Saturday, August 31, 2013

தமிழ் மொழியில் எழுத மிகவும் பயனுள்ள தரவிறக்க சுட்டி ( apps )


உதாரணமாக excel,word,office,data file,மற்றும் social website facebook,blogger,twitter,
உங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க


நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் computerல் கீழே கொடுத்துள்ள லிங்கை டவுன்லோட் செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யவும்,பிறகு உங்கள் கணிணியின் கீழ் உள்ள language பாரெய் கிளிக் செய்து தமிழ் என்று மாற்றினால் போதும் 
எளிய முறையில் தமிழில் எழுதலாம். 
http://www.google.com/intl/ta/inputtools/windows/
Download As PDF

Sunday, May 12, 2013

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.


ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.


நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.


எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.


வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF

சில சம்பர்தாயமும் அதன் உண்மை விளக்கமும்


பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?
Photo: பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

புதுவீட்டில் குடியேறும்போது கோபூஜை செய்வது வழக்கம். 
இதனால் மனம் மகிழ்ந்து லட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். பசுவை வணங்கும்போது, வாசனை மலர்கள், பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து, புல், கீரை, பழங்கள் கொடுத்து பசுவை உண்ணச் செய்யவேண்டும். மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். முன்னோர் சாபம், பிதுர்தோஷம் கோபூஜையால் நீங்கும். அனாவசிய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். ஆபரணங்கள், ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். அட்சயதிரிதியை நன்னாளில் லட்சுமியின் அம்சமான பசுவை வணங்குவது செல்வத்தை வாரி வழங்கும்.
Download As PDF

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்



Photo: ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார் 

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். 

அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். 

அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். 

அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

13.05.2013 அன்று அட்சய திருதியை 

நிரஞ்சனா
விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். 

அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள்.

நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். 

அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். 

அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF

இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

முற்குறிப்பு:
இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

தடுப்பது நம்மால் முடியும்.
கொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.

Photo: முற்குறிப்பு:

இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக

தடுப்பது நம்மால் முடியும்.
கொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.
___________________________________________

சிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.

குழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.

இரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.

இது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.
அதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.

மருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே. 

இதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:

எப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.

அது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம். 
. 
ஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.

பிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).

அது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.

அந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.

இது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது. 
இருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.

திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்: 

முதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள். 

அதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும் அவ்வாறுதான் இருக்கிறது.

வாழ்க்கையை ரசிக்க வேண்டும்தான்.
ஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.


from   Yesses Bee's
___________________________________________

சிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.

குழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.

இரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.

இது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.
அதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.


மருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே.

இதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:

எப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.

அது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம்.
.
ஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.

பிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).

அது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.

அந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.

இது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது.
இருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.


திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்: 
முதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள்.

அதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும்
அவ்வாறுதான் இருக்கிறது.

வாழ்க்கையை ரசிக்க வேண்டும்தான்.
ஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.


நன்றி நகரத்தார் Facebook page 
Download As PDF

Tuesday, April 30, 2013

பானகம்:-மற்றும் , BUTTERMILK. நீர்மோர்.



தேவையானவை:-

வெல்லம் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சுளை ( விரும்பினால்)
தண்ணீர் - 1 லி

செய்முறை:-
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளி சேர்ப்பதாக இருந்தால் இந்தத் தண்ணீரில் புளியையும் போட்டுக் கரைத்து வடிகட்டலாம். எலுமிச்சைச்சாறு, சுக்குப் பொடி, உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி வழங்கவும். 


PAANAGAM.  பானகம்.:-

NEEDED:-

JAGGERY - 1 CUP
LEMON JUICE - 1/2 TBLSPN,
SUKKUP PODI - 1 PINCH
SALT - 1 PINCH
CARDAMOM POWDER - 1/2 TSP
TAMARIND - 1 POD ( OPTIONAL)
WATER - 1LITRE.

METHOD:-
SOAK JAGGERY IN WATER AND FILTER IT. ( IF DESIRED SOAK AND SQUEZE THE TAMARIND IN THIS WATER . ) ADD LEMON JUICE, SUKKUP PODI, SALT, CARDAMOM POWDER. MIX WELL AND SERVE. 







நீர்மோர்

தேவையானவை:-
தயிர் - 1 கப்
தண்ணீர் - 5 கப்
ஜீரா - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
தயிரை மத்துக் கொண்டு நன்கு கடையவும். அதில் உப்பு, இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய், ஜீரகம் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வழங்கவும். தேவைப்பட்டால் ஐஸ்துண்டுகள் சேர்க்கவும்.

BUTTERMILK.  நீர்மோர்.

BUTTERMILK:-

NEEDED:-
CURD -  1 CUP
WATER - 5 CUPS
JEERA - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
CURRY, CORIANDER LEAVES - 1 TSP CHOPPED
GREEN CHILLY - ( OPTIONAL). 1 NO.
SALT - 1 TSP

METHOD:-
BEAT CURD WELL WITH A LADDLE/ MATHU. ADD SALT, HALVED GREEN CHILLY, JEERA, ASAFOETIDA POWDER, CURRY, CORIANDER LEAVES. ADD WATER, MIX WELL AND SERVE. IF DESIRED ADD ICE CUBES.

