Friday, December 23, 2011

கவிதைகள்


1-
வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
அதற்கு ஒன்றுமாகி விடக்கூடாது
என்று தொடங்கிய படபடப்பு
அதற்கு ஒன்றுமாகவில்லை
என்ற நிம்மதியில் முடிந்தது
இனி கடந்து போவேன்
படபடப்பின்றி
நிம்மதியுடன்
2-
கை வருடும்போது
ஒரு குழந்தையைப் போல
அமைதியாக இருக்கும்
இந்த கூழாங்கல்
எறியும் போது
ஒரு பறவையைப் போல
பறந்து போய் விடுகிறது
3-
புல்லின் வார்த்தைகள்
பனித்துளிக்குத் தெரியும்
அதை சொல்லத் தொடங்கும் போதெல்லாம்
உலர்ந்து போய்விடுகிறது
4-
எழுதும் இந்த வரியும்
எழுதப் போகும்
அடுத்த வரியும்
எப்படி உருவாகிறது என்று
எனக்குத் தெரியாது
ஒரு வேளை
அந்த வரிகளுக்குத் தெரியுமா
எனக்குத் தெரியவில்லை என்று 
5-
ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்து
தற்கொலை செய்து கொள்ளும்
கனவை
திரும்ப திரும்ப
ஒத்திகை செய்கிறேன்
ரயிலுக்குள்ளும்
நானே இருந்து
சங்கிலியை இழுத்து விடுவதால்
கூடி வராமல் போகிறது
6-
நதி உறைந்த போது
மீன் சிலையானது
நீர் தளர்ந்து
நதியாகிய போது
நீந்த தெரியாத சிலை
மூழ்கிப் போனது
புதுப்புது மீன்கள்
கடந்து போக

----நன்றி 
தடாகம் இணையம் .
Download As PDF

Wednesday, December 21, 2011

வாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு உண்டா?


Valakkaivaruvalவாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு.  ஆகையினால் வாழைக்காயை உண்ண வேண்டாம் என்று பெரியவர்கள் கூறுவர்கள். ஆனால் மாமுனிவர்கள் அப்படிக் கூறுகின்றர்களா?
அது தான் இல்லை. வாழைக் காயை நன்றாகச் சாப்பிடு. அப்படிச் சாப்பிட்டால் - உனக்குப் பித்தத்தினால் ஏற்படக் கூடிய வாந்தியானது நின்று போகும். மனக்கவலை அதிகமாகி தன் நிலைமறக்கச் செய்யும் சித்தப் பிரமை என்ற நோய் தீரும். பித்தத்தினால் ஏற்பட்ட காய்ச்சல் அகன்று விடும்.

எந்நேரமும் வாயில் உமிழ்நீர் எனப்படும் எச்சில் சுரந்து கொண்டே இருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி உன்னை மனங்களிக்கச் செய்யும். வயிறானது கடமுடாவென்று இரைந்து மிகத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறதா? இந்த வாழைக்காயை சாப்பிடு எல்லாம் தீர்ந்து போகும்.

ஊடம்பெல்லாம் அனல் போல் கொதிக்கின்றது என்று உன் உடலின் மேல் தற்செயலாகக் கை வைத்த மற்றவர்கள் சொல்கிறர்களா?

லொக்கு லொக்கு என்று இருமி மற்றவர்களுக்கு தொந்தரவையும் எரிச்சலையும் கொடுத்து இரவிலும் தூக்கமின்றிச் சிரமப்படுகிறாயா?  உனக்கு வாழைக்காய் தான் சரி.

என் உடம்பில் இரத்தமே இல்லை. கை, கால் எல்லாம் வெளுத்துப போய் விட்டது. ஏன் கண்களைப் பார். இரத்தமில்லாத என்னுடைய நிலைமை உனக்கு புரியும் என்று புலம்புகின்றாயா? உன் புலம்பலை நிறுத்தி வாழைக்காயை சாப்பிடு.அப்புறம் பார் ஆச்சார்ப்படுவாய்.

குடலுள் பசியற்ற தன்மை இருக்கிறதா? எவ்வளவு நல்ல ஆகாரத்தை எதிரே வைத்தாலும் வேண்டாம் போன்ற ஒரு வெறுப்புத் தோன்றுகின்றதல்லவா? ஆகாரத்தின் மேல் பிரியமற்ற நிலைமை இருக்கிறதல்லவா?

