Wednesday, August 10, 2011

மன அமைதி வேண்டுமா.......Author: G.R. சுப்பிரமண்யன்..


நீங்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? சில நெறிமுறைகளை நீங்கள் பின் பற்றுவீர்களானால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். பயற்சி செய்து பாருங்கள்.

1. தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மனமும் தீமை உடையதாகிவிடும்.
தீயோரைக் காண்பதும் தீது
தீயோர் சொற்கேட்பதும் தீது
தீயோடருடன் இணங்கி இருப்பதும் தீது.
நல்லோரைக் காண்பதும் நன்று
நல்லோர் சொற் கேட்பதும் நன்று
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.

2. சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்கும்.

3. உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். அதீதமான ஆசையே துன்பத்திற்கு காரணம்.
ஆசைப்படப்பட ஆய்வறும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே!

4. ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்
நீங்களே உங்களுக்கு உற்றபகை
என்ற கீதை வாக்கியத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.

5. மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத் திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்க் கொண்டே தான் இருப்பார்கள்

6. பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான்.
ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத் தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.

7. எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.

8. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இறைவனது சங்கல்பமே என்று கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாது.

9. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.

10. மனதாறப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!

11. சமமானவர்களுடன் “மைத்ரி” (சிநேக பாவத்துடன்), தாழ்ந்தவர்களிடம் கருணை, உயர்ந்தவர்களிடம் மரியாதை, தீயவர்களிடம் அலக்ஷயம் (உபேஷை) ஆகியவை சித்தப் பிரசாதத்தைத் தரும். மன அமைதியைத் தரும் என்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த குணங்களைக் கொள்ளுங்கள்.

12. மனம் போன போக்கெல்லாம் போக விடாமல், அலைபாயும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தப்பழகுங்கள். ஒரு போதும் மனம் தளர வேண்டாம். தவநெறியை மேற்கொண்டு மாபெரும் சக்தியைப் பெறுங்கள்.
மனம் தான் நம்மைத் தளைக்குள் சிக்க வைக்கிறது. அந்த மனதைக் கட்டி ஆளும் போது, அதுவே நமக்கு விடுதலையைத் தேடித் தந்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
சக்ரவர்த்தி ஏனைய அரசர்களை எல்லாம் எப்படி வெற்றி கொண்டு. தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறாறோ, அது போல உங்கள் புலன்களை அடக்கி ஆண்டு, மனதை நிலை நிறுத்தி, அமைதியால் திளைக்கச் சதா சர்வ காலமும் தியானம் செய்யுங்கள்.

13. தீய எண்ணங்களை மனதில் புக விடாமல் அணை போடுங்கள். மனதை ஒரு முகப்படுத்தி இறை தியானத்தில் ஈடுபட்டு, சச்சிதானந்த ஸ்வரூபத்தில் திளைத்து, பேரானந்தத்தில் நிலைத்திருப்பீர்களாக....
Download As PDF

மீன் வகைகள் பட்டியல்


அறுக்குளா
அவுரி - CHANNA MARULIUS
அம்புட்டன் வாழ - CHITALA CHITALA
அனுவ மீன் - DIPLOPRION BIFASCIATUM
அத்வாணி திருக்‍கை - GYMNURA POECILURA
அடுக்குப்பல் சுறா - HEMIPRISTIS ELONGATA
அவிலி (அவீலீ) - LIZA
அமட்டீகாட்டீ - MENE MACULATA
அம்பட்டண் கத்தி - NOTOPTERUS NOTOPTERUS
அதவாழன் திருக்‍கை - PISTANACHUS SEPHEN
அகலை - RASTRALLIGER KANAGURTA
அமீனீ உளுவை - RHICODON TYPUS
அடுப்பு பொறுவா - THRYSSA MALABARICA

[தொகு] ஆஆட்கான்டி - BARILLIUS GATENSIS
[தொகு] இஇருங்கெளுத்தி - PLOTOSUS CANIUS
[தொகு] ஒஒட்டி
[தொகு] ஓஓரா
[தொகு] ககட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.

