளேன் (என் மனைவிக்காக),,,

தொட்டால் சினுங்கி !
 உன்னை தொட்டால் மட்டும் சுருங்கும் சினுங்கி !!
ஆனால் என்னை தொட்டாலும் சுருங்கும் என் வீட்டுச்சினுங்கி !!!

                                                                                 சிவசுகு (சுகுவள்ளி),,,
Download As PDF

Tuesday, July 21, 2015

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள். ஒரு பார்வை

தேங்காய்ப்பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.




தேங்காய் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

விட்டமின் சி, விட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.


மருத்துவ பயன்கள்

தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.


மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.


பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


சரும எரிச்சல், சோரியாசிஸ், பாக்டீரியாக தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.


வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.


தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.


வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.


வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.


நன்றி லங்காஷிரி இணையம்...

Download As PDF

Monday, May 04, 2015

பத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை !!!

பத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்:
1 )  மூலபத்திரங்கள்
2 )  அதற்கு முன் ஆவணங்கள் நகல்
3 )  பட்டா ( அ ) 10 ( 1 ) 
4 )  எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் அடையாள அட்டை
5 )  இரண்டு சாட்சிகள்
6 )  நடப்பு வில்லங்க சான்று

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!
பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன. இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: மூலபத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.
23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்….
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.
* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.
இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.
தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.
மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.
‘அ’ பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision) ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர் நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். நன்றி http://patta-chitta.blogspot.in/2013_07_01_archive.html பட்டாவில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி
பட்டாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்க
சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு செய்தல் ஆகியவற்றிற்கும் கட்டணம் மனு ஆகியவை பெறப்படும் அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்
அதன் அடிபடையில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் பட்டா மாறுதல் மட்டும் செய்யப்படுவதில்லை. நன்றி –
Download As PDF

Wednesday, April 22, 2015

What is the “Do Not Track” (DNT) இந்த வசதி பற்றிய ஒரு பார்வை

6iP0C86.pngபிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளம் சென்றாலும், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்திற்குச் சென்றாலும், அந்த கேமரா குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத்தான் “நம்மைப் பின் தொடரும் வழி” என்று இணைய மொழியில் சொல்கிறோம்



நமக்கு இது விருப்பமில்லை எனில், பிரவுசரில் “Do Not Track” என்று ஒரு வசதி உள்ளது. அதனை இயக்கிவிட்டால், இது போன்ற விளம்பரங்கள் நம்மைப் பின் தொடராது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், “Do Not Track” வசதியை மாறா நிலையில், சிஸ்டம் கட்டமைப்பிலேயே வைத்து வெளியிட்டது. இதனைத் தனி நபர் சுதந்திரம் விரும்பும் அனைவரும் வரவேற்றனர். ஆனால், விளம்பரத்தின் அடிப்படையில் இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இணையம் சார்ந்த தொழில் பிரிவில் இது குறித்து பல விவாதங்கள் ஏற்பட்டு, இதற்கான வரைமுறை ஒன்றை, பொதுவான இணைய அமைப்பு World Wide Web Consortium (W3C) வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

d3EpoM4.jpgஇதன் அடிப்படையில், பிரவுசர் ஒன்றில், “Do Not Track” வசதி தரப்பட்டுள்ளதா, அதனை வாடிக்கையாளர்கள் அமைத்துக் கொள்ள இயலுமா என்பதனைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதியை இயக்குவதும், நிறுத்தி வைப்பதும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தினைப் பொறுத்துத்தான் இருக்க வேண்டும் எனவும், பிரவுசரை வழங்கும் நிறுவனத்தின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வருங்கால பிரவுசர்களில் இந்த “Do Not Track” வசதி வாடிக்கையாளர்களின் விருப்பப்படி அமைக்கும் வகையில் தரப்படும் என அறிவித்துள்ளது. DNT வசதி மாறா நிலையில், பிரவுசர்களில் தரப்பட மாட்டாது. வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டரை முதன் முதலில் செட் செய்திடும்போதே, இதனையும் செட் செய்து கொள்ளலாம். அதே போல, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்துகையிலும், செட் செய்து கொள்ள வேண்டும்



SAFARI


TcTwmFQ.jpg



FIREBOX
HTaDvHY.png

நன்றி தமிழ் ரோக்கேர்ஸ் இணையம் 
  • 0

Download As PDF

Saturday, April 11, 2015

தமிழ் நாட்டின் பயனுள்ள இணையதளங்கள்...! நண்பர்களான உங்களுக்காக !!!


பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic....chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic...._ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet...n/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in...forms/birth.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in...t-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in...cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketc...in/TNSTCOnline/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.i...iles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/...ter-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcm...king/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost...n/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in...employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in...orms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in...nkloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in...fareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in...rms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in...rms/pdf-oap.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in...df-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet...orms/appln3.doc
http://www.tnreginet...ication_Tamil.…
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in...ta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agric...53oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/On...ietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agric...aders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/…/dat...ons-farmers-a…/
6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.go...price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்
http://services.indg...ather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech....i_index_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisne...ityReports.php…
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech....biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech....harvest_ta.html
5) உயிரி எரிபொருள்
http://www.agritech....o_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech....di_farm_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech....susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech....m_enter_ta.html
4) ஊட்டச்சத்து
http://www.agritech....trition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech....nnovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov....mes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech....schemes_ta.html
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech....extnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech....dit_bank_ta.htm
5) பயிர் காப்பீடு
http://www.agritech....rop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech....kvk/kvk_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech....ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech....n/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech....mdg/mdg_ta.html
11) கேள்வி பதில்
http://www.agritech..../ta/faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech....publish_ta.html
O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலை
http://www.agritech....i_index_ta.html
2) வேளாண் பொறியியல்
http://www.agritech....g_index_ta.html
3) விதை சான்றிதழ்
http://www.agritech....ation_index_ta…
4) அங்கக சான்றிதழ்
http://www.agritech....m_index_ta.html
5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech....i_index_ta.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech....h_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg...ather-forecast/
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisne...ilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in...forms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn....rievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in.../taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn....e_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/...sportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn....artNoListAct.do




நன்றி 
தமிழ் rokkers இணையம் ,,,,

Download As PDF