Thursday, September 01, 2011

பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் ஆடி அமாவாசை விரதம் !


பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் ஆடி அமாவாசை விரதம் !



இறைவனின் சிருஷ்டியில் ,  எந்த நேரமும்நாளும் நல்ல நாட்களே. கிரக சுழற்சி காரணமாக , ஒரு சில தினங்களில் அந்த அருள் அலைகள்,அபரிமிதமாக வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான தினம் தான்வரவிருக்கும் ஆடி அமாவாசை. இதில் என்ன அப்படி விசேஷம் என்றுநாம் பார்க்கவிருக்கிறோம்இன்றையகட்டுரையில்.

எந்த ஒரு பெற்றோருக்கும்தன்னோட குழந்தைகளை  நல்லா கவனிக்கணும். தன்னோட சக்திக்கும் மீறி அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை இருக்கும். நூற்றுக்கு தொண்ணூத்தொம்பது பேருஅப்படித்தான். ஒன்னு ரெண்டு தவறுவதும் உண்டு. பெற்ற பிள்ளைகளைவிட தன்னோட சுயநலம் முக்கியம்னு  நெனைக்கிற பெற்றோர்களும் உண்டு. 
அப்படி கண்ணும் கருத்துமா - உசிரையே உங்க மேல வைக்கிற பெற்றவர்களை - நீங்க எப்படி கவனிச்சுக்கணும் அவங்களுக்கு வயசானாஅவங்களை கடின வேலை  எதுவும் செய்ய விடாமமருத்துவவசதிஆரோக்கியமான உணவு எல்லாம் கொடுத்து கவனிக்கலாம். 

இது உங்களை வளர்த்ததுக்கு நீங்க செய்ய வேண்டிய நன்றிக்கடன். கடமை.   ஐயாஅவங்க விதி முடிஞ்சு போச்சு. மேல போயிட்டாங்க. ... அதுக்கு அப்புறம்வீட்லே படம் மாட்டி மாலை மட்டும் மாட்டிட்டா போதாது ..! அவங்க ஆத்மா சாந்தி அடைய வைக்கணும். அவங்கபூரிச்சுப்போய் உங்களை ஆசீர்வாதம் பண்ணனும். இதுவும் உங்க கடன் தான். எப்படின்னு கேட்குறீங்களாபத்து மாசம் அம்மா வயித்துலேஇருந்தது ஒரு கடன்.  உங்க மூன்று தலைமுறையோட ஜீன்ஸ் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகுத்த உங்கள் தந்தை தாத்தா ,கொள்ளுத் தாத்தா - இப்படி உங்க முன்னோர்களுக்கும்நீங்க பெரிய கடன் பட்டு இருக்கிறீங்க .  இதை எப்படி தீர்க்கப்போறீங்கநீங்க பண்ற கர்மத்துலே தான்இந்த கடன் அடையும்.

நீங்க கடனாளியா இருந்தா - உங்களுக்கு எப்படி மனசுலே நிம்மதி கிடைக்கும்?  சரிகடன் கொடுத்தவன் - நீங்க திருப்பி கொடுக்கிறவரைக்கும் உங்களை படுத்தி எடுத்திட மாட்டாங்கநீங்க கொடுக்கலைனாஉங்க குழந்தைகளை தானே கேட்பாங்க !  இந்த மாதிரி தான் சார்பித்ரு கடனும்.  நம் உடம்பே பஞ்ச பூதங்களின் கலவை தான். நாம இயற்கையில் இருந்து எடுத்துக்கிடுறோம். என்ன ஆட்டம் போட்டாலும்ஒருநாள் இயற்கையிலேயே அடங்கி விடுகிறோம். மேல போனஆத்மா - நீங்க  கொடுக்கிற எள்ளுப் பிண்டத்துக்கு - ஆலாப் பறக்குமாம். நீங்க பிண்டத்தை ,  பஞ்ச பூதமாகிய நீரில் கரைக்கிறது அவங்களுக்கு - சரியாக மேலுலகம் சென்று அடைகிறது. நீங்க பிண்டம் கொடுக்கும்போதே அவங்க ஆத்மா நீங்க உலகத்திலே எந்த மூலைல இருந்தாலும்உங்க கிட்டக்கவே நிற்குமாம்.