கயல்
கருமுறைச்செல்வி
கருந்திரளி
கலவாய்
காரல் மீன்
காரப்பொடி

கிழக்கன்
கீச்சான் - TERAPON JARBUA
கீச்சான் -TIGERFISH
கிளி மீன்
கீரி மீன்- AMBLYGASTER CLUPEOIDES
கீளி மீன்

குஞ்சுப்பாரை
குதிப்பு - False trevally (Lactarius spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
கும்புளா
கும்டுல் - SCOPLOPSIS TAENIOPTERUS

கூந்தா
கூரல்
கெலவல்லா

கெழுத்தி - Catfish (பொதுப் பெயர்)
கெளிறு
கெண்டை - Carp (பொதுப் பெயர்)
கொடுவா - Asian seabass, called as barramundi in Australia.
கொண்டை - salmon
கொய்

கோலா மீன் - COROMANDEL FLYING FISH
கோரோவா - BLOTCHED CROAKER, NIBEA MACULATA
கோர சுறா - BROADFIN SHARK, LAMIOPSIS TEMMINCKII
கோலா -HIRUNDICHTHYS COROMANDELENSIS

[தொகு] சசங்கரா
சாம்பல் மீன் - Grey mullet
சாளை - Sardines
சிறையா

சுறா- Shark
சுதும்பு- False trevally (Lactarius spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது
சூரைமீன் - Tuna
சூடை - Sardines
சூடைவலை
செவ்விளை - Red snapper
சீலா - தென் தமிழகத்தில் Seer fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
சாதா கெண்டை - Common carp
செம்மீன் - Shrimp or prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.
சிலேபி(ஜிலேபி) - Tilapia

[தொகு] டடொல்பின் இது பாலூட்டி. மீன் அல்ல.
[தொகு] ததிருக்கை - Skates and Rays
திரளி
திமிங்கலம்- whale (பாலூட்டி. மீன் வகையல்ல)
திலாப்பியா - tilapia
தளபொத்து

[தொகு] நநவரை
நெத்திலி - Anchovy
[தொகு] பபாரை மீன்
பாலை மீன்
பால் மீன்
பளயா
புல் கெண்டை - Grass carp
பன்னா மீன்
[தொகு] மமணலை
முரல்
மண்ணா
மிர்கால், மிருகால் - Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று
மத்தி மீன்
முண்டான்
[தொகு] ரரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.
[தொகு] லலோகு
[தொகு] வவஞ்சிரம் மீன் - Seer fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது

வவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
வளையாமீன்
வாளை மீன் - Belt fish or Ribbon fish.
விளை - Emperor fish
விரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
விலாங்கு - Eel
வெள்ளிக் கொண்டை - Silver carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
வெள்ளைக்கிழங்கா
வெள்ளை அரிஞ்சான் - CIRRHINUS CIRRHOSUS
வெள்ளி அரிஞ்சான் - ENCHELIOPHIS HOMEI
வாளை மீன் - SWORD-FISH
Download As PDF

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?


மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்

உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்
மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" அல்லது அம்மா, அப்பா என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம். தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்
எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் உயிரினம் - கொசு
பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
Download As PDF

உன்னை விட்டு விலகினால் கடவுகளைக் காணலாம்...


ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? 
கடவுளைக் காண போகிறேன் ! 
எங்கே ? கோவிலில் !
 அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! 
அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! 
எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை.
அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன்.
நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? 
அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?
தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும்.
அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார்.
நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!
ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை !
 அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு !
 யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான்.
அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான்.

 ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ?
 வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! 
அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன்.

ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
Download As PDF

Tuesday, August 02, 2011

மனைவியை மயக்க…!

 பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். 
அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.

இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
      வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
      இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
      மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`    ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
     நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
      நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்
       பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
      வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
      அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
       எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை
Download As PDF

நன்மைகள் வளர


நன்மைகள் வளர கீழே உள்ள கவிதையை படியுங்கள் :

எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!
முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !
சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!
கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!
நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்!
எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
Download As PDF

நவீன நாகரிக உலகில்

 சர்க்கரை பாதிப்புக்கு செலவில்லா மருத்துவம்..!