அதனை மாற்றி உணவை கண்டோர் வியக்கும் வண்ணம் உள்ளே தள்ளச் செய்யும் சக்தி இந்த வாழைக்காய்க்கே உண்டு.

இப்படிப்பட்ட வாழைக்காயை இனிமேலாவது உணவில் சேர்த்துக் கொள்வதற்குத் தயங்காதீர்கள்.  சரி தானே நம்ப மாட்டீர்களா நான் சொன்னதை.

வாந்தி  பித்தம் பேதி வாய்நீர் வயிறுளைத்
லார்நதவன லங்காத மண்டாவாஞ் சூழ்ந்தேறு
செம்புனலுந் தென்புமுண்டாந் திண்டி மிகப்பெருகு
மம்புவியுள் வாழைக்கா யால்.
Download As PDF

அமுத தமிழில் பெயர் சூட்டுவோம் 2


குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :




அன்பரசி 
அங்கயற்கன்னி
அங்கயற்கரசி
அன்னக்கீளி
அறிவழகி
அருள்மொழி
அண்ணாதுரை
அருள்
அருள்மணி
அமுதவன்
அறிவழகன்
அறிவு
அழகுச்சொழன்
அகத்தியன்
அருண்மொழி
அகரன்
அம்முவன்
அமிழ்தன்
அரசு
அருளன்
அருணன்
அவனியன்
அறிவன்
அன்பன்
அமுதன்
அணுவன்
அணுவி
அணுவிழி
அணுவை
அறிவரசு
அறிவன்
அன்பன்
அன்பொழில்
அறிவுக்கனி
அறிவோசை
அன்புத்தமிழ்
அரும்பு
அகழ்விழி
அணிமாலை
அதியன்
அமிழ்தினி
அமுதினி
அரவரசன்






ஆதித்யன்
ஆதவன்
ஆதித்தமிழன்
ஆதிரை
ஆடாலன்
ஆற்றலரசு
ஆடலரசு
ஆதன்






இளவரசன்
இனியாழ்
இன்ச்சொல்
இரும்பொறை
இளங்கோ
இனியன்
இன்பன்
இறையன்பு
இறைவன்
இசைக்கோ
இசைமனி
இசைவன்
இமையன்
இசையள்
இசையன்
இனியள்
இனியன்
இசையமுதன்
இசை
இசைமொழி
இசையமுது
இன்பரசு
இனியரசு
இளவன்
இளவள்
இசைவடிவு
இசைப்பண்
இசைப்பொழில்
இசைதமிழ்
இளங்கதிர்






ஈகன்
ஈகவரசு
ஈகையரசு
ஈழமுது
ஈழமுகில்






கலைமயள்
கலையரசி
கலைக்கொடி
கயல்விழி
கண்மணி
கனிமொழி
கபிலன்
கதிர்
கலையரசன்
கலையரசு
கனியரசு
கனிமகள்
கதிர்மகள்
கதிர்மொழி
கனிமொழி
கதிரண்
கதிரணு
கண்மொழி
கலைகோ
கலைமதி
கலைமலர்
கலைப்பூ
காந்தள்
கார்முகில்
கலைமொழி
கலைக்கோ
கலையரும்பு
கவின்
கவின்மொழி
கன்னல்
கனியன்





கா


கார்முகிலன்





கு


குற்றாளன்
குழலி




மா


மாசிலா
மாதவி








மலர்விழீ
மல்லி
மணிக்கொடி
மணிபொழி
மதியழகன்
மலரவன்
மணிமாறன்




மு


முகிலன்










ஒப்பில்லாமணி






பி




பிறைசூடன்






யா



யாழ்ச்செல்வன்
யாழ்மணி
யாழினி




வி



விண்ணவன்
வினையரசு
வின்மணி  




பொ


பொண்ணி

பொன்மணி



பூ



பூங்குழலி





சொ


சொல்வளவன்




தா


தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்





செ



செந்துரன்
செந்தமிழரசன்
செல்வநிலா





தமிழரசி
தமிழ்ச்செல்வி
தமிழன்பன்
தமிழ்ழகன்
தமிழ் மணி
தமிழ்கோ
தாமரை
தவமலர்
தமிழ்மதி
தமிழமிழ்தன்
தமிழினி
தமிழமுதன்
தழலன்
தமிழ்யாழ்




