Wednesday, August 29, 2012

மென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு

உங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது.
உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.
Download As PDF

Saturday, August 11, 2012

ஆலயமாகும் வீடு



வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான்.
சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.
சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம்.
அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம். வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.
மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும். வீட்டை அழகு படுத்துவதில் பிள்ளையாருக்கு அதிக பங்கு உள்ளது.பிள்ளையார் மட்டும் எந்த வடிவிலும் வேண்டுமென்றாலும் வருவார்.
அங்கங்கே பிள்ளையார் மார்டன் சிலை இருந்தால் கொள்ளை அழகுதான். ஒரு பெரிய உருளி வாங்கி வைத்து நிறைய பூக்கள் போட்டாலும் அழகாய் இருக்கும். எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்
Download As PDF

Wednesday, August 01, 2012

நிறைவான வாழ்க்கை வேண்டுமா?


ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு
செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது
திண்ணம்.
தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக்
காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம்
வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே
அபாயகரமானது.
புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய
தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல.
யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால்
அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.
ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும்
இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி
இன்பமுண்டாகும்.
சிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல்
இயற்கை.
யார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித்
தாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம்
குற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.
இருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில்
அன்னியர் தலையிடுவது அறிவுடைமையாகாது.
ஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம்
ஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.
நல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன்
வளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன்
வாழ்க்கையில் குறையேதுமில்லாமல் நிறைவே
நிறைந்திருக்கும்.
நல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம்.
பொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக்
கொண்டிருப்பான்.
-அதிவீரராமபாண்டியன்-
Download As PDF

Wednesday, July 25, 2012

வீண் பிடிவாதம் ஏன்??

     லயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்?


கோயிலுக்கு போனபிறகு வீட்டுக்கு தான் வரவேண்டுமே தவிர மற்ற இடங்களுக்கு போகக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை கோயிலுக்கு சென்று வரும் வழியில் யாரோ ஒருவர் சாலையில் நோய்வாய்பட்டு கிடக்கிறார் என்று வைத்து கொள்வோம் அவரை அப்படியே விட்டு விட்டு வீட்டுக்கு வரமுடியுமா? அப்படி வந்தால் அது மனிதாபிமானம் ஆகுமா? என்னை கேட்டால் கோவிலுக்கு போய் இறைவனை வழிபடுவதை விட திக்கற்றவருக்கு உதவி செய்வதையே கடவுள் சிறந்த வழிபாடாக எடுத்துகொள்வார் என்று சொல்வேன் 

ஆனாலும் நமது பெரியவர்கள் இப்படி சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமலா இருக்கும் எதையும் யோசித்து பேசுவதே நமது பெரியவர்களின் இயல்பாகும் அதனால் இதற்குள்ளும் நல்ல காரணம் மறைந்திருக்க வேண்டும் அதை ஆழமாக சிந்தித்தால் உண்மை தெரியவரும் 

ஆலய வழிபாடு முடித்தவுடன் நமது மனம் குழப்பங்கள் நீங்கி மிகவும் தெளிவாக இருக்கும் நான் படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை இதயம் முழுவதும் வியாபித்து இருக்கும் அந்த தெளிவோடும் நம்பிக்கையோடும் நேராக வீட்டிற்கு வந்தால் வீட்டில் காத்திருக்கும் பிரச்சனைகளை சிக்கல்களை மன தைரியத்தோடு எதிர்கொள்ளலாம் அல்லது நம் மனதில் இருக்கும் சாந்தி வீட்டில் உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளலாம் மாறாக வேறு எங்கோ செல்வோம் என்றால் ஆலயத்தில் பெற்ற நல்ல சிந்தனைகள் தடமாறி போக வாய்ப்புண்டு அதை தவிர்க்கவே நேராக வீட்டிற்கு வாருங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கலாம்.

எனவே சாதரணமான நேரங்களில் பெரியவர்கள் சொன்னப்படி வீட்டிற்கு வந்துவிடலாம் தவிர்க்க முடியாத காரியங்கள் நம் முன்னால் இருக்கும் போது வீட்டுக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை சிலர் இந்த மாதிரி விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடித்து அவசியமான அவசரமான காரியங்களை செய்யாமல் இருப்பது தவறு மட்டுமல்ல அறியாமையும் ஆகும்.
Download As PDF