     நவீன நாகரிக உலகில், 'சம்பாதிப்பதில் பாதிக்கு மேல் மருந்து மாத்திரைக்கே கொடுக்க வேண்டி இருக்கிறதே!’ என்பதுதான் பலருடைய புலம்பலாக இருக்கிறது.
''இதுபோன்ற செலவு களைக் குறைக்க, 'மருந்தே உணவு, உணவே மருந்து’ என்கிற வாழ்க்கை முறையே சிறந்த தீர்வாக இருக்கிறது'' என்கிறார் ஆற்காட்டைச் சேர்ந்த சித்த மருத்துவ டாக்டர் மகேஸ்வரன். நீரிழிவு நோய்க்கான செலவில்லா மருத்துவம் பற்றி இங்கே விவரிக்கிறார்.
''காலையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ள சர்க்கரை நோயாளிகள் அதற்குப் பதிலாகக் கேழ்வரகு, கம்பு சம அளவு எடுத்து அரைத்து மாவாக்கி கூழ் போல் சமைத்துச் சாப்பிடலாம். இந்தக் கூழின் அளவை மட்டும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு, அதனோடு ஓரிரு இட்லி அல்லது தோசையைச் சாப்பிட்டால் காலை டிபன் ஓவர்! மளிகை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நவதானிய பாக் கெட்டில் இருந்து ஒரு கைப்பிடி தானியம் எடுத்து பருத்தி துணியில் கட்டி தண்ணீர் தெளித்து 48 மணிநேரம் ஏதாவது பிடிமானத்தில் தொங்கவிடவும். பின்பு முளை கட்டி இருக்கும் அவற்றை பச்சையாக அப்படியே சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதோடு உடலுக்குச் சத்துகளும் கிடைக்கும். இப்படிச் சாப்பிட விரும்பாதவர்கள், பல் வலிமையாக இல்லாதவர்கள் இந்த நவதானியங்களை மொத்தமாக முளை கட்டி, அதனை வெயிலில் காய வைத்து கஞ்சி அல்லது கூழாகக் காய்ச்சியும் சாப்பிடலாம்.

     சம்பா கோதுமையை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி ரவையாக உடைத்துக் கொள்ளவேண்டும். இதில், தினமும் ஒன்றரை கோப்பை (150 கிராம்) எடுத்து உப்புமா செய்தும் சாப்பிடலாம். அல்லது கோதுமை, ராகி, கேழ்வரகு தானியங்களை மாவாக அரைத்து தோசை சுட்டும் சாப்பிடலாம். கேழ் வரகு மாவுடன் கொத்துமல்லி, இஞ்சி, முருங்கை இலை, பூண்டு இவற்றைச் சேர்த்து அடையாக செய்து மாலை வேளைகளில் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்'' என்ற டாக்டர் மகேஸ்வரன் தொடர்ந்து,
'
     'சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக இரண்டு அவுன்ஸ் வீதம் ( ஒரு அவுன்ஸ் 30 கிராம்) தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் 'மூன்று வேளைச் சாப்பாடு’ என்ற விதியைக் கொஞ்சம் மாற்றி ஐந்து அல்லது ஆறு வேளையாக பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இப்படி இன்சுலின் சுரப்புக்கு ஏற்ப உணவைச் சிறிது சிறிதாகச் சாப்பிடும்பொழுது ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறையும்.

      தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) அதிகம் உள்ள சாதம், இட்லி, தோசை... போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்குப் பதிலாகக் கோதுமை சப்பாத்தி, கேழ்வரகு இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
குக்கர் சாதத்தில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் அதை அளவோடு பயன்படுத்த வும். சர்க்கரை நோயாளிகள் சாதத்தை வடித்து சாப்பிடுவது நல்லது. 
    