தே



தேன்மொழி
தென்றல் 





சு


சுடரோள்
சுடரவன்
சுடரொளி
சுடர்மதி







உதய மனி




சீ



சீராளன்
சீர்மையன்






வை


வையை






வளர்மதி



வா


வான்மதி



வெ

வெண்மதி
வெண்நிலா








எழில்
எழிலாள்
எழிலன்
எழிற்கோ
எழில்மொழி
எழிற்பா
எழில்மதி
எழில்நிலா
எழிற்கதிர்
எழிலன்பன்




பா


பாவலன்
பாவரசு
பண்மொழி
பாமலர் 


Download As PDF

அமுத தமிழில் பெயர் சூட்டுவோம் 1

உலகின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் மாறிப் போனவை பலப்பல. மாறாதிருப்பவை ஒரு சிலவே . அவற்றுள் முன்னைப் பழமைக்குப் பழமையாய் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் இருப்பது நம் தாய்த்தமிழும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கமும் தமிழகமும் ஒத்த வளம் உடையதாய் இருந்தன. கடற்கலம் கொண்டு தமிழன் வணிகம் புரிந்தமை இதற்குச் சான்று கூறும்.

வாழ்வியல் தத்துவத்தால் வளத்தால், கல்வியால் அறிவியலால், வேளாண்மையால் பெரும் உச்சத்தில் இருந்த தமிழர் இன்று எல்லாவற்றையும் மெல்ல இழக்கும் கொள்கையர் ஆயினர் முன்னோர் தந்ததை வளர்க்க வழிகாணாவிடினும் அதனை அழிக்கத் தலைப்பட்டு இருப்பது வரலாற்றுப் பிழையாகும்.

தமிழ்க் குடும்பங்கள் இன்று தாம் யார் என அறிதலையும் உலக மாந்தரில் தமக்குள்ள  பண்டைய இடம் குறித்தும் இன்றைய இடம் குறித்தும்  சிந்தித்தலையும் செய்யக் கூடாத செயலாகக் காணுகின்றன. ஆகவேதான் தங்களின் குழந்தைகளுக்கு அடையாளங்களை அறியாது இழந்துவரும் நிலை தொடர்கிறது. 

அவற்றில் ஒன்றுதான் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்ச் சூட்டாமல் பிறமொழிக் கலப்பில் பெயர்ச் சூட்டி மகிழும் போக்கு இது மேம்போக்காய் நோக்கினும், தன் தாய்மொழியில் குழந்தைகளுக்குப்  பெயர்ச் சூட்டி  கொள்ளாத மக்களின் அறிவுடைமை, அவ்வினத்தின் பண்பாடு, மொழியின் சிறப்பு அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கின்றன அல்லவா?

‘’ ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்து விடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்’’ என்றான் இங்கர்சால்.

ஓர் இனம் எதை இழந்தாலும் மீட்டுக்கொள்ள இயலும். ஆனால் தாய்மொழியை இழப்பது என்பது இந்த உலகில் வாழ்வதற்கான வாழ்வுரிமையை இழப்பதற்கு ஒப்பாகும். பின்னர் அகதி வாழ்வே நிலையாகும். பிறரை அண்டிப்பிழைக்கும்  வாழ்வு தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் தாய்மொழியின் கூறுகள் பல்வகையால் ஓர் இனத்தின் வாழ்வியல் நிலைகள் அனைத்திலும் பரவிக்கிடக்கின்றன. தாய்மொழி அம்மொழி பேசும் மக்களின் வாழ்விட, வாழ்நில ஆவணமும் ஆகும். தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை இழக்கும் இனம் நாடோடியாய் மாறும்; ஒவ்வொரு அடையாளங்களாய் இழந்து இறுதியில் தங்களுக்கான நிலமின்றி பிறநாட்டாரை ஒண்டி அண்டி பிழைக்கும் அவலநிலைக்கே ஆளாகும்.

ஆகவேதான் உயர்நிலை கண்ட நாட்டினர் அனைவரும் தம் அனைத்து அடையாளங்களையும் தத்தமது தாய்மொழியைக் கொண்டே அமைத்து கொள்கின்றனர். அது கல்வியாயினும், நீதியாயினும், அரசாட்சியாயினும், பண்பாடு ஆயினும், பெயராயினும், தங்கள் மொழிக்கும் நிலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைக்கின்றனர்.