நன்றி தேனுஸ் recipe இணையம் 
 photo newnew.gif
Download As PDF

மணத்தக்காளிக் கீரை மண்டி :-



தேவையானவை:-

மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும். 
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:-
கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். 

வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.


NEEDED:-
MANATHAKKAALIK KEERAI - 1 BUNCH
SMALL ONION - 10 NOS PEEL AND HALVED
RICE WASHED WATER - 2 CUP
COCONUT - 1 TBLSPN. GROUND FINELY
OIL - 2 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
RED CHILLIE -1 NO HALVED
SALT - 1/2 TSP


METHOD:-

CLEAN, WASH AND CHOP THE GREENS. HEAT OIL IN A PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN  ADD JEERA, RED CHILLIE AND SMALL ONIONS. SAUTE FOR A MINUTE THEN ADD THE GREENS. SAUTE FOR ANOTHER 2 MINUTES THEN ADD THE RICE WASHED WATER. BRING TO BOIL AND SIMMER IT FOR ANOTHER 5 MINUTES. ADD THE SALT AND COCONUT PASTE AND REMOVE FROM FIRE.
WE CAN DRINK THIS OR CAN EAT THIS MIXED WITH PLAIN RICE. 


நன்றி தேனுஸ் recpie இணையம் 
 photo newnew.gif
Download As PDF

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

• மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
 மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

• மருந்து வாங்குவதில் ஒரு போதும் அவசரம் காட்ட‍க் கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும். 

• மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். 

• மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். 

• மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். 

• மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள். 

• மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள். 

• மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

நன்றி மாலை மலர் இணையம் 
 photo newnew.gif
Download As PDF

குடை மிளகாய் சட்னி

குடை மிளகாய் சட்னிகுடை மிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. 

தேவையான பொருட்கள்... 
குடை மிளகாய் - 2 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு- அரை ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
தனியா - அரை ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
எள்ளு - அரை ஸ்பூன் 
சீரகம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 


செய்முறை.... 
• குடை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

• கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் 

• பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும் 

• வதக்கியவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 

• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து சட்னியில் கொட்டவும் 

• சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.


நன்றி மாலைமலர் இணையம் 
 photo newnew.gif
Download As PDF

Saturday, April 27, 2013

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி


ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU,,,

http://www.consumer.tn.gov.in/ 

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் 

வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக

ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் 

தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 

வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த 

கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான 

இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற

 வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு 

அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு

 நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது

. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் 

நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு 

அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/என்ற 


பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 

‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை

 பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்ப

ட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற 

தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய 

தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் 

என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். 

இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில 

நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் 

கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் 

பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் 

கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி

கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப்

 பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் 

கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம்

 செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் 

கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை 

பெரிதும் வரவேற்கின்றனர்.
 photo newnew.gif
Download As PDF

Saturday, April 13, 2013

தமிழா! நீ பேசுவது தமிழா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன் 
 photo newnew.gif
Download As PDF

Tuesday, January 08, 2013





'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்’



இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும்

 ஒருவரை இளமை 

குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் 

நம்மாழ்வார். சிறிய 

எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே 

இல்லாமல் பல 

கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் 

பேச்சு என ஒரு 

நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''75 

வயதிலும் எப்படி 

இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார்

 நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே 


உணவு’ன்னு

 திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை 

ஆராதிக்கத் 

தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு

 அலையறாங்க. 

வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் 

வாழ்வது. இரண்டாவது

, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் 

இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி 


உணின்’ என்ற 

குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு 

இருக்கிறது. உண்ட

உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு 

மருந்து என்ற 

ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.




எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் 


தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம்.

 ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி 

உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் 

தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து

 உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் 

உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 

கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் 

உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி,

உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள்

நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, 

நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த 

நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட

 உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான்

 ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று 

சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி 

வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் 

தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல்

 தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.



அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் 


உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் 

சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை 

குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் 

குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும்.

 நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன்.

இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி 

எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் 

காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' - விழி விரியவைக்கும் அளவுக்கு

 ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி 

நீள்கிறது பேச்சு.



''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் 


செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி 

செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் 

குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை

இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். 


வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் 


கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் 

தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை 

நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் 

கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு 

வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு 

தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் 

தடுக்கக்கூடாது.



50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு 


ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது!

 அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே 

நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா

செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். 

தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.



ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் 


மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும்


, மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 

'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் 

கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது

அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் 

மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் 

சொன்னார்.



அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு


 மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக 

உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை 

உண்டாக்குகிறது.



மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு 


முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ 

என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச்

சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.



''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி 


நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை 

மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் 

கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''.


- நன்றி சக்தி விகடன்
Download As PDF