      பச்சரிசி பயன்படுத்திவருபவர்கள், புழுங்கல் அரிசிக்கு மாறினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிச மாகக் குறையும். எப்போதுமே உணவை மென்று நிதானமாகச் சாப்பிட வேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30-40 நிமிடங்கள் துரிதமான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலில் உள்ள தேவையில்லாத கலோரி களை குறைக்க உதவும். சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து சிறிய நடைப்பயிற்சி, வீட்டு வேலை செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

     மட்டன் - சிக்கன் ஃபிரைட் ரைஸ், பீட்ஸா, பர்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவு களைத் தவிர்ப்பதோடு உப்பு, காரம், எண்ணெய் ஆகிய வற்றையும் குறைத்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது!'' என்றார்
Download As PDF

Monday, August 01, 2011

மன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகிழுங்கள்


குறைகளை மன்னிக்க கற்றுக்கொள்வோம்., மனம் மகிழ்வுடன் வாழ வகை செய்வோம் !!!
மன்னிக்க மறுப்பதன் மூலம் நாளுக்கு நாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம். மனம் மகிழுங்கள்:

கவலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ முக்கியமான மற்றொரு சமாச்சாரம் உண்டு. மன்னிப்பு! “இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.” பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல், “எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.” இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம்.
இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.
உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் - மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை! “என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.
உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும். பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா? நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.
பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது - பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..
உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை. யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம், சில சமயம் முட்டாள் தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவை அனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?
புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வ தென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம். மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும். அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டியிருக்கும் விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.
சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.
மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்து விட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம். இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது. நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?
நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.” உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற் காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.
முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை. ..தொடருவோம்..
Download As PDF

தமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்


தமிழர் திருநாளான பொங்கலன்று தமிழ்க்கடவுளாம் வயலூர் முருகனை வணங்குவோமா!

தல வரலாறு: 
     சோழ மன்னன் ஒருவன் வேட்டையாடச் சென்றபோது, இங்கு ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததை கண்டான். ஆச்சரியத்துடன் அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. ஆச்சரியமடைந்த மன்னன், அதனடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டினான். அம்பாள் சிலை வடித்து "ஆதிநாயகி' என அழைத்தான். வயல்கள் நிறைந்த இந்த தலத்திற்கு "வயலூர்' என்று பெயர் ஏற்பட்டது.

திருப்புகழ் தந்த திருமுருகன்: 
      திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போதும் முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. ஏமாற்றமடைந்த அவர், "அசரீரியே நீ சொன்னது பொய்யா?''என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி சொன்னது உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். உடனே முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல தலங்களுக்கும் சென்று பாடினார். இவ்வாறு, திருப்புகழ் என்ற ஒப்பற்ற நூல் கிடைக்க அருள் செய்தவர் இவரே.

எழுத்தாளர் கோயில்: 
      இது சிவத் தலம் என்றாலும், சுப்பிரமணியரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர். கந்தசஷ்டியின் போது முருகன்- தெய்வானை, பங்குனி உத்திர விழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன்,
கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள நான்கு கோயில்களின் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவார். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத்துறையில் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

வாரியார் திருப்பணி: 
      முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ல் இக்கோயிலுக்கு வந்தார். அன்று முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டிருந்தது. கவசம் சாத்த கட்டணம் ஐம்பது காசு என்ற அறிவிப்பைக் கண்ட அவர், ஐம்பது காசை அர்ச்சகரின் தட்டில் போட்டார். கோயில் நிர்வாகியின் கனவில் முருகன், ""என் பக்தனிடம் ஐம்பது காசு வாங்கியிருக்கிறாயே? அதைக்கொண்டு எனக்கு கோபுரம் கட்ட முடியுமா?'' என்று கேட்டார். மறுநாள் நிர்வாகி, கோயிலுக்கு வாரியார் வந்ததை அறிந்து, அவருக்கு ஐம்பது காசை மணியார்டர் மூலம் திருப்பி அனுப்பினார். இதையறிந்த வாரியார் வியந்ததுடன், ராஜ கோபுரம் கட்ட வேண்டும் என்பதை முருகனின் உத்தரவாகக் கருதி, பலரிடம் நன்கொடை பெற்று கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தார். சதுர தாண்டவ 

நடராஜர்: 
     இங்கு காலைத் தூக்காத நடராஜரைத் தரிசிக்கலாம். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது ஜடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு "சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர்.
விசேஷ விநாயகர்: அருணகிரி நாதருக்கு காட்சி தந்த "பொய்யா கணபதி' விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருள் கொடுப்பார். இங்கு அருணகிரிநாதருக்கு சன்னதி உள்ளது.