அவ்வகையினாலேயே தமிழர்களாகிய நாமும் நம் முன்னோடிகள் நம்மிடம் தந்துப்போன மொழியையும், நிலத்தையும், பண்பாட்டையும், காத்திட நம் தாய்மொழியாம் தமிழில் நம் குழந்தைகளுக்குப் பெயர்ச் சூட்டி மகிழ்வோம்.



குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :


பாகம் 2 பின் வருமாறு , 
Download As PDF

Tuesday, December 20, 2011

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?




உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள். தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.
 "மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.
சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
Download As PDF

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்


“தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின் டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது: வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில் 0% கொழுப்பு கொண்டது வாழை.
மாறாக அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச்(ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது.
இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஆப்பிளுடன் ஒப்பிட்டால் ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள் தான் சமம்.
ஏனெனில் ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.
வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.
Download As PDF

மழைக் கால உணவுகள்




மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
6. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
7. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
8. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
9. மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
10. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
11. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
12. மழைக் காலங்களில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
13. மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
14. அசைவ உணவாக மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
15. மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.
Download As PDF

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்




சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.
அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள்.
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லது தான். ஆனால் அதுவே அதிகமாகி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும்.
காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன் சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத் தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லது தான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.
நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.
Download As PDF

Thursday, December 15, 2011

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்



அழகிற நிறம் மற்றும் நிறைய சத்துகளை கொண்ட காய் பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
நன்றி lankasri இனணயம்.  
Download As PDF

வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு


சில சமயங்களில் நமக்கு வீடியோ பாடல்களிலிருந்து பாடல்கள் மட்டும் தேவைப்படும்.
அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலை பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் லிங்கை இதில் கொடுக்கவும்.
அதன் பின் தேவையான ஓடியோ போர்மட்டை தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான ஓடியோ போர்மட் தயாராகி விடும்.
நன்றி lankasri இணையம் 
Download As PDF

Thursday, December 08, 2011

மாரத்தான் ஓட்டம்!

"மாரத்தான்' 
என்பது ஒருவர் நிற்காமல் தொடர்ந்து 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும் போட்டியாகும். கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களாக ஸ்பார்ட்டாவும், ஏதேன்சும் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின. ஒரு சமயம் ஏதென்ஸ் நகரத்தின் மீது பெர்சியர்கள் போர் தொடுத்தனர். "மாரத்தான்' என்ற இடத்தில் போர் நடந்தது. அப்போது, ஏதேன்சு நகர தலைவன் பிற நாடுகளுக்கு தனது தூதுவனை அனுப்பி தனக்கு உதவும்படி வேண்டினான். அத்தூதுவர்களில் ஒருவன் ஸ்பார்டா நகரை கரடு முரடான பாதைகளில் நிற்காமல் ஓடி, போர் செய்தியை தெரிவித்து விட்டு, மீண்டும் போர் நடைபெறும் "மாரத்தான்' என்னும் இடத்திற்கு வந்து பெர்சிய வீரர்களை எதிர்த்து போரிட்டான். முடிவில் பாரசீகம் தோல்வியுற்றது. தன்னாடு வெற்றி பெற்ற செய்தியை தெரிவிக்க ஏதென்சு நகர் நோக்கி ஓடினான். தன்னாட்டு மக்களுக்கு செய்தியை தெரிவித்து விட்டு, மறுநிமிடம் மூச்சு திணறி தன் உயிரை இழந்தான். எனவே, தொடர்ந்து நீண்ட தூரம் நிற்காமல் ஓடும் ஓட்டத்தை, "மாரத்தான் ஓட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
 நன்றி lankasri  இணையம் 
Download As PDF

முல்லைப் பெரியாறு அணையின் உண்மை பிரச்னையும் அதன் தீர்வும்

என் இனிய நண்பர்களே வணக்கம் , 
இன்று நாம் முல்லைப் பெரியாறு  அணையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையும் அதற்க்கான தீர்வு என்ன என்பதையும் கீழே உள்ள குறும்படத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
பாகம் 1 :

பாகம் 2 :


நன்றி இந்த குறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும் , அதை வெளயிட்ட இனைய தளங்களுக்கும் .
Download As PDF