Sunday, July 22, 2012

உடல் பலம் பெற

உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும் சரியாகிவிடும்.
அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும்.
கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.
நீண்ட நாள் வியாதியில் வாடுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும், ஆரஞ்சு தோல் சேர்த்து நீரும், தக்காளிபழ ரசமும் முன்றும் சமமாக கலந்து குடித்தால் சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.
Download As PDF

Sunday, July 01, 2012

பெண்ணைத் தாயாகப் பாருங்கள-(அமிர்தானந்தமயி)



ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது (அதாவது ஆண்
பெண்ணையும், பெண் ஆணையும்) நம்மையறியாமலே அப்படியொரு
உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம் தான். மழை இலேசாய்
பெய்தால் தரை ஈரமாகிறது, அதே மழை பலமாக பெய்துவிட்டால் தரை
சகதியாகி விடுகிறதில்லையா?
சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
பழக வேண்டும்.
எவ்வளவுதான், எச்சரிக்கையாக இருந்தாலும், இடறி விழுகிற
சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்யும். அவரவரின்
புறத்தோற்றங்களில் ஈடுபடாமல், உன்னதமான அம்சத்துக்கு
முக்கியத்துவம் தர வேண்டும். அந்நிலையில் ஒவ்வொரு
பெண்ணையும் இறைவியின் வடிவமாகவே பார்க்க வேண்டும். பெண்ணை
வெறும் பெண்ணாக மட்டுமே பார்க்கிறபோது நீங்கள் தவறான
பாதையில் கால் வைத்து விடுகிறீர்கள்.
ஒரு ஆண் சாதகருக்கு பரம எதிரி பெண், ஒரு பெண்
சாதகருக்கு பயங்கர எதிரி ஆண். அதுமட்டுமல்ல, பெண்
இயற்கையில் பலவீனமானவள். ஆனால், பல நற்பண்புகளை வளர்த்துக்
கொண்டு ஆணை விடத் திடமானவளாகி விடுவாள்.
பாலுணர்வைக் கடந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
இருக்கிறது. லட்சியத்தில் ஒரு பெண் தன்னை காம
விவகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.
Download As PDF

Monday, June 18, 2012

ஜிம்முக்குப் போக சரியான வயசு


ஜிம்முக்குப் போக சரியான வயசு


உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. ஆனால், 'ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம். உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. 
சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட் மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற்போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப்டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள். 

18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது மிகவும் நல்லது!
Download As PDF

Friday, June 15, 2012

எனக்குள்ளும் ஒருவன்


எனக்குள்ளும் ஒருவன்


நான் ஜதார்த்தவாதியாம்
சுயநலவாதியாம் - இல்லை
நான் நடைமுறைவாதியடா 
என்னை வாழவிடு


மனிதமே..!!!
மேவிய இரு
பனிக்கட்டிகளுக்குள்ளும்
துடிக்கிறது ஒரு நுண்ணுயிர்
நீல வானச் சுவர்
எல்லை கடந்து - எனை
அழைக்கிறது ஓர் கூக்குரல்
எனக்குள்ளே ஒருவன்
அவன் கைகாலிழந்து
முடமாகிப் போனவனா - இல்லை
இதயமிழந்தவன்
இரக்கமிழந்தவன்
பெண்ணின்
அந்தரங்கப் படுசுடுகாடு
தனித்து நான்
பிணமாகிப் போனேன்
மரணத்தை முத்தமிட
ஓர் யுத்தம் தொடங்கப்போகிறேன்
சிரிப்பை அம்மணமாக்கி
குதூகலிக்கிறது
ஓர் காதல் நாடகம்
அழிக்கபடுகிறது
ஏதுமறியாப் பச்சைக்கரு
சந்நியாசப் பாதைவழி
நான் சறுக்கிக் கொள்வேன்
அன்றென்னை அந்நியனாய்
உணரப் போகிறது இந்தப்
பெண்கள் கூட்டம்
திருமணத்திலும்
மரண ஊர்வலத்திலும்
ஒருகிளையில் பூத்த
பூக்கள் தானே - அவை..!!
அதை அதிஷ்டம்
என்றனர் சிலர்...
தாவரங்களும்
உயிர்களாமே...?
விஞ்ஞானம் சொல்கிறது
உயிர்வதை
கொடிய பாவம்
சமயவழி காட்டியது...!!!
மூடவாழ்வின்
முட்டாள்த் தனத்தில்
மூழ்கிக் களிப்பதற்காய்
எனக்குள்ளும்
ஒரு மாற்றான்
மனது முடமாகிப் போனவன்.
நன்றி lankasri இணையம் 
Download As PDF