இருப்பிடம்: 
     திருச்சியில் இருந்து 11 கி.மீ., சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.
திறக்கும் நேரம்: 
     காலை 6- மதியம் 1 மணி, மாலை 3.30- இரவு 9 மணி. 
போன்: 0431- 260 7344.
Download As PDF

சருமம் தானாகவே புத்துயிர் பெறாது


பொதுவாக ஒருவருடைய சருமத்தின் தன்மை, அவர்கள் குடும்பத்தின் மரபு வழியில் தான் அமையும். நம் பெற்றொருடைய முகத்தில் இருக்கும் சருமகோடுகள், கண், புருவம், மூக்கு, வாய், முகச்சாயல் என்று நமக்கும் அப்படியே இருக்கும். சருமத்தைப் பேணிக் காத்தால், ஆரோக்கியம் அழகு படும். அதற்கு இன்றியமையாதவை:

சுவாசம்: 
    சருமம், நன்றாக சுவாசிக்க வேண்டும். முக சருமத்தின் வழியாக நாம் சுவாசிக்கும் போது, 7 சதவீதம் ஆக்சிஜன், சருமத்தின் வழியாக நம் நுரையீரலுக்கு செல்கிறது.
காற்று: தூய்மையான காற்று, எப்போதும் நம் சருமத்தை மலர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். கூட்டம் நிறைந்த பகுதியில் நடப்பதை விட, பசுமையான இயற்கைச் சூழலில் சுத்தமான காற்றில் நடப்பது, நம் சருமத்தை அழகாக வைத்து கொள்ள உதவும்.

உடற்பயிற்சி: 
   முறையான உடற்பயிற்சி செய்தால், நம் உடலின் அனைத்து உறுப்புகளும், மனமும் நன்றாக செயல்படும். உடற்பயிற்சி செய்யும் போது ஆக்சிஜன், உடலில் இருக்கும் செல்களின் உள்ளே சென்று, செல்களை சீக்கிரமாக வளர செய்யும்.
நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனப் பயிற்சி இவையெல்லாம், உடம்பின் ரத்த ஓட்டத்தை சீராகவும், ஜீரண சக்தியை அதிகரித்து, தோலைப் பிரகாசமாக வைத்து கொள்ளும்.

உணவுப் பழக்கம்: 
    சுத்தமான உணவை உட்கொள்வது நம் உடலுக்கும், சருமத்திற்கும் நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பயிறுகள், எண்ணெய் வகைகளில் எள், ஆலிவ், சூரியகாந்தி, பால், கோதுமை பிரெட், புட்டரிசி, சோயா மற்றும் அசைவம் சாப்பிடுபவர்கள், வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். மீன், கொழுப்பு நீக்கிய மாமிசத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

தூக்கம்: 
     நாம் தூங்கும் போது, உடம்பிலுள்ள செல்கள் புத்துயிர் பெறுகின்றன. புதிய செல்களும் முளைக்கின்றன. இவை நம் உடலை அமைதியாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

தண்ணீர்: 
    நாள் ஒன்றுக்கு, 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் நாட்களில் தண்ணீரை முகத்தில் தெளித்து கொண்டே இருந்தால், முகம் புத்துணர்வாய் இருக்கும். மிகவும் குளிர்ச்சியான தண்ணீரோ அல்லது சூடான தண்ணீரோ குடிப்பதை தவிர்த்து, நாம் இருக்கும் அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் தண்ணீர் குடிப்பது, நம் உடலுக்கு நல்லது.
Download As PDF

இதயம் காப்போம்: சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது?