இது உண்மைபொய்னு எல்லாம் மடத்தனமா ஆர்க்யூ பண்ணாம ,ஆத்ம பூர்வமா - தர்ப்பணம் பண்ணுங்க. உயிரோட இருக்கும்போது உங்க பிள்ளைகளோ இல்லை உங்க அம்மாவோ எதோ கோபத்திலேசாப்பிடாம படுத்திட்டா  , எப்படி மனசு கஷ்டப்படுறீங்களோ  , அதே அளவுஅக்கறையோட - இந்த காரியத்தையும் செய்து வாருங்கள்.  இந்த பிண்டம் - அந்த ஆத்மாக்களுக்கு சாந்தி தரும். அவங்களுக்கு வலு கொடுக்கிற மிக முக்கிய சக்தி இந்த எள் கலந்த மாவு உருண்டை. கருட புராணம் சொல்லும் தகவல்கள் கடோபநிஷத் சொல்லும் உயிரின் பயணம் குறித்த நிலையை படித்த எந்த ஒரு மனிதனும் பிற உயிர்களை வெறுக்க மாட்டான். பித்ரு தர்ப்பணம் செய்ய தவற மாட்டான்.
இன்றைக்கும் பிராமண சமூகத்தில் - பெற்றோரை இழந்தவர்கள் ,அமாவாசை தர்ப்பணம் செய்ய தவறுவதே இல்லை. நம்மில் குறைந்த பட்சம் - இறந்தவர்களின் திதி வரும் அன்னைக்கு பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும்வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு முழுவதும் கிடைக்க ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து ,மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விடஉங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை. நீங்கள் உயிருள்ள வரைஉங்கள் தாய்தந்தையரின் இறந்த திதி வரும் நாளில் மறக்காமல் ஈம சடங்குகளை குறைவற செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம்முக்கியமான காரியம் எதுவும் இல்லை. 
வாய்ப்பு இருக்கும் அன்பர்கள்நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் -தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும் நீங்கள் உணவு உட்கொள்ளும்முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால்தான்உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும்.  உங்கள் உணவை காகம் சாப்பிடும்போதுஉங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும் தன்னைப்போல விலகும். உங்கள் பின்னால்உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும்புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.
திடீர்னு இந்த விஷயத்தை இன்னைக்கு ஏன் திரும்ப எடுக்கிறேன்னா.. நாளைக்கு ஆடி அமாவாசை. சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம் ,தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. இவை ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது . அந்த வகையில் - ஆடி மாதத்திற்கும்தை மாதத்திற்கும் - வரும் அமாவாசையில் - நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜைதர்ப்பணம் செய்தாலும்அவர்களை உடனே சென்றடையும்.இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள் - இந்த ஆடி அமாவசை யன்றோ அல்லது தை அமாவாசை யன்றோ - பித்ரு பூஜை செய்து ,பிண்டங்கள் கொடுக்கலாம்.  
உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில்அதன்பின் உங்கள் குலதெய்வம் அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! உங்களுக்கு ஒரு கஷ்டம் நா உடனே ஓடி வர்றது உங்க அப்பா ,அம்மா தாத்தா பாட்டி தான். இவங்களுக்கு பலம் கொடுக்கிறது உங்கள் பித்ரு பூஜையும் தர்ப்பணமும் தான். நாளை - அமாவாசை . அதிலும் ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனிஉங்கள்கர்மங்களை முற்றிலும் அழிக்க ,  நாளை விரதம் இருந்து உங்கள்முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை. சதுரகிரியில் அதே நேரத்தில் ,சிறப்பு பூஜைகள் நடைபெறும். லட்சக் கணக்கில்  - பக்தர்கள் . நாளை நள்ளிரவு சதுரகிரியில் தங்கி அந்த பாக்கியம் அடைவர். 

உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று நீங்களும் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் !

Download As PDF

ஆன்மிகம்...கேள்விகள்???