Friday, June 08, 2012

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு நன்கு உண்ண வேண்டும். ஆனால் அந்த உணவே அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்து விடும்.
சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டு 2-3 மணி நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்துவிடும். அப்படி பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குண்டு தான் ஆக நேரிடும்.
அந்த பசியைக் கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் பசியைக் அடக்குவதோடு, உணவுக் கட்டுப்பாட்டோடும் வைக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளானது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் ஆப்பிளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது, இதனால் வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஏனெனில் ஆப்பிளை சாப்பிடும் போது நீண்ட நேரம் மென்று திண்பதால், நம் வயிறு நிறைந்துவிடும். மேலும் இதை நாம் சாப்பிட்டால் நம் எடையும் குறையும்.
காய்கறிகள்: காய்கறிகள் உடலுக்கு மிகவும் சிறந்த அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள். அந்த காய்கறிகளில் கீரை வகைகள், முட்டைக் கோஸ், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை அதிகம் உண்பதால் பசி குறைவதோடு, உடலானது நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் காய்கறிகளை சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
வாழைப்பழம்: தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் பசி எடுக்காமல் இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது ஒரு எனர்ஜி பூஸ்டர் பழம், ஆகவே பசி வந்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் உள்ள இனிப்புப் பொருள் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இறால்: இதில் கலோரி குறைவாக இருப்பதால், பசியை நன்கு கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த இறாலை வேக வைத்து, சாஸ் அல்லது சீஸோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு, எடையையும் குறைக்கிறது.
நட்ஸ்: நட்ஸில் ஒன்றான அல்மண்ட்ஸ் மற்றும் பைனில் அதிகமாக புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
இதை காய்கறிகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். இதிலும் கலோரி குறைவாக இருப்பதால் எடையை குறைக்கவும் உதவுகிறது.
Download As PDF

Thursday, June 07, 2012

ஔவையார் (பிறரை பழித்துப் பேசாதீர்)


பிறரை பழித்துப் பேசாதீர்

* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே
அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள்
உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை
புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக
பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய
செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை
உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம்,
பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும்
இருக்காது.

* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில்
எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும்
விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை
பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை
விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.

* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக
கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி
திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை
குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க
மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார்
அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான்
வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும்
இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல்
செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.
Download As PDF

தொப்பையைக் குறைப்பதற்கான மிகவும் எளிமையான முறை




தொப்பையைக் குறைப்பதற்கான மிகவும் எளிமையான முறை இது. முதலில் தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தலையில் இரு பக்கமும் விரல்களால் தொட்டபடியே தலையை மேலே கொண்டு வந்து நன்றாக முதுகை வளைக்க வேண்டும். இந்தப் பயிற்சியினால் வயிற்றிக் மேல் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது.

இதனால் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள தசை இறுகி தொப்பை குறையும். முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஏற்றது. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து வந்தால் தொப்பையும் படிப்படியாக குறையும். மற்றும் முதுகு வலி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உடற்பயிற்சியாகும்.  
Download As PDF

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்


இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனைhttp://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.
Download As PDF

Wednesday, May 09, 2012

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்கு வயதில்லை

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் 
• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.


• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.


• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.


• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம். 

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.


யோகாவிற்கு வயதில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை நுரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

• 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். 

• 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட. பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும். 


• 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும். யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். 

• 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம். 


• 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 
Download As PDF

Monday, May 07, 2012

நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக கருத்துரைகள்


நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. 
ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! 
இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. 
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். 
சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. 
இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். 
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. 
மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. 
இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். 
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். 
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை 
சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.
நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.
ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.

உண்மையே கடவுள்.
எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை, அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். 
இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும். 

ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். 
இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். 
சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். 
உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்
Download As PDF

Sunday, May 06, 2012

பழமொழிகளின் அர்த்தங்கள், அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.


களவும்-கற்று-மற
1. களவாடுவதையும் கற்று பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்
கொள்ளப் படுகிறது.
2. தமிழ் இலக்கியங்களில் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. எனவே இதையும் குறிக்கிறது என்றும் சொல்பவர்கள் உள்ளார்கள்.
3. இப்பழமொழியின் நிஜவடிவம் ' களவும் கத்தும் மற ' என்று இருக்க வேண்டும். இதில் கத்து என்பதற்கு தமிழில் பொய் அல்லது கயமை என்பது பொருள். திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும்.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

பசி வந்தால் பற்றும் பறந்து போகும்;

பசி வந்தால் சட்டி பானையில் இருக்குற அடிப்பத்தும் பறந்து போகும்;

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! 