தினமலரில் வந்தவை :
இதயம் காப்போம்

ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

ஸ்டேட்டின் மாத்திரை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை நன்கு குறைக்கும் மருந்து வகையை சேர்ந்தது. அதுமட்டுமின்றி ரத்தக்குழாய்களுக்கு பல வகைகளில் நன்மை தருகிறது. மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள், பக்கவாதம், வேறு ரத்தக்குழாய் நோயாளிகள், ரத்தத்தில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளவர்கள் அவசியம் ஸ்டேட்டின் வகை மாத்திரையை எடுத்தாக வேண்டும். ஸ்டேட்டின் மாத்திரை எடுப்போரில் மிக குறைந்த அளவினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் என்பது உண்மையே. ஆனால், ஸ்டேட்டின் மாத்திரையால் கிடைக்கும் நன்மை அதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, நீங்களாக ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்தக் கூடாது.

எனக்கு 16 வயதாகிறது. எக்கோ பரிசோதனை செய்ததில்,"ஃச்ணூஞ்ஞு Mதண்ஞிதடூச்ணூ ங.கு.ஈ' என்ற ஓட்டை இருப்பதாக வந்துள்ளது. எனக்கு ஆபரேஷன் தேவையா அல்லது தானாகவே சரியாகி விடுமா?
ங.கு.ஈ., என்பது ஙஞுணtணூடிஞிதடூச்ணூ குஞுணீtச்டூ ஈஞுஞூஞுஞிt என்பது சுருக்கம். இது இதயத்தின் கீழிரண்டு பாகங்களுக்கு இடையே உள்ள ஓட்டையை குறிப்பிடுவது. இது பிறவியில் இருந்தே ஏற்படும் நோய். இந்த ஓட்டை உங்களுக்கு பெரியளவில் உள்ளதாலும், உங்களுக்கு 16 வயதாகி விட்டதாலும், இனிமேல் அது, இயற்கையாக மூடுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அவசியம் ஆபரேஷன் செய்து இந்த ஓட்டையை மூடியாக வேண்டும்.

எனக்கு அடிக்கடி நெஞ்சின் இடதுபக்கம் வலி வந்து நின்று விடுகிறது. டிரெட்மில் பரிசோதனை செய்ததில் பிரச்னை இல்லை. என் டாக்டர், முன்னெச்சரிக்கையாக, அtணிணூதிச் குtச்tடிண, இடூணிணீடிஞீணிஞ்ணூஞுடூ ஆகிய மாத்திரைகளை தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
உங்களுக்கு நெஞ்சில் ஏற்படும் வலி இதய வலி அல்ல. ஏனெனில் டிரெட்மில் பரிசோதனை முடிவு நார்மலாக உள்ளது. இந்த வலி தசையில் இருந்தோ அல்லது நரம்பு வலியாகவோ, வாயு கோளாறால் ஏற்படும் வலியாகவோ இருக்கக் கூடும். எனவே, அதற்கேற்ப மருந்துகளை சில வாரங்கள் எடுத்தால் போதுமானது. இதய வலி அல்ல என்பதால் உங்களுக்கு இடூணிணீடிஞீணிஞ்ணூஞுடூ தேவை இல்லை. அtணிணூதிச் குtச்tடிண மாத்திரையை தொடர்ந்து அவசியம் எடுத்தாக வேண்டும்.

எங்கள் வீட்டில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை அடிக்கடி சமையலில் பயன்படுத்துகிறோம். இதில் எது நல்லது?
தேங்காய் எண்ணெயில் குச்tதணூச்tஞுஞீ ஊச்t என்ற கொழுப்புச் சத்து மிக அதிகம் உள்ளது. எனவே, இந்த எண்ணெயை அவசியம் சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. சமையலுக்கு சிறந்த எண்ணெயாக கருதப்படுவது ஆலிவ் ஆயில் தான். ஆனால், அதன் சுவையை நாம் விரும்பாததாலும், விலையும் அதிகம் என்பதாலும், பெரும்பாலோர் உபயோகிப்பது இல்லை. நாம் உபயோகிக்கும் எண்ணெய் வகைகளில் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவை மூன்றும் சமையலுக்கு உபயோகிக்கலாம். சமையலுக்கு எண்ணெயை தாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொரிப்பதற்காக எந்த எண்ணெயையும் பயன்படுத்தவே கூடாது. அதாவது வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அறவே தவிர்ப்பது சிறந்த உணவு பழக்கமாகும்.
Download As PDF