ஆன்மிகம்...கேள்விகள்???



?????: -லர்கள் அனைத்துமே கடவுள் படைப்பில் 
புனிதமானவைகள் தான் அதில் இந்த மலர் 
இறைவனுக்கு ஏற்றது இது ஏற்காதது என்று 
பாகுப் படுத்தி கூறுவது ஏன்?  கேள்வி: தேன்மொழி, குடியாத்தம் 
லர்கள் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் பாரிஜாத மலரும் பரங்கி பூவும் ஒன்று தான். ஆனாலும் ஒவ்வொன்றின் உள்ளும் தனி தன்மை மறைந்து கிடக்கிறது இது கண்ணுக்கு தெரியா விட்டாலும் நமது அறிவிற்கும் உணர்விற்கும் நிச்சயம் தெரியும். 

ரோஜா மலரை பார்த்த உடன் வருகின்ற உணர்வு தாழம் பூவை பார்த்த உடன் வருவது இல்லை. 
 மலர்களை மலர்களாக பார்த்து பூஜை செய்வது ஒரு முறை மலர்களை மூலிகை பொருளாக உணர்ந்து புகை செய்வது வேறொரு வகை.பக்திக்காக மலரை இறைவனுக்கு சாத்துவதில் உண்மையான அர்த்தம் ஒன்று மறை பொருளாக இருக்கிறது. மலர்கள் மனித எண்ணங்களை உள்வாங்கி பிரபஞ்ச வெளியில் கொண்டு செல்வதில் வல்லவைகள்.

கடவுளின் விக்கிரகங்களின் அடியில் ஸ்தாபிக்கப் பட்ட மந்திர சக்கரங்கள் குறிப்பிட்ட மலரில் உள்ள அதிர்வுகளை ஏற்று சாதகமாக்கி கொடுக்கும்.அதாவது நீங்கள் எதற்க்காக பிராத்தனை செய்து மலரால் இறைவனை வ்ழிப்படுகிறீர்களோஅந்த எண்ணத்தை குறிப்பிட்ட மலர் நிறைவேற்றி தரும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்திற்கு இன்ன மலர் என வகுத்து கொடுத்தார்கள். 
இறந்தவர்களை புதைப்பது நல்லதா? எரிப்பது நல்லதா?
...கேள்வி : கார்த்திகேயன் , கடலூர் .

சனாதன தர்மத்தின் ஆதார தூண்களான சதுர் மறைகள் பஞ்ச பூதங்களின் இதய பகுதியாக விளங்கும் அக்னியே சகலத்தையும் தூய்மையாக்கும் என்று சொல்கின்றன.மானிட சரீரம் என்பது அழுக்கானது தான் அதாவது இந்த உலகில் அக்கினி ஒன்றை தவிர மீதம் எல்லாமே அழுக்கானவைகள் தான். 

காற்றை ஊயிர்களின் மூச்சு எச்சில் படுத்துகிறது. தண்ணீரை ஜல ஜீவராசிகள் அசுத்தமாக்குகின்றன. மண்ணை எல்லோருமே அழுக்காக்குகிறோம். ஆகாசத்தை நமது எண்ணங்களாலும் செயல்களாலும் கரைப் படுத்துகிறோம் 

அக்கினி ஒன்று தான் தன்னிடம் வரும் எத்தகைய அசுத்தத்தையும் எரித்து சாம்பலாக்கி தனது தூய்மை கெடாமல் பார்த்து கொள்கிறது. 
அதனால் தான் வேதங்கள் மனித உடல் உட்பட அனைத்தையும் நெருப்பில் ஆகுதியாக்குங்கள் என்று சொல்கிறது. சடலங்களை புதைப்பது என்பது கூட பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடு கலக்க செய்வது தான். எரிக்கும் பழக்கத்தை விட புதைக்கும் பழக்கம் காலத்தால் முற்பட்டது தான். நமது இந்து தர்மத்திலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது தான். ஆனாலும் வேத நெறி என்பது உடல்களை சிதைவைப்பதையே சரி என்று சொல்கிறது. உலக நடை முறையில் புதைப்பதை விட எரிப்பது தான் சகல கோணங்களிலும் சிறந்தது. 
Download As PDF

மன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகிழுங்கள்


மன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகிழுங்கள் -5

குறைகளை மன்னிக்க கற்றுக்கொள்வோம்., மனம் மகிழ்வுடன் வாழ வகை செய்வோம் !!!