இப்படி நம்முடைய யூகத்துக்கு கிடைச்சதை எல்லாம் விட்டுப் பார்த்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை; கடைசில, யோசிச்சு யோசிச்சு பசிதான் வந்திருக்குன்னு சொல்லிச் சொன்னோம். அதைக் கேட்ட ஐயா அவர்கள், ஒளவையார் எழுதின நல்வழியில இருந்த ஒரு பாடலை நினைவு படுத்தினாங்க. அதுதாங்க, இந்தப் பாடல்:

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!


பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?
ஒருவர் தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். போய் என்பதே பேச்சுவழக்கில் பொய் என்று மாறி விட்டது. இந்தப் பொய்யை உண்டாக்கியது எந்த புண்ணியவானோ? தெரியவில்லை.
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)
அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.
இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.
புருசன் = கணவன்
இவை ஒத்த பழமொழிகள்:
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே,,
விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்- இதன் பொருள் தெரியுமா?
விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்? என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. சித்தம்+அப்பா என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மனம். அப்பா என்றால் தலைவன். சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன் என பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார். எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.

கல்லை கண்டால் நாயை காணோம்,
நாயை கண்டால் கல்லை காணோம்,,
சிற்பி ஒருவனின் மகன் செய்யாத குற்றத்திற்காக அரசனால் தண்டனை பெற்று சிறை சென்றான், அதை அறிந்த சிற்பி மனம் நொந்து, அரசர் வழக்கை விசாரிக்காமல், மற்றவர்கள் சொல் கேட்டு தன் மகனுக்கு தண்டனை வழங்கியதை அரசருக்கு உணர்த்த முனைபட்டார்.

சிற்ப கலைஞர் தன் கடும் முயற்சியால் நாய் இன் சிலை ஒன்றை தத்ரூபமாக அசல் நாயை போலவே செதுக்கினர்.
அதை அரசவையில் அரசருக்கு காண்பிப்பதற்காக கொண்டு செல்லும் வழியில், பலரும் "என்ன இந்த மனிதர் நாயை தோளில் வைத்து செல்கிறார்?" என்று கூறினார்கள், சிலர் இவர் வடித்த அந்த நாயின் சிலையை கண்டு இரசித்தனர்
அரசவையிலும் இதே போல் குழப்பம் ஏற்பட்டது, சிலருக்கு உண்மையான நாய் போலவும், சிலருக்கு கல்லில் வடித்த சிலை போலவும் தெரிந்தது.

"அப்போது அரசருக்கு செய்தி வந்தது, சிற்பி ஒருவர் நாயுடன் வந்து இருப்பதாகவும், கல் சிலையுடன் வந்து இருப்பதாவும் இரு வேறாக செய்தி வந்தது, அரசவையில் அதை காண எண்ணி அரசர் வந்த பொழுது, அவருக்கும் நாயாகவும், கல்லாகவும் இரு வேறு கட்சியில் தெரிந்தது "

அப்போது சிற்பி அரசருக்கு விளக்கினர் "அரசே நீங்கள் இதை கல் என்று நினைத்து பார்த்தால், உங்களுக்கு கல் ஆகவே தெரியும், நாய் என்று நினைத்து பார்த்தால் நாய் அகவே தெரியும், எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மையில் இது நாய் போன்று வடிவமைக்க பட்ட கற்சிலை, நிரபராதியான என் மகன் கூட உங்கள் கண்ணுக்கு குற்றவாளியகதான் தெரிந்து இருக்கிறன், அதை தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கிவிட்டீர்களே". என்று சிற்பி கூறிய பின்பு அரசர் தன் தவறை உணர்ந்து, பின்பு வழக்கை விசாரித்து விடுதலை வழங்கினர்"

எனவே நண்பர்களே எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, அதை வைத்து மட்டும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்து விட கூடாது, தீர விசாரிக்க வேண்டும். நாம் தவறு என்று நினைத்து பார்த்தல் தவறாதான் தெரியும், நல்லதையே நினைத்து பார்த்தல் நல்லதாகவே தெரியும்.

தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒருதடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால்
அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது.

இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்தது.

ஒரு பெரிய ஆபத்து வந்து அது சிறிய ஆபத்தாக மாறி அதிலிருந்து பிழைத்து்ககொண்டால் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.
Download As PDF

Friday, May 04, 2012

ஹெல்த் டிப்ஸ்


உடல்நலம்தொடர்பான தகவல்கள்

Download As PDF