மன்னிக்க மறுப்பதன் மூலம்   நாளுக்கு நாள் நமக்கு அதிகப்படியானமனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம். மனம் மகிழுங்கள் -

வலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ முக்கியமான மற்றொரு சமாச்சாரம் உண்டு.மன்னிப்பு! இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரிஅவன்முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”  பரிச்சயமிருக்கிறதா?வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கியஉள்ளர்த்தம் என்ன தெரியுமாபிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்கமறுக்கிறோம். மட்டுமல்லாமல், “எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதைநிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன். இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்குவசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம்.

இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.
உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் - மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்லஉங்களுடைய பிரச்சனை! என்ன ஸார் இப்படிச் சொல்றீங்கஅவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்?முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமாநாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் சோற்றைத் தின்றோமாடிவியில் ஸீரியலைப் பார்த்தோமாஎன்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கமனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.
உங்களுக்கு நீங்கள் முக்கியம்உங்கள் ஆரோக்கியம் முக்கியம்உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால்அவரை மன்னிக்க வேண்டும். ஏன்அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும். பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்திஉங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமாநீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.
பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டுஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது - பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்.. 
உண்மையாய் மன்னிப்பதென்பது நம்அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே!மன்னிப்போம்மறப்போம்.” அவர்களுக்குஎப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதைமறப்பதுமாகும். அதுவே மேன்மை.  யாரிடம் தவறில்லை? நாமெல்லாம்வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்கற்றதுபெற்றது என்றதன்அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவுசிலாக்கியமாய் வாழ முயன்றுகொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்;தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம்சில சமயம்முட்டாள் தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவை னைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?
புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வ தென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம். மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும். அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியைஅக்கிரமத்தைஅட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி,அக்கிரமம்அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டியிருக்கும்  விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.
சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி.  இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ். 
மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை  ஆரோக்கியமான  கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்து விட்டாலே போதும்மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது. நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?
நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித்  தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுதம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்துகொண்டிருக்கும். நான் படுகேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய்மகிழ்வாய் வாழலாயக்கற்றவன்.” உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லைஎன்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
நீங்கள் உங்களையே குற்றம் சொல்லிமன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமாஅப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற் காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.
முதலில் நீங்கள் உங்களை மன்னித்துநல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்துஉங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவுஎளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை. ..தொடருவோம்..
Download As PDF

வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை!


வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் மணலிக்கீரை!

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. 

வயிற்றுப் பூச்சி நீங்க சிறுகுழந்தைகளின் வயிற்றில் கிருமித்தாக்குதல் அதிகம் இருந்தால் அவர்கள் மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவார்கள். ஏனென்றால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் கிருமிகள் உறிஞ்சிவிடுவதே இதற்கு காரணம். இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இந்த பூச்சிகளை கொல்வதற்கு மணலிக்கீரை சிறந்த மருந்தாகும். மணலிக் கீரையை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி நீங்கும் மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும். மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.


ஞாபக சக்தியைத் தூண்ட ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

ஈரல் பலப்பட ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.
Download As PDF

பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன


பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன:


மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.

மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.

இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.

ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.

மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.

ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.
வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலாம்.
Download As PDF

பூ‌க்‌க‌ளி‌ன் மரு‌த்துவ குண‌ம்


பூ‌க்‌க‌ளி‌ன் மரு‌த்துவ குண‌ம்

* அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

* சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

* தாமரை பூ இதயத்திற்கு பலமளிக்கும். உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

* வேப்பம் பூ சிறந்த கிருமி நாசி‌னி. வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும். வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப்பூ கைக்கண்ட மருந்து.

* தூதுளம் பூ உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.
Download As PDF